இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, July 19, 2014

.
ரமலான் பரிசுப்போடி பிறை 18 சரியான விடைகள் மற்றும் வெற்றியாளர்


1.அநாதைகளின் சொத்துக்களை விழுங்குபவர்கள் எதை விழுங்குவதாக அல்லாஹ் கூறுகின்றான் ?

  4:10. நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம்  நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.
 
2.இரண்டு முறை பிஸ்மில்லாஹ் இடம் பெற்றிருக்கும் அத்தியாயம் எது ?
 சூரத்துந் நம்ல் -எறும்புகள் (27:30)
 
3.சொர்க்கத்தில் பெண்களின் தலைவி யார் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் ?

3.  3710. அனஸ்(ரலி) அறிவித்தார்.
மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப்படும்போது உமர் இப்னு கத்தாப்(ரலி), அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) அவர்களை (அல்லாஹ்விடம்) மழை கோரிப் பிரார்த்திக்கும்படி கேட்பார்கள். (அத்தகைய சந்தர்ப்பங்களில்) உமர்(ரலி), 'இறைவா! நாங்கள் எங்கள் நபி(ஸல்) உயிருடன் இருந்த போது) அவர்கள் (உன்னிடம் பிரார்த்தித்தன்) மூலம் உன்னிடம் நாங்கள் உதவி கோரி வந்தோம். அப்போது (அதை ஏற்று) நீயும் எங்களுக்கு மழை பொழிவித்து வந்தாய். இப்போது எங்கள் நபியின் பெரிய தந்தை (அப்பாஸ் - ரலி - அவர்கள் உன்னிடம் பிரார்த்திப்பதன்) வாயிலாக உன்னிடம் (மழை பொழியும்படி) கோருகிறோம். எங்களுக்கு மழை பொழிவிப்பாயாக!" என்று கேட்பார்கள். அதன்படியே மக்களுக்கு மழை பொழிவிக்கப்பட்டு வந்தது.
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உறவினர்களின் சிறப்புகளும் நபி(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) அவர்களின் சிறப்பும்.
நபி(ஸல்) அவர்கள், 'ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவியாவார்" என்று கூறினார்கள். 


மொத்தம் 9 சகோதரர்கள் சரியான பதிலை எழுதியிருந்தார்கள்.அவர்களின் சகோதரர்KTM  நிசார் அகமது அவர்கள் பரிசுக்குரியவராக குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.


(பிறை 18 க்கான பரிசு வழங்குபவர்கள் சகோதரி சம்சுன்ஹார் பீவி)

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...