இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, October 30, 2012


இளையான்குடியில் பாஜகவின் ரவுடித்தனத்திற்கு பாடம் புகட்டியது தமுமுக - பத்திரிக்கை செய்திகள்


பொதுக்கூட்டத்தில் மனம்போனபடி கீழ்த்தரமாகப் பேசுவதும், தட்டிக்கேட்க ஆளில்லாததால் தறுதலைப் பேச்சுகளை மென்மேலும் வளர்ப்பதும்தான் சங்பரிவாரக் கும்பலின் கடந்தகால வரலாறு.
> காமத்தில் விஞ்சியது கன்னிமேரியா? கதீஜாவா? மணியம்மையா? என்றெல்லாம் அருவறுப்புத் தலைப்புகளில் பட்டிமன்றம் நடத்தி, தமிழகத்தில் மதவெறி நெருப்பை இந்து முன்னணி பற்றவைத்தது.
> 1995க்குப் பிறகு தமுமுக இந்தக் கயமைத்தனங்களுக்கு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் முற்றுப்புள்ளி வைத்தது.
> அண்மையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறாகப் பேசிய சங்பரிவார பேச்சு பயங்கரவாதி மீது தமுமுக வழக்குப் பதியச் செய்தது.
> வேலூரில் பாஜக பிரமுகர் டாக்டர் அரவிந்த ரெட்டியின் படுகொலையைக் கண்டித்து 26.10.2012 அன்று மாவட்டத் தலைநகரங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
> இதன் ஒரு கட்டமாக (மாவட்டத் தலைநகரமல்லாத) இளையான்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா கலந்துகொண்டு தனக்கே உரிய நடையில் மிகக் கீழ்த்தரமாகப் பேசியுள்ளார். அந்த சாக்கடைப் பேச்சிலிருந்து சில வரிகள்:
> ‘‘வேலூர் டாக்டர் அரவிந்த ரெட்டியை இடப்பிரச்சினை காரணமாகக் கொலை செய்ததாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால் காவல்துறை கைது செய்த இரண்டு முஸ்லிம் தீவிரவாதிகளை ராமநாதபுரத்தில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஒரு நாய் வெளியில் விடச் செய்துள்ளது. அந்த நாய் எந்தக் கட்சி (கூட்டத்தில் இருப்பவர்கள் மனிதநேய மக்கள் கட்சி) ‘மனிதநேயத்துக்கும் உங்களுக்கும் என்னடா சம்பந்தம், மனிதர்களைக் கொல்றவங்கடா நீங்க... ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளையும் இந்த நாய்தான் விடுதலை செய்ய வைத்திருக்கிறது’’
> என்றும், இதைவிட இன்னும் கேவலமாகவும் எச்.ராஜாவின் பேச்சு அமைந்துள்ளது. தமுமுகவையும், மமக சட்டமன்றத் தலைவர் பேரா. டாக்டர் ஜவாஹிருல்லாவையும், தனிப்பட்ட முறையில் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேருந்து நிலையம் முன்பு பள்ளிவாசலின் அருகில் நின்று எச்.ராஜா பேசுவதை அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த நகர தமுமுகவின் மக்கள் தொடர்பு அலுவலர் ஷேக் தட்டிக் கேட்டுள்ளார்.
> பாஜக மேடையின் முன்பு துணிச்சலாகப் போய் நின்று, தமுமுகவை அவதூறாகப் பேசிய ராஜாவே மன்னிப்புக்கேள், பேரா. ஜவாஹிருல்லாஹ்வை அவதூறாகப் பேசிய ராஜாவே மன்னிப்புக்கேள் என்று முழக்கமிட்டுள்ளார்.
> பாஜகவினர் அவரைத் தாக்கப் பாய்ந்துள்ளனர். உடனே காவல்துறை அதிகாரி ஒருவர் இவரை அழைத்து வந்துள்ளார்.
> இதோடு சென்றுவிடாமல், பாஜகவினர் மறுபடியும் வம்புக்கு வந்துள்ளனர். அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த முஸ்லிம்களை மிகக்கேவலமாக ஏசியுள்ளனர். மாவட்டச் செயலாளர் பி.எம்.ராஜேந்திரன் செருப்பைத் தூக்கிக் காட்டியுள்ளார். மல்லேந்திரன், ஆபாச வார்த்தைகளால் ஏசியுள்ளார்.
> இது தமுமுக தொண்டர்களையும், பொதுமக்களையும் பொறுமையிழக்க வைத்துள்ளது.
> அருவறுக்கத்தக்க நடவடிக்கையில் இறங்கியவர்களுக்கு சரமாரி அடி உதைகள் விழ, பாஜக குண்டர்கள் தெருத்தெருவாக ஓடியுள்ளனர்.
> ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்ட தமுமுகவினர், உரிய பாடம் பெற்றபிறகும் தப்பி ஓடமடியாமல் தவித்த பாஜகவினரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
> 50 பேர் கொண்ட பாஜகவின் குண்டர் கும்பல் இளையான்குடியில் இப்படி ஒரு பாடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
> மமக மாநில அமைப்புச் செயலாளர் மௌலா நாசர், மாவட்டத் தலைவர் சைபுல்லா, பொருளாளர் காஜா மற்றும் நிர்வாகிகள், கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தி அசம்பாவிதத்தைத் தடுத்துள்ளனர்.
> இனியேனும் அருவறுப்புப் பேச்சுகளை பாஜக கும்பல் நிறுத்திக் கொண்டால் நல்லது.

-எழில் யாசிர்
 

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...