இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Sunday, September 15, 2013

மதுக்கூரில் பரபரப்பு (13/09/2013)

கடந்த 12 ஆண்டுகளாக மதுக்கூரில் இந்து முண்ணனி சார்பாக விநாயகர் ஊர்வலம் நடந்தப்படுவதாகவும் 13 ஆண்டு விநாயகர் ஊர்வலம் வரும் 15/09/2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எனவும் விளம்பரம் செய்யப்படுகின்றது.இந்நிலையில் இன்று (13/09/2013) அதிகாலையில் சிலையின் தலை பகுதி உடைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகின்றது.சிலையில் சேதம் ஏற்பட்ட உடன் சங்கபரிவார்கள் இதை முஸ்லிம்கள் தான் உடைத்து இருப்பார்கள் என கூறி மதுக்கூரில் சில இடங்களில் கடைகளை அடைக்க சொல்லி உள்ளார்கள்.

சிலை சேதம் காரணமாக மதுக்கூரில் ஒருவித பதற்றம் நிலவுகின்றது.போலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளார்கள்.காவல்துறையினரின் விசாரணை தொடங்கி உள்ளதாக கூறப்படுகின்றது.காவல்துறையினர் நடுநிலையுட்ன் செயல்பட்டு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும்.விசாரணை தொடங்குவதற்கு முன்னரே இதை முஸ்லிம்கள் தான் செய்து இருப்பார்கள் என்று சொல்வது மதுக்கூரில் பரபரப்பை ஏற்படுத்தி தன்னையும்,தனது இயக்கத்தையும் வளர்த்து கொள்ள நடைபெறும் சூழ்ச்சியாகும்.
காந்தியை கொலை செய்து விட்டு முஸ்லிம்தான் கொலை செய்தார்கள் என்றும்.தனது விளம்பரத்திற்காக தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களும் செய்த வேலையாக கூட இருக்கும்.எனவே காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளை தண்டிக்கட்டும்.

பிற மத கடவுள்களை ஏசாதீர்கள் என்றும் உங்கள் வழி உங்களுக்கு அவர்களின் வழி அவர்களுக்கு  என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.அப்படி இருக்கையில் முஸ்லிம்கள் யாரும் இதுபோல் செய்யமாட்டார்கள்.சிலை வைக்கப்பட்ட சிவக்கொல்லை பகுதியில் கால்நடைகளின் நடமாட்டம் இரவு நேரங்களில் அதிகமாக இருக்கும் சிலையில் உள்ள மாலையை உண்ண முயற்சி செய்தபோது கால்நடைகள் சிலையை கீழே தள்ளிவிட்டு இருக்கலாம்.சிலர் ஊர்வலத்துக்கு கூட்டம் சேர்ப்பதற்காக செய்த வேலைகளாக கூட இருக்கலாம்.உண்மை ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும்.....
 
 
 
 மதுக்கூரில் தொடர்ந்து பதற்றம்(14/09/2013)
 
மதுக்கூரில் விரும்பதகாத சம்பவங்கள் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றுவருகின்றது.இன்று 14/09/2013 சனிக்கிழமை காலை வழக்கப்போல் பெரியப்பள்ளிவாசலின் முஅத்தீன் சம்சுதீன் அவர்கள் பஜர் பாங்கு சொல்ல பள்ளிவாசல் வந்துள்ளார்.பெரியப்பள்ளிவாசலில் ராத்தீபு  இடம் என கூறப்படும் பள்ளிவாசலின் மையப்பகுதியில் யாரே விஷமிகள் மாட்டு சணத்தை ஒரு  வாளியிலும்,பிளாஸ்டிக் பையிலும் கொண்டுவந்து கொட்டிவிட்டு சென்றுள்ளார்கள்.உடனே நிர்வாகத்தினருக்கு தகவலும் கொடுத்துள்ளார்.ஜமாத் மற்றும் சங்கங்களில் நிர்வாகிகள் பள்ளிவாசலுக்கு வந்து பார்த்துவிட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். பிறகு புகார் செய்யலாம் என ஜமாத்தார்கள் கலைந்து சென்றுவிட்டார்கள்.ஆனால் புகார் செய்யவில்லை.சம்பவம் அறிந்த சமுதாய இயக்க சகோதரர்களும் சமுதாய நலன் விரும்பிகளும் பள்ளிவாசலில் குவிந்தனர்.

மீண்டும் பள்ளிவாசலில் கூடிய ஜமாத் மற்றும் சங்கங்களின் நிர்வாகிகள் அனைவரின் விருப்பத்தின்பெயரில் காவல் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்று காவல்துறை ஆய்வாளர் மனோகரன் அவர்களிடம் புகார் செய்தனர்.

