இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, July 3, 2014

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு

அல்லாஹ்வின் திருப்பெயரால்

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்

முகநூல்,மற்றும் இமெயில் வாசகர்களுக்கு ரமலான் பரிசுப்போட்டி

பிறை 04 (03/07/2014)கேள்விகள்

1.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரண்டாவதாக இறங்கிய (வஹீ) இறைவசனம் எது ?

2.பஜ்ர் நேரத்தில் குர் ஆன் ஓதுவதினால் என்ன சிறப்பு கிடைக்கும் என அல்லாஹ் கூறுகின்றான் ?

3.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கண் தெரியாத ஓர் சஹாபி பங்கு சொன்னார்.அவரின் பெயர் என்ன ?

நிபந்தனை
1.இப்போட்டியில் மதுக்கூர் வாசகர் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும்.

2.ஒன்றுக்கு மேற்பட்டவர் சரியான பதில் எழுதி இருந்தால் குலுக்கல் மூலமாக ஒருவர் தேர்வு செய்யப்படுவர்.

3.சரியான விடை எழுதி பரிசு பெறுபவர் வெளி ஊரில் (அல்லது) வெளிநாட்டில் இருந்தால் அவரின் மூலமாக அவரின் மதுக்கூர் முகவரி பெற்று பரிசு மதுக்கூரில் உள்ள அவரின் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்படும்.

4.இப்போட்டிக்கான கேள்வி தினமும் காலை 10:30 மணிக்கு வெளியிடப்படும்.இரவு 8 மணிவரை வரும் பதில்கள் மட்டுமே போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படும்.(அனைத்தும் இந்தியநேரப்படி)

5.இப்போட்டியினை மாற்றியமைக்க போட்டிக்குழுவினருக்கு முழு அதிகாரம் உண்டு.

6.உங்களின் பதில்களை madukkurtmmk@gmail.com என்ற இமெயில் முகவரிக்கும்,madukkurtmmk என்ற முகநூல் inboxக்கும் அனுப்பி வைக்கலாம்.

பிறை 03 (02/07/2014) ரமலான் பரிசுப்போட்டியில் வெற்றி பெற்றவர் விபரம் ....சிலநிமிடங்களில்...

அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
இஸ்லாமியப்பிரச்சாரப்பேரவை
மதுக்கூர்.தஞ்சாவூர் மாவட்டம்.
 

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...