இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Sunday, January 26, 2014

இந்திய குடியரசு தினம்

இந்திய தேசத்தின் 65 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) அதன் தலைமை,மாவட்ட,ஒன்றிய,நகர,கிளை அலுவலங்களில் தேசிய கொடியினை ஏற்றி சிறப்பு செய்கின்றது.மதுக்கூர் நகர தமுமுக சார்பாக கடந்த 6 ஆண்டுகளாக மதுக்கூர் கிளை அலுவலகத்தில் சுகந்திர மற்றும் குடியரசு தினங்களில் மதுக்கூர் நகர அலுவலகத்தில் தேசியக்கொடியினை பலதரப்பட்டவர்களையும் சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து தேசியக்கொடியினை ஏற்றி வைப்பது வழக்கமாக கொண்டு உள்ளது.இன்று காலை 8:15 மணிக்கு குடியரசு தினத்தில் மதுக்கூர் நகர அலுவலகத்தில் அமீரக மதுக்கூர் தமுமுக பொறுப்பாளர் சகோதரர் A.அப்துல் ரெஜாக்,சகோதரர் லக்கி அப்துல் காதர் ஆகியோர் முன்னிலையில் அமீரக மதுக்கூர் தமுமுக பொறுப்பாளர் சகோதரர் M.பஷீர் அகமது தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார்.



No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...