இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, July 22, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 23

1.திருடினால் தண்டனை என்ன என்று அல்லாஹ் கூறுகின்றான்.குர் ஆன் வசனம் எழுதவும்.

2.கியாத் நாளின் பெரிய அடையாளங்கள் எத்தனை ? அவை யாவை ?

3.மீன் வயிற்றுக்குள் யூனூஸ் நபி (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனை என்ன என்று அல்லாஹ் சொல்கின்றான்.

(பிறை 23 க்கான பரிசு வழங்குபவர் சகோதரர் முகம்மது தாஹா)


ரமலான் பிறை 22 சரியான பதில்கள் மற்றும் பரிசு வெல்பவர்.


1.மலையை எதற்காக படைத்ததாக அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
பூமிஉங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும்((மலைகளை), நீங்கள்வழியறிவதற்காக பல பாதைகளை யும்நதிகளையும்பல அடையாளங் களையும் அவன்அமைத்தான்நட்சத்திரத்தின் மூலம் அவர்கள் வழியை அறிந்து கொள்கின்றனர்(Al Quran 16 : 15 )
பூமி அவர்களைச் சாய்த்து விடாதிருப்பதற்காக முளைகளை (மலைகளை) ஏற்படுத்தினோம்.அவர்கள் வழி காண்பதற்காக பல நீண்ட பாதைகளையும் அதில் ஏற்படுத்தினோம்
( Al Quran 21 :31 )

நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான்உங்களைச் சாய்த்துவிடாதிருக்க பூமியில் முளை களைப் போட்டான்.  அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச்செய்தான்வானிலிருந்து தண்ணீரை இறக்கினோம்அதில் மதிப்பு மிக்க ஒவ்வொரு வகையையும்முளைக்கச் செய்தோம்.(Al Quran 31 :10)


2.எந்த ஐந்து விஷயங்களை அல்லாஹ்வை தவிர வேறுயாரும் அறிய முடியாது என அல்லாஹ் கூறுகின்றான்.
நிச்சயமாக அந்த (கியாமநேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறதுஅவனேமழையையும் இறக்குகிறான்இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான்.நாளை தினம் தாம் (செய்வதுசம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லைதான் எந்தபூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லைநிச்சயமாக அல்லாஹ்தான்நன்கறிபவன்நுட்பம் மிக்கவன்.(Al Quran 31:34)

3.ரமலானில் செய்யப்படும் உம்ரா எதற்கு நிகரானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 1863. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நூல்:புகாரி
நபி(ஸல்) அவர்கள் தம் ஹஜ்ஜை முடித்துத் திரும்பியபோது உம்முஸினான் அல் அன்ஸாரியா என்ற பெண்மணியிடம், 'நீ ஹஜ்ஜுக்கு வர என்ன தடை?' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, 'என் கணவரே காரணம்; அவருக்கு தண்ணீர் இறைக்கும் இரண்டு ஒட்டகங்கள் இருந்தன. ஒன்றில் ஏறி அவர் ஹஜ்ஜுக்குச் சென்றார்; மற்றொன்று எங்களுக்குரிய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது; (இதுவே காரணம்)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ்ஜுச் செய்வதற்கு நிகராகும்" என்றார்கள். 

2409. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:நூல் :முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் உம்மு சினான் எனப்படும் ஓர் அன்சாரிப் பெண்ணிடம், "நீ எங்களுடன் ஹஜ் செய்வதற்கு உனக்கு என்ன தடை?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "என் பிள்ளையின் தந்தையிடம் (அதாவது என் கணவரிடம்) தண்ணீர் இறைக்கும் இரு ஒட்டகங்கள் இருந்தன. ஒன்றில் அவரும் அவருடைய மகனும் ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டனர்; மற்றொன்றில் எங்களின் அடிமை தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்கிறார்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "ரமளானில் செய்யப்படும் ஓர் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகரானதாகும்; அல்லது என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும்" என்றார்கள். 


சரியான விடைகள் எழுதியவர்கள் 1.முகம்மது பாதில்,2.ஜியாவுல் ஹக்,3.முகம்மது சுல்தான்,4.செய்யது இப்ராகீம்,5.அஜீம் அகமது,6.நிஜாமுதீன் ஜமால்,7.அபு அப்துல்லா,8.அகமது அலி,9.ரைஸ் பின் ஜமால்,10.ரியாய்தீன்.இவர்களில் செய்யது இப்ராகீம் அவர்கள் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவராக தேர்வு செய்யப்படுகின்றார்.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...