இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, March 29, 2012

பிரதமருடன் முஸ்லிம் எம்.பி.க்கள் சந்திப்பு.

மூத்த பத்திரிக்கையாளர் செய்யது முஹம்மது காஸிமி டெல்லி காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு வருகிறார். காஸிமியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் நீதிபதியிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, காஸிமிக்கு குடிக்க தண்ணீர் கூட ஒழுங்காகக் கொடுப்பதில்லை. அவருக்கு கொடுக்கும் உணவில் அதிக உப்பு சேர்க்கப்பட்டுள்ளது.அவரை விசாரணை என்ற பெயரில் தூங்க விடுவதில்லை. அவர் செய்யாதக் குற்றத்தை ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார். இஸ்ரேலிய தூதரக காரில் வைக்கப்பட்ட காந்தக குண்டுவெடிப்பு வழக்கு என்பதால் இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொஸாத் பிரிவினரும் விசாரிக்கின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு வகையான முறையில் காசிமி சித்திரவதை செய்யப்படுகிறார் என்று வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையின் செயலைக் கண்டித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, மூத்த பத்திரிக்கையாளர் காஸிமிக்கு இழைக்கப்படும் கொடுமைகளை ஆதாரத்துடன் விளக்கினர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் அப்பாவி முஸ்லிம் பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்தனர். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிடுகையில், இதுபோன்ற செயல் கவலை அளிப்பதாக குறிப்பிட்டு, இதுகுறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் விசாரிப்பதாகவும் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் சுல்தான் அஹமது எம்.பி. உட்பட பத்து எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

மூத்த பத்திரிக்கையாளருக்கே இந்த நிலையென்றால் சாதாரண பாமர முஸ்லிம்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு இந்த சம்பவம் மிகப்பெரிய சான்றாக உள்ளது.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...