இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Friday, December 7, 2012


டெல்டா மாவட்ட விவசாயிகள் பந்த்: மனிதநேய மக்கள் கட்சியினர் கைது


சம்பா பயிருக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்ட விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த டெல்டா மாவட்ட பந்திற்க்கு மனிதநேயமக்கள் கட்சி ஆதரவு தெரிவித்து இருந்தது.இன்று 07/12/2012 மதுக்கூர் முக்கூட்டுச்சாலையிலிருந்து விவசாய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் சகோதரர் ராவுத்தர்ஷா ஆகியோர் முன்னிலையில் பேருந்து நிலையம் நோக்கி சென்று மறியலில் ஈடுபட்டனர்.கர்நாடக அரசை கண்டித்து கோஷங்களும் எழுப்பினர்கள்.மறியல் செய்த அனைவரும் கைதுசெய்யப்பட்ட்டார்கள்.

மறியலில் ஈடுபட்ட மமக மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா,சிபிஎம் ஒன்றிய செயலாளர் காசிநாதன்,சிபிஐ மாநில குழு உறுப்பினர் வேதாசலம்,நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் பிரபாகர்,தமுமுக,மமக நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான்.மமக நகர செயலாளர் முகம்மது ராசிக்,தமுமுக நகர செயலாளர் நிசார் அகமது,முன்னாள் தலைவர் பெளசூல் ரஹ்மான்,பேரூராட்சி கவுன்சிலர் கபார்,மற்றும் ஜபருல்லா,ராசிக்,ரியாஸ்,ரமீஸ்,நஸாருதீன்,சாகுல்ஹமீது,பவாஸ்,மற்றும் தமுமுக,மமக ,சிபிஎம்,சிபிஐ,நாம்தமிழர் கட்சினர் கைது செய்யப்பட்டார்கள்.

கைது செய்யப்பட்ட அனைவரும் சிவக்கொல்லை எகேஎஸ் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டார்கள்.கைது செய்யப்பட்ட தமுமுக மற்றும் மமக வினர் ஜும் ஆ தொழுகையினை திருமண மண்டபத்தில் நிறைவேற்றினார்கள்.ஜும் ஆ உரையினை சகோதரர் ராவுத்தர்ஷா நிகழ்த்தினார்,கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை 5 மணிக்கு விடுதலை செய்யப்பட்டர்கள்.









No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...