மதுக்கூரில் உள்ள பள்ளிவாசலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மதுக்கூரில் ஒருவித பதற்றமான சூழ்நிலையும் நிலவுகின்றது.

 
 
 


 
 
 
 
 
 
மதுக்கூரில் போலீஸ் குவிப்பு (15/09/2013)
 

மதுக்கூரில் இந்து முண்ணனி சார்பாக இன்று 15/09/2013 மாலை விநாயகர் ஊர்வலம் நடைபெறுகின்றது.கடந்த இரு தினங்களாக நிகழ்ந்த விரும்பதகாத சம்பவங்களால் இன்று மதுக்கூரில் ஒருவிதமான  பதட்டம் நிலவிகின்றது.பரபரப்பான மதுக்கூர் முக்கூட்டுச்சாலை வெறிசோடியாக இருக்கின்றது.மதுக்கூர் பகுதியில் அரசு மதுபானக்கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.மதுக்கூரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் மற்றும் சமுதாய இயக்க அலுவலகங்களுக்கும் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சுமார் 800 போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.விணைத்தீர்க்கும் விநாயகர் விணை இல்லாமல் மதுக்கூரிலிருந்து சென்றால் நிம்மதி என்ற மனநிலையில் அனைத்து மத நல்லுள்ளங்கள் உள்ளனர்.
.

 


 
 
 
 
 
 

Saturday, September 14, 2013




நிக்காஹ் (திருமண) வாழ்த்து

                   மதுக்கூர் தமுமுக பொறுப்பாளர்கள் சகோதரர்கள்                                  S.பைசல்தீன், S.நிஜாமுதீன் இல்லத்திருமணம்.

மணமகன் 

S.பைசல்தீன்
(த/பெ M.சாகுல் ஹமீது)
 
மணமகள்
A.சமீரா ரோஷன்
(த/பெ A.அப்துல் அஜீஸ்)
 

மணநாள் 

ஹிஜிரி 1434 துல் க அதா பிறை 18 (15/09/2013 ஞாயிற்றுக்கிழமை)

                                                                 மணவாழ்த்து

பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜமஅ  பைனகுமா ஃபீஹைர்    
















Wednesday, September 11, 2013

விருந்தழைப்பு

கடந்த ரமலானுக்கு பின்னர் நமதூரில் (மதுக்கூரில்) வீடு குடிபுகும் நிகழ்ச்சிகள்,திருமணங்கள் என ஏராளமான விருந்தழைப்புகள் நடைபெறுகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.விருந்தழைப்புகளை ஏற்றுக்கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிகின்றார்கள்.

பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
அவர்கள் எங்களக்கு ஏழு விஷயங்களை(ச் செய்யும்படி) கட்டளையிட்டு ஏழு விஷயங்களை தடை செய்தார்கள்.
1.ஜனாஸாவை பின் தொடரும் படியும்,
2.நோயாளியை நலம் விசாரிக்கும் படியும்,
3.விருந்து
க்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளும் படியும்.
4.அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும்,
5.செய்த சத்தியத்தையும் பூரணமாக நிறைவேற்றும் படியும்.
6.ஸலாமுக்கு பதில் கூறும்படியும்.
7.தும்முபவருக்கு அவர் அல்ஹம்துலில்லாஹ்.. எல்லாப் புகழும் இறைவனுக்கே! என கூறினால் அருகிலிருப்பவர் யர்ஹமுகல்லாஹ்.. இறைவன் உங்களுக்கு கருணை காட்டுவானாக' என மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள். வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், ஆண்கள் தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் கலப்படமில்லாத பட்டையும், அலங்காரப் பட்டையும் எம்ப்திய பட்டையும், தடித்த பட்டையும் அணிவதிலிருந்தும் எங்களை தடைசெய்தார்கள்.

மேலும் சில விருந்தழைப்புகளில் ஏழைகள் புறக்கணிக்கப்படுகின்றார்கள்.
" செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்து மிகவும் கெட்ட விருந்தாகும்". என நபிகள் பெருமகனார் நவின்றுள்ளார்கள்.இன்றைக்கு ஏழைகள் வீடு தேடிபோய் அழைக்கப்ப்டுவது இல்லை.ஏழைகள் விருந்து நடைபெறும் இடத்திற்கு வருகின்றார்கள் உணவு உண்ணுகின்றார்கள்.(சில இடங்களில் ஏழைகள் உணவு உண்ண அனுமதிக்கப்படுவது இல்லை) இதற்கு காரணமும் சொல்லப்படுகின்றது நாங்கள் அழைத்தவர்களுக்கு உணவு இல்லாமல் போய்விடும் என்ற ரெடிமேடு பதில் சொல்லப்படுகின்றது.

ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு செல்வந்தர்கள் அழைக்கப்படும் விருந்துக்களில் அதிகம் விரயம் செய்யப்படுவதை உணர முடிகின்றது.
" உண்ணுங்கள் : பருகுங்கள்: ஆனால் விரயம் செய்யாதீர்கள்.திண்ணமாக இறைவன் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை (திருக்குரான் 7:31)

அதுமட்டுமில்லாது சில இடங்களில் திருமண அழைப்பு கொடுக்க (கூப்பட்டிற்கு) குழுக்களாக செல்வார்கள்.ஆனால் அழைப்பை ஏற்று விருந்து நடைபெறும் இடங்களுக்கு சென்றால் வாசலில் வரவேற்பாளர்கள் இருக்கமாட்டார்கள்.தேவைக்காரர் கொல்லைப்புறத்தில் போய் இருப்பார்.அல்லது மற்றபணிகளை மேற்கொண்டிருப்பார் விருந்தழைப்பை ஏற்று வந்தவரை வாங்க..என்று இன்முகத்துடன் அழைக்க ஆளில்லா அவலநிலைகளும் ஏற்படுகின்றது.

விருந்தினர்களை உபசரிங்கள் என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம்.உபசரீப்பு என்றால் வெறும் விருந்து மட்டுமல்ல வருபவர்களை இன்முகத்துடன் அழைப்பதும்  என்பதை உணர்ந்து செயல்பட அல்லாஹ் அருள்புரியட்டுமாக !

Thursday, September 5, 2013

மதுக்கூர் சூரியத்தோட்டம் சகோதரர் A.T.ஜியாவுதீன் அவர்களின் வீடு

குடிபுகும் நிகழ்ச்சி இன்று 05/09/2013 வியாழன் நடைபெறுகின்றது.

சகோதரர் குடும்பத்தினருக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள்.

Saturday, August 31, 2013

நிக்காஹ் திருமண வாழ்த்து


மணமக்கள்


J.மதார்கான்                                                                       S.ஷிபானா
(த/பெ P.M.ஜபருல்லா )                                                 (த/பெ H.சாகுல் ஹமீது)
 

J.ராவுத்தர்ஷா                                                                    M.ரிபாயா பீவி
(த/பெ
A.M.ஜபருல்லா )                                        (த/பெ மர்ஹும் M.முகம்மது ரபீக்)
 

K.பைசல் அகமது                                                          A.பர்ஹானா பர்வீன்
(த/பெ A.K.M.காதர் முகைதீன்)                            
த/பெ.M.K.அப்துல் கறீம்)

                                                             மணநாள்

ஷவ்வால் மாதம் பிறை 24 (01.09.2013) ஞாயிற்றுக்கிழமை)

                                                           மணவாழ்த்து

பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜமஅ  பைனகுமா ஃபீஹைர்    





Friday, August 30, 2013

"மாற்றம் தேவை தான் "மதுக்கூருக்கு...

தஞ்சாவூர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் நிறைந்து உள்ள ஊர்களில் ஒன்று மதுக்கூர்.
மதுக்கூரில் செயல்படும் பழமைவாய்ந்த  முஹல்லாகள் உள்ளது.கீழவீதி,மேலவீதி என நிர்வாகத்திற்காக பிரிக்கப்பட்டு அவைகள் முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்கம்,மிப்தாஹுல் இஸ்லாம் சங்கம் என சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.இந்த இரு சங்கங்களில் செயற்குழு உறுப்பினர்களால் மதுக்கூர் பெரியப்பள்ளிவாசலை தலைமைவிடமாக கொண்டு செயல்படும் ஜாமியா மஸ்ஜித் பரிபாலனகமிட்டி செயல்படுகின்றது.

தற்போது ஜமாத் நிர்வாகத்திற்கு புதியவர்கள் தேர்வு செய்யப்படவேண்டும் என சிலர் முயற்சிகள் மேற்கொண்டார்கள்.சிலர் குறிப்பிட்ட நபரை தேர்வு செய்யக்கூடாது என தங்கள் பக்க கருத்துக்களை சொல்லியும் வருகின்றார்கள்.எவை எப்படி இருந்தாலும் மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டியில் மாற்றம் தேவை தான்.அந்த மாற்றம் எப்படி இருக்க வேண்டும்.

1.ஜமாத் மற்றும் சங்கங்களில் உறுப்பினர்கள் தொழுகையினை நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டும்.
 

2.மதுக்கூரில் ஜமாத் கட்டுப்பாட்டில் உள்ள இறை இல்லங்களில் பாரமரிப்பு  பணிகளை தொய்வின்றி செய்யவேண்டும்.
 

