இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, May 26, 2014


வாருங்கள் நன்மையை நாடி...

ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழத்தின் மார்க்க பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை சார்பாக மே 25 ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் வாருங்கள் நன்மையை நாடி என்ற தலைப்பில் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
முதல் அமர்வு
மெளலவி அய்யுபுல் அன்சாரி சிராஜி அவர்களின் இறைவசனத்தோடு மாநாடு துவங்கியது.மெளலவி அன்சார் ஃஃபிர்தவ்ஸி அவர்கள் மறுமை வெற்றிக்கு வழிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து மதரஸா மாணவர்களின் அல் புரூஜ் நாடகம் நடைபெற்றது

இரண்டாவது அமர்வு
மதியம் லுஹர் தொழுகை மற்றும் உணவு இடைவேளைக்கு பின்னர் 2:30 மணிக்கு தென்காசி சகோதரர் ஃபஸ்லுதீன் அவர்கள் நிகழ்த்திய மந்திரமா ? தந்திரமா ? நிகழ்ச்சி நடைபெற்றது

தொடர்ந்து ரமலானே வருக என்ற தலைப்பில் சகோதரி ஆலிமா ஷல் ஷபில் உரைநிகழ்த்தினர்.

முன்றாவது அமர்வு
அஸர் தொழுகைக்கு பின்னர் சரியாக 4:15 மணிக்கு தொடங்கியது மெளலவி முகம்மது ரபீக் ஃபிர்தவ்ஸி அவர்கள் குர் ஆன் கூறும் குடும்ப வாழ்க்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்கள்.அவரை தொடர்ந்து சகோதரர் கோவை ஜாகீர் உசேன் அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில் மரண பயத்தை ஏற்படுத்தும் விதமாக சிறப்பாக உரைநிகழ்த்தினர்.
இலங்கையை சார்ந்த மெளலவி அப்துல் ஹமீது ஷரயி அவர்கள் தாய்மார்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து தனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பான " பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும்,அதன் தீர்வுகளும் என்ற தலைப்பில் இலங்கைத்தமிழில் மிகவும் சிறப்பான உரையினை நிகழ்த்தினர். இறுதியாக மெளலவி ஜெ.எஸ்.ரிஃபாய் அவர்கள் மாநாட்டின் தலைப்பான வாருங்கள் நன்மையை நாடி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்.மாநாட்டின் சிறப்பு அம்சங்களாக இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சி,இரத்த தானம் முகாம்,இரத்தம் கண்டறியும் முகாம்,மாற்று மத சகோதரர்களுக்கான தாவா முகாம் நடைபெற்றது.இம்மாநாட்டில் 13 யூனிட் இரத்த தானம் பெறப்பட்டது.
உள்ளூர் தாய்மார்கள் மட்டும் சுமார் ஆயிரத்திற்கு அதிகனோர் கலந்துகொண்டார்கள்.காலை முதல் மாலை வரை கலைந்து செல்லாமல் மாநாட்டின் நிகழ்ந்தப்பட்ட உரைகள கவனமுடன் கேட்டார்கள்.இம்மாநாட்டை அல்லாஹ் வெற்றி மாநாடாக மாற்றி வைத்தான் என்றால் அது மிகையல்ல: கோடை காலம் என்பதால் மாநாட்டு பந்தல் முழுவதும் சுமார் 50 மின்விசிறிகள் பொருந்தப்பட்டு இருந்தது.

எல்லா புகழும் அல்லாஹ்கே





No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...