இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, May 18, 2015

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !
இனிதாய் முடிந்தது....இஸ்லாமிய மாநாடு

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் மார்க்கப்பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை சார்பாக நேற்று 16/05/2015 சனிக்கிழமை ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு இனிதே நிறைவுபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

முதல் அமர்வு இஸ்லாமிய கண்காட்சி

காலை 10:30 மணியளவில் மெளலவி ரிபாய் ரஷாதி அவர்கள் காயல்பட்டிணம் தாவா சென்டர் மாணவிகள் சார்பாக நடத்தப்பட்ட இஸ்லாமிய கண்காட்சியினை திறந்துவைத்தார்கள்.தொடர்ந்து சகோதரி ஆலிமா பர்வீன் பானு அவர்கள் இறைவசனத்துடன் நிகழ்ச்சிகள் இனிதே தொடங்கியது.மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு மாநாட்டு குழுத்தலைவர் சகோதரர் கபார் தலைமையேற்று நடத்தினர்.சகோதரர் ஜபருல்லா வரவேற்புரை நிகழ்த்தினர்.






சகோதரர் முஜிபுர் ரஹ்மான்,முகம்மது இலியாஸ் ஆகியோர் முன்னிலையில் மெளலவி முகம்மது மைதீன் உலவி அவர்கள் சின்ன சின்ன அமல்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்,மெளலவி ரிபாய் ரஷாதி அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பின் கீழ்  உரை நிகழ்த்தினர்.லுஹர் தொழுகை,மற்றும் உணவு இடைவேளை விடப்பட்டது.முதல் அமர்வு நிறைவு பெற்றது.






இரண்டாவது அமர்வு
மந்திரமா ? தந்திரமா ? மேஜிக் நிகழ்ச்சி

மதியம் 3:00 மணியளவில் திருச்சியை சார்ந்த அகமது அவர்களின் மந்திரமா ? தந்திரமா ? மேஜிக் நிகழ்ச்சி நடைபெற்றது.அஸர் தொழுகைக்கு பின்னர் மெளலவி இக்பால் ஃபிர்தவ்ஸி அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்.
எங்களை கவர்ந்த இஸ்லாம்
இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்று கொண்ட "காயல்பட்டிணம் தாவா சென்டர்" மாணவிகளின் உள்ளம் நெகிழும் உரைகள் நடைபெற்றது.

மூன்றாம் அமர்வு
மகஃரிப் தொழுகைக்கு பின்னர் மூன்றாம் அமர்வு தொடக்கியது.சகோதரர்கள் பெளசூல் ரஹ்மான்,தீன் முகம்மது,அப்பாஸ்,நஸாருதீன் ஆகியோர் முன்னிலையில் தொடக்கியது.மெளலவி அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி அவர்கள் இஸ்லாமிய குடும்பம் என்ற தலைப்பிலும்,மெளலவி அப்துல் மஜீது மஹ்ளர் அவர்கள்  பாவமன்னிப்பு என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்கள்.
சகோதரர் ஃபவாஸ் அவர்களின் நன்றி உரையுடன் மாநாடு இனிதே நிறைவு பெற்றது.இம்மாநாட்டில்சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.பெண்கள் அதிகமாக கலந்து கொண்டர்கள்.







இஸ்லாமிய் பிரச்சாரப்பேரவை சார்பாக நடத்தப்பட்ட இம்மாநாட்டிற்கு பொருளாதார உதவி அளித்த அனைவருக்கும் எங்களின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.அல்லாஹ் அவர்களின்  இரு உலக  வாழ்வையும் சிறப்பாக்கி தர துவா செய்கின்றோம்.

ம்மாநாடு http://tmmkmadukkur.blogspot.in/,www.tmclive என்ற இணையத்தளங்களில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.இதன் மூலமும் பலர் பயனடைந்துள்ளார்கள்.மாநாட்டு பந்தலில் டி.வி மற்றும் அகன்ற திரை முலமாகவும் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பபட்டது.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...