இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Friday, December 5, 2014

சாமானியர்களும்..ஜமாத்தார்களும்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக தலைமையின் வழிகாட்டலின்படி பாபரி மஸ்ஜித்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கவேண்டும்,அதே இடத்தில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என  வாசகம் அடங்கிய அஞ்சல் அட்டைகளை இந்தியாவின் முதல் குடிமகன் ஜனாதிபதி அவர்களுக்கு தமிழகமுழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றது.

மதுக்கூரில் இன்று ஜும் ஆ தொழுகைக்கு பின்னர் பெரியப்பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜித் இஃக்லாஸ் ஆகிய இரு பள்ளிவாசல்களிலும் அஞ்சல் அட்டை அனுப்பும் பணிகளில் தங்களை இணைத்துக்கொள்ளும் மதுக்கூர் ஜமாத் நிர்வாகிகள்,மற்றும் பள்ளி மாணவர்கள்,சமுதாய சொந்தங்கள்,தொப்புள் கொடி உறவுகள்.
மேலும் ஜனாதிபதி அவர்களுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் பணியில் விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட செயலாளர் சகோதரர் இளந்தென்றல் மற்றும் மதுக்கூர் வர்த்தகர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டார்கள்.














No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...