இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, October 21, 2015

மஸ்ஜித் நூர்
******************

தஞ்சாவூர் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் நிறைந்த ஊர்களில் மதுக்கூரும் ஒன்று.மதுக்கூரில் பெரியப்பள்ளி என ஒன்று பல ஆண்டு காலமாக மதுக்கூரில் இருந்து வருகின்றது.அதன் பின்னர் 21/07/1978 ஆம் ஆண்டு மதுக்கூர் பேரூந்து நிலையம் அருகாமையில் ஓர் பள்ளி நிறுவப்பட்டது.அது மேலவீதியில் இருப்பதால் மேலப்பள்ளி என அழைக்கப்பட்டது.
32 ஆண்டுகளுக்கு பின்னர் மதுக்கூர் முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்கத்தின் பெரும் முயற்சியில் புதுத்தெரு பகுதியில் ஓர் இறையில்லம் அமைக்க தீர்மானிக்கப்பட்டு  ஓர் அழகிய இறையில்லம் ஏற்படுத்தப்பட்டது.இந்த இறைஇல்லம் 26/03/2000 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.மதுக்கூரில் பெரியப்பள்ளிவாசல்,மேலப்பள்ளிவாசல் என பள்ளிவாசல்கள் இருந்தாலும் முதன்முதலில் மதுக்கூரில் பள்ளிவாசலுக்கு( " மஸ்ஜித் நூர் ")பெயர் வைத்து அழைக்கப்பட்டது என சிறப்பு பெற்றது இப்பள்ளி.மஸ்ஜித் நூர் பள்ளிவாசலை முன்னிற்று கட்டியவர் முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்கத்தின் பொருப்பாளர்களில் ஒருவரான பெரியவர் அப்துல் காதர் ஆவார்.இதற்கான பொறியாளர் அப்துல் கறீம் அவர்கள்.இப்பள்ளிவாசலுக்கான பெரும் பொருளாதார உதவியினை மதுக்கூர் பொதுநலக்கமிட்டி செய்து இருந்தது.          

முதல் நாள் இரவு 25/03/2000 பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மேலப்பள்ளியின் இமாம் அல்லாபகஷ்,பெரியப்பள்ளி இமாம் மக்தூம் பாகவி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சகோதரி வேதநாயகி அவர்களும்,பேரூராட்சி தலைவர் சகோதரி புனிதா ஜான் அவர்களும் கலந்து கொண்டார்கள்.பெண்கள் பயான் நிகழ்ச்சியில் ஜாமிய மஸ்ஜித் பரிபாலன கமிட்டி தலைவர் முகைதீன் மரைக்காயர்,முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்க பொறுப்பாளர் அப்துகாதர் ,அப்துல் ரஜாக்,மிப்தாஹுல் இஸ்லாம் சங்க செயலாளர் பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
                                                                                                           









No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...