இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, May 25, 2017

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக இஸ்லாமிய பிரச்சார பேரவை மதுக்கூர் பேரூர் கழகத்தின் சார்பாக கடந்த நான்கு ஆண்டு காலமாக மதுக்கூரில்
 "வாருங்கள் நன்மையை நாடி " என்ற
தலைப்பில் இஸ்லாமிய மாநாடு,பொதுக்கூட்டம்,கண்காட்சி என மார்க்க நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்தி வருகின்றோம்.அதன் ஒரு பகுதியாக 

23/05/2017 செவ்வாய் கிழமை மாலை 7:00 மணியளவில் மதுக்கூர் நூருல் இஸ்லாம் தெருவில் சகோதரர் S.சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் மார்க்க விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சகோதரர் M.சேக் ராவுத்தர் இறைவசனம் ஓத.சகோதரர் A,தாஜுதீன் வரவேற்புரை நிகழ்த்தினர்.முதல் அமர்வில் துவக்க உரையாக சகோதரர் S.M.ஹாஜா மைதீன் அவர்கள் இப்பொதுக்கூட்டத்தின் நோக்கம் குறித்து இரத்தின சுருக்கமாக விளக்கினார்.

மெளலவி பிலால் பிர்தெளவ்ஸி அவர்கள் "மரண சிந்தனை " என்ற தலைப்பிலும்,ஆலிமா பர்வீன் பானு அவர்கள் " வட்டி ஓர் வன்கொடுமை" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்கள்.

இஷா தொழுகைக்கு பின்னர் இரண்டாவது அமர்வில் மெளலவி ஹுசைன் மன்பஈ அவர்கள் "ரமலானும் சஹாபாக்களும்" என்ற தலைப்பில் நீண்ட உருக்கமான உரையினை நிகழ்த்தினர்.ஹுசைன் மன்ப ஈ அவர்களின் உரையின் இறுதியில் தமிழக சிறைச்சாலைகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள நமது சமுதாய சொந்தங்களின் விடுதலைக்காக ரமலானில் அதிகம் அதிகம் துவா செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சிகளை M.கபார் தொகுத்து வழங்கினர்.சகோதரர் A.முகம்மது இலியாஸ்,S.முஜிபுர் ரஹ்மான்,அதிரை அகமது ஹாஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சகோதரர் மதுக்கூர் A.ஃபவாஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.    
Image may contain: 6 people, people standing



Image may contain: 2 people, people sitting

Image may contain: 4 people


Image may contain: one or more people and crowd

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...