3.ஜமாத் மற்றும் சங்கங்களில் உறுப்பினர்கள் அவர்களின் பெயரில் அல்லது பினாமிகள் பெயரில் உள்ள கடைகளில் யார் பெயரில் கடை உள்ளதே அவர்களே வியாபாரம் செய்யவேண்டும்.உள்வாடகைகைக்கு விடுவது.பள்ளிவாசல் கடைகளை ஒத்திக்கு வைப்பது தவீர்க்கப்படவேண்டும்.
தங்களின் கட்டுப்பாட்டியில் கடை இல்லை என்றால் கடையினை நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிடவேண்டும்.உள்வாடகைக்கு விடுபவர்களை குறிப்பிட்ட கால அவாகசத்தில் காலி செய்யவேண்டும்.தவறுபவர்களின் பெயர் விபரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.அவர்கள் ஜமாத்,சங்க உறுப்பினர்களாக இருந்தால் பதவி நீக்கம் செய்யவேண்டும்.

4.மதுக்கூர் ஜமாத்துக்கு பெரிய அளவில் சொத்துக்கள் உள்ளது.அவற்றில் முக்கிய பகுதியான கீற்றுச்சந்தையில் உள்ள சாமில் வைத்து இருப்பவர்களை காலி செய்துவிட்டு மேற்படி இடத்தில் ஜமாத் சார்பாக வாய்ப்பு இருந்தால் வக்ப் வாரியத்தில் நிதி உதவி பெற்று நமது சமுதாயத்திற்கு தகுந்தது போன்று திருமண மண்டபம் ஒன்று நிறுவ வேண்டும்.

5.ஜமாத்துக்கு சொந்தமான சந்தையில் பொதுமக்களின் அவசியம் கருதி கழிவறை வசதி ஏற்படுத்தப்படவேண்டும்.அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும்.

6.கிராமத்துமக்கள் தங்களின் விலைபொருட்களை நமதூர் சந்தையில் விற்க குறைந்த் பட்சம் ஒரு வருடத்திற்கு வந்த கமிஷன் தொகையும் (சந்தைகாசு) வாங்ககூடாது.


7.முன்பு போல் ஆடு அறுக்கும் இடத்திற்கு பள்ளிவாசல் பணியாளர்களை (ஆலிம் பெருமக்கள்,மோதினார்)அனுப்பி ஆடுகளை அறுக்க செய்யவேண்டும்.

8.ஜமாத்துக்கு இருக்கும் சொத்துபற்றிய விபரங்களை(வாய்ப்பு இருந்தால்)அனைவரும் அறிந்து கொள்ளும் படி தெரியப்படுத்தவேண்டும்.

9.தகுதியான மாணவர்களுக்கு (படிக்க வசதியற்ற) கல்வி உதவி,ஏழைகளுக்கு மருத்துவ உதவிகள் சிறப்பாக செயல்படுத்தப்படவேண்டும்.

இவை போன்று இன்னும் சில "மாற்றங்கள் தேவை தான்"..நமது ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டிக்கு.

திருமண மஜ்லிஸ்கள் மட்டும் தான் நமது பணி என பொறுப்புகளை குறைந்து கொள்ளாமல் நமதூர் ஜமாத் நிர்வாகம் அனைத்து பணிகளிலும் சிறப்பாக செயல்பட துணை நிற்போம் (இன்ஷா அல்லாஹ்..)






Tuesday, August 27, 2013


வெல்டன் சகோதர எம்.கபார்.

மதுக்கூர் பேரூராட்சி 9 வது வார்டு மனிதநேய மக்கள் கட்சியின் உறுப்பினர் சகோதரர் எம்.கபார்.எனது வார்டுக்கு உட்பட்ட முகம்மதியர் தெரு,பட்டாணியர் தெரு ஆகிய பகுதிகளில் தெருவின் ஓரங்களில் இருக்கும் செடி,கொடிகளை (உபயோகமற்றதை) குறிப்பிட்ட இடைவேளையில் தனது சொந்த செலவில்
சுத்தம் செய்வதை வாடிக்கையாக கொண்டு செயல்படுகின்றார்.கடந்த இரு தினங்களாக பணியாளரை கொண்டு தனது வார்டுக்கு உட்பட்ட தெருங்கள் சுத்தம் செய்யப்பட்டது.


(சுத்தம் செய்வதற்கு முன்பு இருந்த புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது)

வெல்டன் சகோதர எம்.கபார்.
 
