இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, March 23, 2010

ஈராக் ஆக்கிரமிப்பு 7 ஆண்டு முடிவடைந்த நிலையில்: அமெரிக்காவில் பிரம்மாண்ட போர் எதிர்ப்பு பேரணி.

வாஷிங்டன்:ஈராக்கை அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படைகள் ஆக்கிரமித்து 7வது ஆண்டு நிறைவுறுவதையடுத்து அமெரிக்காவின் பல நகரங்களில் போர் எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்றன. ஈராக்கிலிருந்து உடனடியாக ராணுவத்தை வாபஸ் பெறவேண்டும் என போராட்டக்காரர்கள் அரசை வலியுறுத்தினர். வெள்ளை மாளிகையின் வெளியிலுள்ள மதில் சுவரில் சவப்பெட்டிகளின் மாதிரிகளை வைத்த 8 போராட்டக்காரர்களை போலீஸ் கைது செய்தது.

ஏழு ஆண்டுகள் முடிந்த பிறகும் அமெரிக்க ராணுவம் ஈராக்கில் தொடர்வது வெட்கக்கேடு என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணி மரியா ஆல்வின் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இது தவறாகும், ஈராக்கில் கொல்லப்படுவது அப்பாவிகளாகும் என அவர் மேலும் கூறியுள்ளார். ஒபாமா புஷ்ஷின் கொள்கைகளைத்தான் பின் தொடர்கிறார். அதிபர் எவராயினும், கொல்லப்படுவது அப்பாவி மக்களாகும் என போராட்டத்தில் பங்கேற்றோர் கூறினர். கலிஃபோர்னியாவிலும், நியூயார்க்கிலும் போர் எதிர்ப்பு பேரணிகள் நடைப்பெற்றன

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...