இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, December 31, 2014

மதுக்கூர் ஜமாத் கூட்டம்
மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி(JMEC) கூட்டம் இன்று 31/12/2014 காலை மதுக்கூர் பெரியப்பள்ளிவாசலில் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்கம்,மிப்தாஹூல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட ஜமாத் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சந்தைப்பேட்டை குத்தகை விடப்பட்டது.சந்தைப்பேட்டையினை சேட்வாவா அவர்கள் குத்தகைக்கு எடுத்தார்.பாசிப்பட்டரையினை மு.ரா.அப்துல் வஹாப் அவர்கள் குத்தகைக்கு எடுத்தார்.மேலும் பாசிப்பட்டரை சார்பாக பெரியப்பள்ளியினை இடித்து புதியப்பள்ளிவாசல் கட்ட ரூ 1 இலட்சம் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு.முதல் தவனையாக ரூ 50,0000 கொடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மணிமகுடம் வைத்தது போன்று அடுத்த மாதத்தில் பெரியப்பள்ளிவாசலை இடித்து புதியப்பள்ளிவாசல் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவது(இன்ஷா அல்லாஹ்) என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...