இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, March 3, 2010

தஞ்சை மாவட்டத்தில் மின் விநியோக நேரத்தில் மாற்றம்

தஞ்சாவூர்,​​ கும்பகோணம்,​​ பட்டுக்கோட்டை,​​ ஒரத்தநாடு,​​ பேராவூரணி,​​ அதிராம்பட்டினம்,​​ பாபநாசம்,​​ திருக்காட்டுப்பள்ளி,​​ மதுக்கூர் ஆகியப் பகுதிகளில் மார்ச் 1 ஆம் தேதி முதல் மின் விநியோக நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் மா.​ தங்கராஜு.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கும்பகோணம் பகுதி:​ மேலக்காவிரி பகுதியில் காலை 6 முதல் 8 மணி வரை,​​ மகாமகம்,​​ டி.எஸ்.ஆர்.​ பாபநாசம்,​​ ஆடுதுறை பகுதிகளில் காலை 8 முதல் 10 மணி வரை,​​ அய்யம்பேட்டை பகுதியில் பிற்பகல் 2 முதல் 4 மணி வரை,​​ கும்பகோணத்தில் காந்திநகர்,​​ சுந்தரபெருமாள் கோயில்,​​ வாட்டர் ஒர்க்ஸ்,​​ திருபுவனம் பகுதிகளில் மாலை 4 முதல் 6 மணி வரை,​​ பட்டுக்கோட்டை,​​ ஒரத்தநாடு பகுதிகளில் காலை 6 முதல் 8 மணி வரை,​​ அதிராம்பட்டினம் பகுதியில் காலை 10 முதல் பகல் 12 மணி வரை,​​ பேராவூரணி பகுதியில் பிற்பகல் 2 முதல் 4 மணி வரை,​​ மதுக்கூர் பகுதியில் மாலை 4 முதல் 6 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்:​ திருவையாறு மற்றும் செங்கிப்பட்டி பகுதியில் காலை 6 முதல் 8 மணி வரை,​​ அன்னை சத்யா விளையாட்டு மைதானம்,​​ சுற்றுலா மாளிகை,​​ திருக்கானூர்பட்டி பகுதிகளில் காலை 8 முதல் 10 மணி வரை,​​ வல்லம் பகுதியில் காலை 10 முதல் பகல் 12 மணி வரை,​​ பூக்குளம் பகுதியில் பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை,​​ விளார்,​​ முனிசிபல்,​​ இண்டஸ்டிரியல் திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை,​​ கரந்தை,​​ வ.உ.சி.​ நகர்,​​ கீழவாசல்,​​ வண்டிக்காரத் தெரு பகுதிகளில் மாலை 4 முதல் 6 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...