இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, March 17, 2010

ஆந்திர முஸ்லிம்களின் ஒற்றுமை...

ஆந்திராவில், அரசுப் பணியிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மாநில அரசு பிற்ப்பித்த உத்தரவை சமீபத்தில் ஆந்திர உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

ரத்து செய்யப்பட்ட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்கக்கோரி, மார்ச் 13 ஆம் தேதிய்னறு ஐக்கிய முஸ்லிம்கள் பேரவையால் (Muslim United Front) ஹைதரபாத்திற்கு அருகில் நடத்தப்பட்ட இம் மாநாட்டிற்கு கட்சி – இயக்க – அமைப்பு வேறுபாட்டைக் கடந்து ஆந்திர முஸ்லிம்கள் அனைவரும் கலந்துக்கொண்டது ஆந்திர அரசியல் கட்சிகளிடம் பயத்தை கிளப்பியுள்ளது.

மாநிலத்தில் நான்கு சதவிகித இட ஒதுக்கீட்டையும்- மத்தியில் பெண்களுக்கான 33 சதவிகித ஒதுக்கீட்டில் முஸ்லிம் பெண்களுக்கும் உள் ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்று இம்மாநாட்டில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

சச்சார் கமிட்டி மற்றும் ஃபதாமி கமிட்டியின் பரிந்துரைகளின் படி முஸ்லிம்களுக்கு கல்வியில் ஒதுக்கீடு கோரிக்கையை முன் வைத்ததோடு மட்டுமல்லாது ரங்கநாத் கமிஷன் பரிந்துரையின் படி இந்திய முஸ்லிம்களுக்கு 10 சதவிகித ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைபடுத்த வலியுறுத்தியது.

கட்சி மற்றும் இயக்க வேறுபாடுகளை கடந்து எம்.ஐ.எம், (MIM) காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் சார்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் – ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...