இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, December 6, 2014

டிசம்பர் 6

மதுக்கூர் தமுமுக மற்றும் தஞ்சாவூர் மாவட்ட தமுமுக சிறப்பு செய்திகள்.

தமுமுக நகர அலுவலகத்தில் கருப்புக்கொடி

இந்திய தேசத்தின் கருப்பு தினமான பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை குறிக்கும் வகையில் இன்று காலை பஜ்ர் தொழுகையினை நிறைவேற்றிவிட்டு மதுக்கூர் நகர தமுமுக அலுவலகத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.



 தயார் நிலையில் வாகனங்கள்

தஞ்சாவூர் மாவட்ட தமுமுக சார்பாக தஞ்சாவூரில் நடைபெற இருக்கின்ற கருஞ்சட்டை ஆர்ப்பாட்டத்திற்கு மதுக்கூரிலிருந்து கலந்து கொள்வதற்காக தயார் நிலையில் வாகனங்கள்.



கருச்சட்டை சமுதாய போராளிகள்




போராட்ட களம் நோக்கி வாகனங்களில் சமுதாய பேரியக்கம் தமுமுக போராளிகள்  புறப்படுதல்.





ஆர்ப்பாட்டக்களம்

தமுமுக தஞ்சாவூர் மாவட்டம் சார்பாக பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட கருப்பு நாள் டிசம்பர் 6 இன்று காலை 12.00 மணியளவில் தஞ்சாவூர் கீழவாசல் பனகல் கட்டிடம் அருகில் மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா அவர்களின்தலைமையில்
கருப்பு சட்டை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் எம்.காதர் மைதீன் அவர்களும், தமிழ்தேசிய பேரியக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் அவர்களும்,நம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் அ.நல்லதுரைஅவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

கூட்டத்தில் ஆண்கள்,பெண்கள் மற்றும் சிறுவர்கள் என ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தினை தஞ்சாவூர் மாவட்ட பேச்சாளர் மதுக்கூர் ஃபவாஸ் அவர்கள் கோஷங்கள் எழுப்பி தொடங்கிவைத்தார்.மதுக்கூர் பேரூராட்சி உறுப்பினர் கபார் உட்பட மாவட்ட நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
தஞ்சை நகர பொறுப்புக்குழு தலைவர் சகோதரர் A.M.சித்திக் அவர்களின் நன்றியுரைவுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.
மதுக்கூரிலிருந்து ஆர்ப்பாட்டத்திற்கு வாகனம் சென்றது முதல் ஊர் வந்து சேர்ந்தது வரை காவல்துறை பாதுகாப்பு வாகனம் தமுமுகவினரின் வாகனத்த்திற்கு முன் வந்தது.







ஊர் திரும்பிய போராளிகளின் கருஞ்சட்டை படை
அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இடத்தில் மீண்டும் பாபரி மஸ்ஜித் கட்டுவோம் என தஞ்சாவூரில் நடைபெற்ற கருஞ்சட்டை ஆர்ப்பாட்டத்த்ல் சூளுரைத்து ஊர் திரும்பிய மதுக்கூர் தமுமுக களப்போராளிகள்.


No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...