 


                                                     சுத்தம் செய்வதற்கு முன்னர்                                                      சுத்தம் செய்வதற்கு முன்னர்
                                                         சுத்தம் செய்ததற்கு பின்ன்ர்
                                                         சுத்தம் செய்ததற்கு பின்ன்ர்
 

Friday, August 23, 2013

புதுமனை புகுநிகழ்ச்சி
 

மதுக்கூர் பெரியார் நகர் சகோதரர் S.A.அப்துல் நாசர் அவர்களின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி இன்று 23/08/2013 நடைபெறுகின்றது.சகோதரர் மற்றும் குடும்பத்தினர்களுக்கு எங்களின் இனிய நல் வாழ்த்துக்கள்.




மதுக்கூர் பள்ளிவாசல் தெரு சகோதரர் A.முஜிபுர் ரஹ்மான் அவர்களின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி இன்று 23/08/2013 நடைபெறுகின்றது.சகோதரர் மற்றும் குடும்பத்தினர்களுக்கு எங்களின் இனிய நல் வாழ்த்துக்கள்.








Thursday, August 22, 2013

மரண அறிவிப்பு

(அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் இடையகாடு சத்தரத்தார் வீடு மர்ஹும் S.N.S. முகம்மதுஆரிப் ராவுத்தர் அவர்களின் மனைவியும்,  ஜெகபர் அலி,  சேக் ஜலாலுதீன்,  துரை (என்கின்ற) காதர்ஷா ஆகியோரின் தாயாருமான நூர்ஜஹான் அம்மாள் இன்று (22/08/2013)வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 6:30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

(மறைந்த நூர்ஜஹான் அம்மாள் அவர்கள் இருமுறை மதுக்கூர் பேரூராட்சி தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.சமுதாய இயக்கத்தில் பணியாற்றியவர்)

        துரை (என்கின்ற) காதர்ஷா MOB :9994006323

Tuesday, August 20, 2013

புதுமனை புகுவிழா 

மற்றும்
                                                                               
                                                     நிக்காஹ் திருமண வாழ்த்து

மதுக்கூர் முகம்மதியர்தெரு சகோதரர் A.புரோஸ்கான் அவர்களின் புதுமனை புகுவிழா நாளை 21/08/2013 புதன்கிழமை நடைபெற உள்ளது.(இன்ஷா அல்லாஹ்).சகோதரர் அவர்களின் குடும்பத்தினருக்கு எங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
                                                      மணமக்கள்
                                              A.சேக் அப்துல்லா
                                        (த/பெ M.அப்துல் அஜீஸ்)
 

                                              J.சர்மிளா பானு
                                          (த/பெ A.ஜெஹபர் அலி)


                                                           மணநாள்
ஹிஜிரி 1434 ஷவ்வால்பிறை 13 (21/08/2013) புதன்கிழமை (இன்ஷாஅல்லாஹ்)

                                                        மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீஹைர்


Saturday, August 17, 2013

நிக்காஹ் திருமண வாழ்த்து

மணமக்கள்


S.அப்துல்லா                                                                    J.சர்மிளா பானு
(த/பெ மர்ஹும் O.P.M.A.செய்யது அலி                (த/பெ A.ஜெகபர் சாதிக்)

A.ராசீத் தைமூர்                                                                 M.ஹஜ்நஸ்ரின்
(த/பெ A.S.M.அபுசாலிபு)                                                  (
த/பெM.முகம்மது உசேன்)

A.அப்துல் முனாப்                                                           N.ரோஸ்னா பேகம்
(த/பெ M.அப்துல் காதர்)                                               
(த/பெ.A.K.M.M.நஜிமுதீன்)

A.முகம்மது முஸ்தபா                                                    A.பர்ஷானா
(த/பெ S.அசன் குத்தூஸ் )                                                (த/பெ A.அஸ்ரப் அலி )    



                                                             மணநாள்

ஷவ்வால் மாதம் பிறை 10 (18.08.2013- ஞாயிற்றுக்கிழமை)

                                                           மணவாழ்த்து

பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜமஅ  பைனகுமா ஃபீஹைர்    




(மதுக்கூரில் மேலும் இரு திருமணங்கள் நாளை நடைபெறுகின்றது.(இன்ஷா அல்லாஹ்)
 

Thursday, August 15, 2013

மதுக்கூரில் சுகந்திரதின கொண்டாட்டங்கள்
இந்திய தேசத்தின் 67 சுகந்திர தின கொண்டாட்டங்கள் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது..மதுக்கூரில் நடைபெற்ற சுகந்திர தின கொண்டாட்டங்கள்.

