இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Sunday, September 15, 2013

மதுக்கூரில் பரபரப்பு (13/09/2013)

கடந்த 12 ஆண்டுகளாக மதுக்கூரில் இந்து முண்ணனி சார்பாக விநாயகர் ஊர்வலம் நடந்தப்படுவதாகவும் 13 ஆண்டு விநாயகர் ஊர்வலம் வரும் 15/09/2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எனவும் விளம்பரம் செய்யப்படுகின்றது.இந்நிலையில் இன்று (13/09/2013) அதிகாலையில் சிலையின் தலை பகுதி உடைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகின்றது.சிலையில் சேதம் ஏற்பட்ட உடன் சங்கபரிவார்கள் இதை முஸ்லிம்கள் தான் உடைத்து இருப்பார்கள் என கூறி மதுக்கூரில் சில இடங்களில் கடைகளை அடைக்க சொல்லி உள்ளார்கள்.

சிலை சேதம் காரணமாக மதுக்கூரில் ஒருவித பதற்றம் நிலவுகின்றது.போலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளார்கள்.காவல்துறையினரின் விசாரணை தொடங்கி உள்ளதாக கூறப்படுகின்றது.காவல்துறையினர் நடுநிலையுட்ன் செயல்பட்டு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும்.விசாரணை தொடங்குவதற்கு முன்னரே இதை முஸ்லிம்கள் தான் செய்து இருப்பார்கள் என்று சொல்வது மதுக்கூரில் பரபரப்பை ஏற்படுத்தி தன்னையும்,தனது இயக்கத்தையும் வளர்த்து கொள்ள நடைபெறும் சூழ்ச்சியாகும்.
காந்தியை கொலை செய்து விட்டு முஸ்லிம்தான் கொலை செய்தார்கள் என்றும்.தனது விளம்பரத்திற்காக தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களும் செய்த வேலையாக கூட இருக்கும்.எனவே காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளை தண்டிக்கட்டும்.

பிற மத கடவுள்களை ஏசாதீர்கள் என்றும் உங்கள் வழி உங்களுக்கு அவர்களின் வழி அவர்களுக்கு  என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.அப்படி இருக்கையில் முஸ்லிம்கள் யாரும் இதுபோல் செய்யமாட்டார்கள்.சிலை வைக்கப்பட்ட சிவக்கொல்லை பகுதியில் கால்நடைகளின் நடமாட்டம் இரவு நேரங்களில் அதிகமாக இருக்கும் சிலையில் உள்ள மாலையை உண்ண முயற்சி செய்தபோது கால்நடைகள் சிலையை கீழே தள்ளிவிட்டு இருக்கலாம்.சிலர் ஊர்வலத்துக்கு கூட்டம் சேர்ப்பதற்காக செய்த வேலைகளாக கூட இருக்கலாம்.உண்மை ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும்.....
 
 
 
 மதுக்கூரில் தொடர்ந்து பதற்றம்(14/09/2013)
 
மதுக்கூரில் விரும்பதகாத சம்பவங்கள் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றுவருகின்றது.இன்று 14/09/2013 சனிக்கிழமை காலை வழக்கப்போல் பெரியப்பள்ளிவாசலின் முஅத்தீன் சம்சுதீன் அவர்கள் பஜர் பாங்கு சொல்ல பள்ளிவாசல் வந்துள்ளார்.பெரியப்பள்ளிவாசலில் ராத்தீபு  இடம் என கூறப்படும் பள்ளிவாசலின் மையப்பகுதியில் யாரே விஷமிகள் மாட்டு சணத்தை ஒரு  வாளியிலும்,பிளாஸ்டிக் பையிலும் கொண்டுவந்து கொட்டிவிட்டு சென்றுள்ளார்கள்.உடனே நிர்வாகத்தினருக்கு தகவலும் கொடுத்துள்ளார்.ஜமாத் மற்றும் சங்கங்களில் நிர்வாகிகள் பள்ளிவாசலுக்கு வந்து பார்த்துவிட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். பிறகு புகார் செய்யலாம் என ஜமாத்தார்கள் கலைந்து சென்றுவிட்டார்கள்.ஆனால் புகார் செய்யவில்லை.சம்பவம் அறிந்த சமுதாய இயக்க சகோதரர்களும் சமுதாய நலன் விரும்பிகளும் பள்ளிவாசலில் குவிந்தனர்.

மீண்டும் பள்ளிவாசலில் கூடிய ஜமாத் மற்றும் சங்கங்களின் நிர்வாகிகள் அனைவரின் விருப்பத்தின்பெயரில் காவல் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்று காவல்துறை ஆய்வாளர் மனோகரன் அவர்களிடம் புகார் செய்தனர்.

மதுக்கூரில் உள்ள பள்ளிவாசலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மதுக்கூரில் ஒருவித பதற்றமான சூழ்நிலையும் நிலவுகின்றது.

 
 
 


 
 
 
 
 
 
மதுக்கூரில் போலீஸ் குவிப்பு (15/09/2013)
 

மதுக்கூரில் இந்து முண்ணனி சார்பாக இன்று 15/09/2013 மாலை விநாயகர் ஊர்வலம் நடைபெறுகின்றது.கடந்த இரு தினங்களாக நிகழ்ந்த விரும்பதகாத சம்பவங்களால் இன்று மதுக்கூரில் ஒருவிதமான  பதட்டம் நிலவிகின்றது.பரபரப்பான மதுக்கூர் முக்கூட்டுச்சாலை வெறிசோடியாக இருக்கின்றது.மதுக்கூர் பகுதியில் அரசு மதுபானக்கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.மதுக்கூரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் மற்றும் சமுதாய இயக்க அலுவலகங்களுக்கும் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சுமார் 800 போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.விணைத்தீர்க்கும் விநாயகர் விணை இல்லாமல் மதுக்கூரிலிருந்து சென்றால் நிம்மதி என்ற மனநிலையில் அனைத்து மத நல்லுள்ளங்கள் உள்ளனர்.
.

 


 
 
 
 
 
 

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...