இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, March 18, 2017

சட்டமன்ற உறுப்பினருடன் மமக வினர் சந்திப்பு
மதுக்கூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு நேர மருத்துவர் நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகின்ற 25/03/2017 சனிக்கிழமை மதுக்கூர் பேரூர் மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் ஒரு நாள் அறவழி போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது.
அதை அறிந்த தொகுதி (பட்டுக்கோட்டை )சட்டமன்ற உறுப்பினர் C.V.சேகர் அவர்கள் அரசு நிகழ்ச்சிக்காக மதுக்கூர் வருகை தந்தபோது மனிதநேய மக்கள் கட்சியினரை சந்திக்கவேண்டும் என அழைப்பு விடுத்ததின்பெயரில் தமுமுக & மமக பேரூர் கழக தலைவர் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில்,மாவட்ட செயலாளர் கபார்,பேரூர் கழக நிர்வாகிகள் நிசார் அகமது,ஹாஜா மைதீன் ஆகியோர்அரசு நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்திற்கு சென்ற மமகவினரை அன்புடன் வரவேற்று கோரிக்கையினை கேட்டு கூடிய விரைவில் மதுக்கூருக்கு இரவு நேர மருத்துவர் நியமிக்கப்படுவார் என்ற தகவலுடன் கூடுதலாக மதுக்கூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தைஅரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என பொதுமக்கள் அனைவரின் முன்னிலையில் பேசினார். மமக வினரின் போராட்டத்தை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தார். பேரூர் கழகத்தின் ஆலோசனைக்கு பின்னர் போராட்டம் குறித்த முடிவு எடுக்கப்படும். (இன்ஷா அல்லாஹ்)
(முன்னதாக மதுக்கூரில் ஏற்பட்ட குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர் C.V.சேகர் அவர்களுக்கு மதுக்கூர் பேரூர் கழத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.)




No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...