பேரூராட்சி அலுவலகம்
மதுக்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியினை பேரூராட்சி பெருந்தலைவர் என்.எஸ்.எம்.பசீர் அகமது அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அதிகாரி மற்றும் பேரூராட்சி துணைத்தலைவர் ஆனந்த்,பேரூராட்சி உறுப்பினர்கள் பெரமையன்,ஜோதிராஜன்,சுரேஸ்,கபார்,மணிவேல்,சுரேஸ்,மற்றும் முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள்,அரசியல் கட்சி பிரமுகர்கள்,வர்த்தக பெருமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


 மதுக்கூர் நடுநிலைப்பள்ளி (சந்தைப்பள்ளிக்கூடம்)

மதுக்கூர் நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் (தெற்கு) சுகந்திரதின நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளியின் முதல்வர் திருமதி காந்திமதி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த ஜாமியா மஸ்ஜித் தலைவர் சகோதரர் அமானுல்லா,பெற்றோர் ஆசிரியக்கழகத்தலைவர் பெரியவர் அப்துல் காதர்,கல்விக்குழுத்தலைவர் கபார் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சியின் தலைவர் சகோதரர் என்.எஸ்.எம்.பஷீர் அகமது அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார்கள்.நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


  மதுக்கூர் தமுமுக அலுவலகம்

மதுக்கூர் தமுமுக அலுவலகத்தில் சுகந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றப்பட்டது.நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில்,மமக செயலாளர் E.S.M.ராசிக்,தமுமுக செயலாளர் E.S.M.ராசிக்,பொருளாளர் இலியாஸ்,மாவட்ட பேச்சாளர் பவாஸ்,பொருப்பாளர்கள் ராசிக்,ரியாஸ்,அமீரக பொருப்பாளர் பைசல் அகமது ஆகியோர் முன்னிலையில் அமீரக பொருப்பாளர் என்.சர்புதீன்  அவர்கள் கொடியேற்றி சிறப்பு செய்தார்.








பிஎப்ஐ அலுவலகம்

பிஎப்ஐ தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அலுவலகம் அமைந்துள்ள மதுக்கூரில் நகர தலைவர் சகோதரர் சேக்பரீது அவர்கள் தலைமையிலும்,சகோதரர்கள் அப்துல் ரஹ்மான்,அப்துல் வாஹீது,அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட செயலாளர் சகோதரர் ஹாஜிசேக் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார். 




காவல் நிலையம்

மதுக்கூர் காவல்நிலையத்தில் காவல்துறை ஆய்வாளர் திரு மனோகரன் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.



இதுபோல மதுக்கூரில் உள்ள அரசு அலுவலகங்கள்,அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.


Tuesday, August 13, 2013

புதுமனை புகுவிழா

மதுக்கூர் இராமம்பாள்புரம் சகோதரர் K.S.M.அப்துல் வாஹீது அவர்களின் புதியவீடு குடிபுகும் நிகழ்ச்சி இன்று  13/08/2013 செவ்வாய் இரவு சிறப்பு பயான்நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.புதிய வீடு குடிபுகும் சகோதரர் K.S.M.அப்துல் வாஹீது  மற்றும் குடும்பத்தினருக்கு எங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

Sunday, July 28, 2013

மதுக்கூரில் ஸ்டேட் பாங்க் SBI

மதுக்கூர் மாநகரில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி என்று இதுவரை இந்தியன் வங்கி மட்டுமே செயல்பட்டுவந்தது.மதுக்கூர் வளர்ந்து வரும் தொழில் நகரம் என்பதை உணர்ந்த தனியார் வங்கிகள் தங்களின் கிளைகளை போட்டிப்போட்டு மதுக்கூரில் திறக்கின்றார்கள்,மேலும் விசாலமான இடத்திற்க்கு இடமாற்றங்களும் செய்கின்றார்கள்.இந்நிலையில் மதுக்கூருக்கு அரசுடமையாக்கப்பட்ட மேலும் ஒரு வங்கி வேண்டும் என பலரும் பல வகைகளில் முயற்சி மேற்கொண்டார்கள்.குறிப்பாக மதுக்கூர் .காம் வாசகர்கள் சார்பாகவும் அதன் நிறுவனரான சகோதரர் எம்.முகம்மது இஷாக் அவர்களும் அவரின் பங்குக்கு முயற்சிகள் மேற்கொண்டார்.

அனைவரின் முயற்சிகளின் அடிப்படையில் பாரத் ஸ்டேட் பாங்கு தனது கிளையினை மதுக்கூர் மெயின்ரோட்டில் அறிவழகன் மருத்துவமனை எதிரில் நாளை29/07/2013 திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு அதன் பொதுமேலாளர் திருச்சிராப்பள்ளி  திரு அருண் அகர்வால் அவர்கள் திறந்து வைக்கின்றார்கள்.



