இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Friday, September 8, 2017

மாவட்ட ஆட்சியரிடம் மதுக்கூர் தமுமுகவினர் கோரிக்கை மனு
மதுக்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளை 06/09/2017 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மாணவர் விடுதியினையும் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் அங்கு சமைக்கப்படும் உணவையும் ஆய்வு செய்தார்.மதிய உணவும் உட்கொண்டார்.அங்கு சென்ற மதுக்கூர் பேரூர் கழக தலைவர் முஜிபுர் ரஹ்மான்,முன்னாள் மமக மாவட்ட செயலாளர் எம்.கபார்.இன்னாள் மாவட்ட செயலாளர் ஜபருல்லாஹ்,மற்றும் ஹாஜா மைதீன்,நிசார் அகமது ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளவை.
1.மதுக்கூர் பேரூராட்சிக்கு உடனடியாக நிரந்தர செயல் அலுவலர் நியமிக்கப்படவேண்டும்.
2.மதுக்கூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 24 மணி நேரமும்பணியாற்றும் வகையில் மருத்துவர் நியமிக்கப்படவேண்டும்.
3.மதுக்கூர் பேரூந்து நிலைய கழிவறை கழிவுகள் அருகில் உள்ள மணியாரங்குளத்தில் கலப்பதால் குளம் மாசு ஏற்படுகின்றது.எனவே உடனடியாக அவை தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...