இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, August 15, 2013

மதுக்கூரில் சுகந்திரதின கொண்டாட்டங்கள்
இந்திய தேசத்தின் 67 சுகந்திர தின கொண்டாட்டங்கள் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது..மதுக்கூரில் நடைபெற்ற சுகந்திர தின கொண்டாட்டங்கள்.

பேரூராட்சி அலுவலகம்
மதுக்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியினை பேரூராட்சி பெருந்தலைவர் என்.எஸ்.எம்.பசீர் அகமது அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அதிகாரி மற்றும் பேரூராட்சி துணைத்தலைவர் ஆனந்த்,பேரூராட்சி உறுப்பினர்கள் பெரமையன்,ஜோதிராஜன்,சுரேஸ்,கபார்,மணிவேல்,சுரேஸ்,மற்றும் முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள்,அரசியல் கட்சி பிரமுகர்கள்,வர்த்தக பெருமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


 மதுக்கூர் நடுநிலைப்பள்ளி (சந்தைப்பள்ளிக்கூடம்)

மதுக்கூர் நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் (தெற்கு) சுகந்திரதின நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளியின் முதல்வர் திருமதி காந்திமதி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த ஜாமியா மஸ்ஜித் தலைவர் சகோதரர் அமானுல்லா,பெற்றோர் ஆசிரியக்கழகத்தலைவர் பெரியவர் அப்துல் காதர்,கல்விக்குழுத்தலைவர் கபார் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சியின் தலைவர் சகோதரர் என்.எஸ்.எம்.பஷீர் அகமது அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார்கள்.நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


  மதுக்கூர் தமுமுக அலுவலகம்

மதுக்கூர் தமுமுக அலுவலகத்தில் சுகந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றப்பட்டது.நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில்,மமக செயலாளர் E.S.M.ராசிக்,தமுமுக செயலாளர் E.S.M.ராசிக்,பொருளாளர் இலியாஸ்,மாவட்ட பேச்சாளர் பவாஸ்,பொருப்பாளர்கள் ராசிக்,ரியாஸ்,அமீரக பொருப்பாளர் பைசல் அகமது ஆகியோர் முன்னிலையில் அமீரக பொருப்பாளர் என்.சர்புதீன்  அவர்கள் கொடியேற்றி சிறப்பு செய்தார்.








பிஎப்ஐ அலுவலகம்

பிஎப்ஐ தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அலுவலகம் அமைந்துள்ள மதுக்கூரில் நகர தலைவர் சகோதரர் சேக்பரீது அவர்கள் தலைமையிலும்,சகோதரர்கள் அப்துல் ரஹ்மான்,அப்துல் வாஹீது,அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட செயலாளர் சகோதரர் ஹாஜிசேக் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார். 




காவல் நிலையம்

மதுக்கூர் காவல்நிலையத்தில் காவல்துறை ஆய்வாளர் திரு மனோகரன் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.



இதுபோல மதுக்கூரில் உள்ள அரசு அலுவலகங்கள்,அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.


No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...