இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, December 22, 2014

தாவா பணியில் மணமகன்
மதுக்கூரில் நேற்று ஓர் திருமணம் நடைபெற்றது.மணமகன் பெயர் அஸ்லம் முகம்மது எகியா.இந்த மணமகன் தனது திருமணத்தன்று (நேற்று 21/12/2014) விருந்தழைப்புக்கு வந்த முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு இஸ்லாத்தைப்பற்றி சிறப்பான முறையில் அறிமுகம் செய்து வைத்தார்.மேலும் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு திருக்குர் ஆன் தமிழக்கம் மற்றும் பல தலைப்புகளில் இஸ்லாத்தைப்பற்றிய பிரசுரம்,இஸ்லாத்தைப்பற்றிய பல நூல்கள் என அனைத்தும் இலவசமாக வழங்கினார்.தாவா பணியினை மணமகனான அஸ்லம் அவர்களே நேரடியாக களத்தில் நின்று இப்பணியினை செய்தது பலரது புருவங்களை உயர்த்தியது.






இது மணமகன் அஸ்லம் அவர்களை பெருமைப்படுத்துவதற்காக பதிவு செய்யப்படவில்லை.நம்மை நாம் சுயபரிசோதனை செய்து கொள்வதற்காக குறிப்பாக நமது குடும்பத்தினருடன் கூட நம்மால் தாவா செய்ய முடியவில்லை என்ற எண்ணத்தில் பதிவு செய்யப்பட்டது.மதுக்கூரில் திருமணத்தன்று தாவா பணியில் மணமகன் ஈடுபடுவது இதுவே முதல்முறை என தெரிகின்றது.
மணமகனின் இப்பணிகள் தொய்வின்றி நடைபெற துவா செய்கின்றோம்.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...