Thursday, July 25, 2013

மதுக்கூரில் இஃப்தார்

மதுக்கூரில் பெரியப்பள்ளிவாசல் முதல் மஸ்ஜித் அல் ஹராப் அல் நயீமி வரை உள்ள ஆறு பள்ளிவாசல்களில்  (மஸ்ஜித் அல் ஹராப்  நீங்கலாக)  ஐந்து பள்ளிவாசலில் இஃப்தார் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.நாம் சென்ற வருடம் குறிப்பிட்டதை போன்று ஆரம்ப காலத்தில் மதுக்கூர் பெரியப்பள்ளிவாசலில் ஜாப்னமஸ் நண்பர்கள் குழுவினை சார்ந்த சகோதரர்கள் இஃப்தார் பணியினை ஒழுங்குபடுத்தினர்கள்.அதன் பின்னர் அத்தகும்மாஸ் குருப்ஸ் மேலப்பள்ளியிலும்,MCA குருப்ஸ் மஸ்ஜித் நூரிலும் இஃப்தார் பணிகளை தொய்வின்றி நன்மையினை எதிர்பார்த்து சிறப்பாக செய்கின்றார்கள்.இப்போது மஸ்ஜித் இஃக்லாஸ் பள்ளிவாசலில் சில இளைஞர்களும்,மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் குவாலிட்டி குருப்ஸ் மற்றும் இளைஞர்கள் இணைந்து சிறப்பாக இஃப்தார் பணிகளை செய்து வருகின்றார்கள்.

அனைத்து பள்ளிவாசல்களிலும் மாணவர்களின் கூட்டம் நிரம்பி வழிகின்றது.மஸ்ஜித் தக்வா பள்ளியில் பெரும்பாலும் இஃப்தாருக்கு உணவும் அளிக்கப்படுவதாக தகவல்.மேலும் மேலப்பள்ளிக்கு அதிகம் எதுவும் (சமூசா,வடை,பழவகைகள்) வருவதில்லை என்ற தகவலும் உள்ளது.

எது எப்படியிருந்தாலும் இளைஞர்கள் இஃப்தார் பணிகளில் போட்டி போட்டு சேவை செய்கின்றார்கள்.நோன்பாளிகளுக்கு நோன்பு திறப்பதற்க்கு எல்லா வகையிலும் உதவி புரிகின்றார்கள்.இவர்களின் சேவையினை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அருள் புரியட்டும்.

குறிப்பு : இஃப்தாருக்கு களைக்கட்டும் கூட்டம் இரவு தொழுகைக்கு இல்லை என்ற ஏக்கமும் உள்ளது.










Wednesday, July 24, 2013

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....                                    

யா அல்லாஹ் !
உன்னையே நாங்கள் வணங்குகின்றோம்    
உன்னிடமே உதவியும் தேடுகின்றோம்...

அன்பிற்கினிய சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

கடந்த 18 ஆண்டுகளாக தமிழக முஸ்லிம்களின் பிரச்சனைகளை எதிர்கொண்டு,முஸ்லிம்களின் உரிமைகளை காக்க பலவிதமான போராட்டங்களின்ல் ஈடுபட்டு வரும் சமுதாய பேரியக்கம் தமுமுக என்பதை அனைவரும் அறிவீர்கள்.

தமிழக முஸ்லிம்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த சமூக நீதியின் சுடரொளியாம்,சமுதாய கலங்கரை விளக்கமாய் ஒளி வீசும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் - மதுக்கூர் கிளையின் சார்பாக மாநில தலைமையின் சிறப்பான வழிகாட்டலின்படி பல்வேறு மக்கள் நலப்பணிகளை சிறப்பாக செய்து வருகின்றோம்.(எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே)

எங்களின் சமூக,சமுதாய பணிகள் தொய்வின்றி செயல்பட இப்புனிதமிகு ரமலானில் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை அள்ளிக்கொடுத்து எங்கள் பணிகள் சிறக்க உதவி புரியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

எங்கள் பணிகளில் சில :





  • ஆம்புலன்ஸ் சேவை     








  • சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டங்கள்.







  •  வரதட்சனைக்கு எதிரான தெருமுனைப்பிரச்சாரம்



  • உயிரினும் மேலான எம்பெருமனார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுப்படுத்த எண்ணிய அமெரிக்காவைக்கண்டித்து ஆர்பாட்டம்.








  •     சிறையில் உள்ள அப்பாவி முஸ்லிம்களை

              மீட்டெடுப்பதற்காக தொடர் போராட்டம்.

  • முஸ்லிம்களுக்கு தனி இட ஓதுக்கீடு போராட்டம்


 


  • பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம்






  • மதுவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள்







  • மக்கள் நல பணிகளுக்காக அரசை தூண்டும் விதமாக தொடர்ந்து குரல் கொடுத்தல்  .      








  • உலகளவிய இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி




  • திருமணச்சட்டத்தில் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு பெறுவதற்கான போராட்டம்.








