இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, May 28, 2014


எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !

மரியாதைக்குரிய சகோதர,சகோதரிகளே தங்களின் மீது அல்லாஹ்வின் அன்பும்,அருளும் நிலவட்டுமாக !




கடந்த மே 25 அன்று மதுக்கூர் மாநகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் மார்க்கப்பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப்பேரவைச்சார்பாக நடத்தப்பட்ட ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் வெற்றி பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

மாநாட்டில் நாம் எதிர்பார்த்த அளவு ஆண்கள் கலந்து கொள்ளவில்லை என்றாலும்,நாம் எதிர்பார்க்காத அளவு தாய்மார்கள் கலந்து கொண்டது.அதுவும் காலை 10 மணிமுதல் இரவு 9 மணிவரை ஒரு நாள் முழுவதுமாக மாநாட்டு நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தது மாநாட்டிற்கு அல்லாஹ் தந்த ஓர் அருட்கொடை என வர்ணித்தால் அது மிகையன்று.
மார்க்கத்தின் பால் தங்களுக்கு இருந்த ஈடுபட்டை நமதூர் தாய்மார்கள் மாநாட்டின் இறுதி வரை கலந்து கொண்டு சிறப்பித்ததில் நிருபணம் செய்துள்ளார்கள்.தாய்மார்களுக்கும் அவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள துண்டு கோலாக இருந்த அத்தனை நபர்களுக்கும் எங்களின் நெஞ்சம் நிறைந்த நன்றி.

தங்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பில் கீழ் அனைவரும் மிகவும் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.குறிப்பாக இலங்கை மெளலவி அப்துல் ஹமீது ஷரயி அவர்களின் உரை எதார்த்தமாகவும் ஒவ்வொரு குடும்பத்தில் நிகழும் நிகழ்ச்சியாகவும் அமைத்தது அனைவருக்கும் மிகவும் பிடித்ததாக இருந்தது.சகோதரர் கோவை ஜாகீர் அவர்களின் உரையில் அதிகமான சகோதரிகள் கண்கலங்கியதை நம்மால் உணர முடிந்தது.
இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்த எங்கள் இளம் தோழர்களின் பணி மகத்தானது.அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும்.

இம்மாநாட்டிற்காக பொருளாதார உதவிகள் செய்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்களின் இனிய நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.விளம்பர உதவிகள் புரிந்த வியாபார சொந்தங்களுக்கும்,நாம் வீடு தேடி செல்லும்போதெல்லாம் இல்லை என சொல்லாமல் அள்ளிக்கொடுக்கும் அன்பான தாய்மார்களுக்கும்,கடைகளில் போய் கையோந்து சமயம் எல்லாம் கைநிறைய அள்ளிக்கொடுக்கும் வணிக பெருமக்களுக்கும்,பல வகைகளில் ஒத்துழைப்பு நல்கிய அன்பு சகோதர,சகோதரிகளுக்கும்,மாநாடுக்கு இடம் கொடுத்து உதவிய ஈகை குணம் கொண்ட சகோதரர்களுக்கும் எங்களின் இனிய நன்றியினை நெஞ்சம் நிறைவுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இம்மாநாட்டில் கலந்து கொண்ட பல தாய்மார்களின்  அடிக்கடி இதுபோன்ற நிகழ்ச்சிகள் நமதூரில் நடத்தப்படவேண்டும் என்ற தங்களின் கருத்தை ஆணித்தரமாக நமக்கு பதிவு செய்து இருந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

நடைபெற்ற மாநாடு என்பது இது வரை மதுக்கூரில் வரலாற்றில் இதுபோன்ற ஓர் நிகழ்ச்சி நடந்ததில்லை இது போன்று உள்ளூர் பெண்களும் சற்றும் கலையாமல் காலை முதல் இரவு வரை கலந்து கொண்ட நிகழ்ச்சி இதுவாக தான் இருக்கும்.நாம் மிகைப்படுத்தி எழதவில்லை கலந்து கொண்ட தங்கள் குடும்பத்தின் சகோதரிகளிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.அத்தனை நிகழ்ச்சிகளையும் அல்லாஹ் அருமையாக்கி வைத்தான்.எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !

அன்புடன்
இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை (IPP)
மதுக்கூர்

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...