இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, December 18, 2014

மதுக்கூரில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக்கூட்டமைப்பு குழுவினர்

நமக்கு குடிநீரும்,உணவும் பல்லாயிரம் ஆண்டுகளாக வழங்கிய காவிரிப்படுமை இப்போது மீத்தேன் என்னும் திட்டத்தால் பேரபாயத்தில் உள்ளது என்பதை விளக்கியும்,மீத்தேன் திட்டத்தை விரட்டியடிக்கவும்,காவிரிப்படுகையினைப்படுகையைப்பாதுகாக்கவும் ஒரு கோடி கையொழுத்து இயக்கம் காவிரிப்படுகை பாதுகாப்பு பயணம் என்னும் சமூக விழிப்புணர்வு பிரச்சார பயணம் கடந்த 10/12/2014 அன்று கோடியக்கரையில் தொடங்கி தொடந்து டெல்டா மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இக்குழுவினர் இன்று மாலை 7:15 மணிக்கு மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் மீத்தேன் குறித்து அதன் மூலம் ஏற்படப்போகின்ற பேரபாயத்தை விளக்கி பேசினார்கள்.மதுக்கூருக்கு வருகை தந்த இக்குழுவினருக்கு மனிதநேய மக்கள் கட்சி மதுக்கூர் நகரம் சார்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.இக்குழுவிற்கு தலைமை ஏற்று நடத்திவரும் பேராசிரியர் அய்யா ஜெயராமன் அவர்களுக்கு மதுக்கூர் நகர மமக தலைவர் சகோதரர் ஜபருல்லா அவர்களும்,அய்யா திருநாவுக்கரவு அவர்களுக்கு மமக நகர துணைச்செயலாளர் சகோதரர் அப்பாஸ் அவர்களும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்கள்.இக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் கே.ராவுத்தர்ஷா,பேரூராட்சி உறுப்பினர் கபார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகம்மது ராசிக்,நகர பொறுப்பாளர் ராசிக் அகமது,சபீக் மற்றும் மமக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

இப்பிரச்சார பயணம்  வருகின்ற 20/12/2014 தஞ்சாவூரில் நிறைவு பெறுகின்றது.


காவிரிப்படுகை பாதுகாப்புப்பயணம் சிறப்புடன் அமையவும்,மக்கள் விழிப்புணர்வு பெறவும் பிரார்த்திக்கின்றோம்.









No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...