  • ஊழலுக்கு எதிரான போராட்டம்








  • விவாசாயிகளின் உரிமைப்போராட்டங்களில் பங்கு பெறுதல்.









  • சகோதர இயக்கங்களுடன் இணைந்து போராட்டக்களம்








  • அனைத்து சமுதாய மக்களுக்கும் எந்நேரத்திலும் உதவக்கூடிய இரத்த தானம்.




  • சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி  



இதுபோன்ற எண்ணற்ற மக்கள் பணிகள் தொடர்ந்து நடைபெற


வாரீ வழங்கிடுவீர்
வலிமையுடன் செயல்பட...
தமுமுகவின் மக்கள் பணிகள் தொடர்ந்திட.....

அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக)
எம்.எஸ்.எம்.மோட்டார்ஸ் எதிரில்-லக்கி ஹார்டுவேர்ஸ் அருகில்
மெயின்ரோடு
மதுக்கூர் 614903
தஞ்சாவூர் மாவட்டம்.


அமீரக தொடர்புக்கு

A.அஜீம்                               0097155 4465088
E.S.M.முகம்மது பைசல் 0097150 8511842
K.அப்துல் ரெஜாக்          0097155 8137763
M.Y.சேக் ஜலால்             0097150 4202842
A.பஷீர் அகமது (அபுதாபி) 0097150 6950912

வங்கி கணக்கு விபரம் (Lakshmi Vilas Bank)

A.Bousul Rahman & M.Haja Mohideen.
LVB A/C No : 045730 10000 26440
IFSC CODE : LAVB 0000457
Madukkur Branch




   



Saturday, July 20, 2013

மதுக்கூர் ஜாமிஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டிக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

மதுக்கூரில் செயல்படும் முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்கம்,மிப்தாஹுல் இஸ்லாம் சங்கம் இரண்டும் இணைந்து ஜமாத் பொறுப்பாளர்களை தேர்வு செய்வது என்பது மரபு.இதன்படி புதிய நிர்வாகிகள் தேர்வு பற்றி முறைப்படி நேற்று மதுக்கூரில் உள்ள இருசங்கங்களில் சார்பாக நோட்டீஸ் வெளியிடப்பட்டு வீடுதோறும் வினியோகம் செய்யப்பட்டது.



Friday, July 19, 2013

மதுக்கூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

மதுக்கூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் மழை இன்றி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றார்கள்.எனவே நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காட்டிய வழியில் தொழுகை நடத்தலாம் என தீர்மானித்த மதுக்கூ தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையினர் மஸ்ஜித் இஃக்லாஸ் பள்ளிவாசல் வளாகத்தில் இன்று (19/07/2013) ஜும்மா தொழுகைக்கு பின்னர் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது.முன்னதாக பள்ளியின் இமாம் மெளலவி அன்வாருல் அன்சாரி அவர்கள் மழைத்தொழுகையின் சிறப்புக்களைப்பற்றியும்,பேணுதலைப்பற்றியும் எடுத்துரைத்தார்.

மழை தொழுகையில் ஜும்மாவிற்க்கு வருகைதந்த அனைவரும் கலந்து கொண்டார்கள்.பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.





நன்றி :mtctonline@gmail.com

Tuesday, July 16, 2013

இப்படியும் ஓர் சேவை...மாஷா அல்லாஹ்.


தஞ்சாவூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) சார்பாக தஞ்சாவூரில் மருத்துவமனைகளில் உள்ள நோன்பு நோற்கும் முஸ்லிம்களுக்கு சஹர் உணவு ஏற்பாடுகள் செய்து மருத்துவமனைக்கே கொண்டு சென்று டோர் டெலிவரி செய்கின்றார்கள்.இப்பணி ஓர் சிறந்த பணியாகும்.தங்களுக்கு அறிந்த நோன்பாளிகள் தஞ்சாவூர் மருத்துவமனைகளில் தங்கி இருந்தால் இச்செய்தியினை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.அவர்கள் நோன்பு நோற்க பயன் உள்ளதாக இருக்கும்.

இப்பணி தொய்வின்றி நடைபெற பொருளாதார உதவிகள் தேவைப்படுகின்றது.நாள் ஒன்றுக்கு ரூ 6000 வீதம் செலவாகின்றது என்கின்றார்கள் இதன் பொருப்பாளர்கள்.

இச்சேவைக்காக உதவி செய்யவிரும்புவர்கள் தொடர்பு கொள்க :
அப்துல் ஜப்பார் (மாவட்ட தலைவர் தமுமுக ) 944 326 4203
வக்கீல் 904 350 1404
கபார் (மமக பேரூராட்சி கவுன்சிலர் மதுக்கூர்) 986 585 1693

 

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...