இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Friday, October 23, 2015

மதுக்கூரில் மமக மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று 22/10/2015 சுற்றுப்பயணம் மேற்கொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும்,மாநில நிர்வாகிகளுமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்,அஸ்லம் பாட்ஷா,மாநில அமைப்பு செயலாளர் பாதுஷாஆகியோர் நேற்று மதுக்கூருக்கு வருகை தந்தனர்.மதுக்கூர் நகர எல்லையான மூத்தாக்குறிச்சி பாலம் அருகிலிருந்து தமுமுக,மமக தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக்கொண்டு இருசக்கர வாகனங்கள் குடைசூழ பேரணியாக வந்தனர்.அப்போது மகரிப் தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டதை அறிந்த பேராசிரியர் தனது வாகனத்தை நிறுத்த சொல்லி பெரியப்பள்ளிவாசலில் மகரிப் தொழுகைக்காக சென்றார்.மகரிப் தொழுகை முடிந்தது சட்டமன்ற உறுப்பினர்களை மதுக்கூர் பேராசிரியரும்,முன்னாள் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வரும்,மகான் சேக்பரீது டிரஸ்டிகளில் ஒருவருமான அப்துல் காதர் மரைக்காயர் அவர்கள் கெளரவித்தார்கள்.மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் டிரஸ்டி அப்துல் காசிம் அவர்களும்,பொருளாளர் அப்துல்லா அவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தனர்.





No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...