இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, July 16, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 16
சரியான விடைகள்




1.மகாமு இப்ராகீம் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் என்ன கூறுகின்றான் ?

1) 2:125(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.

2.சுலைமான் நபியை பார்த்து எறும்பு என்ன பேசி கொண்டது என அல்லாஹ் கூறுகின்றான் ?
 27:18இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.

3.அல்லாஹ்வின் திருத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் இறுதியாக பேசிய வார்த்தை என்ன ?
 நபி(ஸல்) அவர்கள் பேசிய கடைசி வார்த்தை, 'இறைவா! உயர்ந்த தோழர்களுடன் (என்னையும் சேர்த்தருள்)" என்பதுதான். 
இதை (உர்வா(ரஹ்) போன்ற) பல அறிஞர்களின் அவையில் ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார். 

சரியான விடைகள் எழுதியவர்கள் மொத்தம் 11 நபர்கள்.1.அப்துல் ஹாலித்2.அகமது அலி3.நிஜாமுதீன் ஜமால்,4.ஜியாவுல் ஹக்,5.முகம்மது சுல்தான்,6,செய்யது இப்ராகீம்,7 அஜீம் அகமது,8 ஜவஹர்,9நிசார் அகமது,10 முகம்மது தாஹா,11 அல்பாஸ் இவர்களின் குலுக்கல் மூலம் சகோதரர் முகம்மது சுல்தான் அவர்கள் பரிசுக்குரியவராக தேர்வு செய்யப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.


No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...