இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, September 27, 2014

மதுக்கூரில் தமுமுக மாநில துணைத்தலைவர்
நேற்று 26/09/2014 வெள்ளிக்கிழமை ஒரு நாள் சுற்றுபயணமாக தஞ்சாவூர் மாவட்டம் வருகை தந்த சமுதாய பேரியக்கம் தமுமுகவின் நிறுவனரும்,மாநில தமுமுக துணைத்தலைவருமான பெரியவர் குணங்குடி அனிபா அவர்கள் மாலை 4:30 மணிக்கு மதுக்கூர் நகர் அலுவலகம் வந்தார்.அவரை மாவட்ட துணைச்செயலாளர் ராசிக் அவர்கள் தலைமையில் நகர தலைவர் ஜபருல்லா,செயலாளர் பவாஸ்,மாணவர் இந்திய நகர நிர்வாகி முகம்மது மர்சுக், மற்றும் தமுமுக நிர்வாகிகள் வரவேற்றார்கள்.தமுமுக நகர நிர்வாகிகளிடம் பல்வேறு ஆலோசனைகள் செய்தார்.
காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி கோரியும்.தமுமுகவின் செயல்பாடுகளை எடுத்துரைக்கும் வகையிலும் மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி தலைவர் ஜனாப் முகைதீன் மரைக்காயர் அவர்களையும்,மதுக்கூர் பேரூராட்சி தலைவர் ஜனாப் பசீர் அகமது அவர்களையும்,சமூக ஆர்வலர்கள் அண்ணா மெடிக்கல்ஸ் ஜனாப் நத்தர்ஷா அவர்களையும்,லக்கி ஹார்டுவேர்ஸ் ஜனாப் அப்துல் காதர் அவர்களையும்,முன்னாள் அமீரக தமுமுக தலைவர் மதுக்கூர் ஹாஜா மைதீன் அவர்களையும், சந்தித்து பேசினார்.மாநில துணைத்தலைவர் அவர்களுடன் மாநில அமைப்புச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா மாவட்ட தலைவர் பாதுஷா,மாநில வர்த்தக அணிச்செயலாளர் கலந்தர் மற்றும் மதுக்கூர் நகர அணி நிர்வாகிகள்,செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள்.








No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...