இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, March 10, 2012

கலாச்சார சீரழிவு அதிகரித்து வருகிறது-தமுமுக கவலை


சவுதி அரேபியா கிழக்கு மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக அல்ஹஸா நகர புதிய நிர்வாகிகள் தேர்தல் மற்றும், “நமது இல்லங்களில் இஸ்லாம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் அல்ஹஸா நகரில் நடைபெற்றது.அல்ஹஸா மாநகர தமுமுக தலைவர் அஹமது சுகர்னோ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அல்ஹஸா, மாநகர தமுமுக பொருளாளர் ஜெக்கரிய்யா வரவேற்புரையாற்றினார்.இக்கூட்டத்தில் சவுதி அரேபியா கிழக்கு மண்டல தமுமுக துணைத்தலைவரும், ஊடகத்துறை பொறுப்பாளருமான அப்துல் காதர், பொதுச்செயலாளர் இஸ்மாயில், பொருளாளர் நஸ்ருத்தீன் சாலிஹ், துணைச் செயலாளர் அப்துல் அலீம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்இரு அமர்வுகளாக நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல் அமர்வில் “நமது இல்லங்களில் இஸ்லாம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மவ்லவி பின்னத்தூர் அப்துல் ஹக் ஜமாலி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.மவ்லவி பின்னத்தூர் அப்துல் ஹக் ஜமாலி தனது தலைமையுரையில் “கலாச்சார சீரழிவு தற்போது சமூகத்தில் அதிகரித்து வருகிறது. இப்போக்கு கவலையளிக்கிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு இஸ்லாம் கூறும் ஒழுக்கவியல் மாண்புகளை எடுத்து சொல்லி வளர்க்க வேண்டும். இதற்கு வெளிநாட்டில் இருக்கும் பெற்றோர்கள் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.வெள்ளிக்கிழமை சிறப்பு பேருரையினை மவ்லவி பின்னத்தூர் அப்துல் ஹக் ஜமாலி நிகழ்த்தினார். தொழுகை – உணவு இடைவேளைக்கு பின்னர் கூடிய இரண்டாம் அமர்வில் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக மண்டல துணைத்தலைவர் அப்துல் காதர் பணியாற்றினார்.தலைவர் பதவிக்கு அஹமது சுகர்னோ மட்டுமே முன்மொழியப்பட்டதால், அஹமது சுகர்னோ மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவர்களாக ஜெக்கரிய்யா(தமுமுக), பரக்கத்துல்லாஹ்(மமக),, செயலாளர்களாக லால்பேட்டை அமானுல்லாஹ்(தமுமுக) ஆவனியாபுரம் ஷஹாபுதீன்(மமக), பொருளாளராக அன்வர், துணைச்செயலாளர்களாக ராஜகெம்பீரம் சிக்கந்தர் பாட்சா, கபீர், அப்துல் ஹக்கீம், ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பின்னர் தமிழகத்திலிருந்து அலைப்பேசி வழியாக மமக பொதுச்செயலாளார் தமீமுன் அன்சாரி உரையாற்றினார். மண்டல நிர்வாகிகள் உரை, மற்றும் உறுப்பினர்கள் கலந்துரையாடலுக்கு பின்னர் கூட்டம் நிறைவு பெற்றது.இறுதியாக அல்ஹஸா மாநகர தமுமுக துணைச்செயலாளர் ராஜகெம்பீரம் சிக்கந்தர் பாட்சா நன்றியுரையாற்றினர்..கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமுமுக மாநகர தலைவர் அஹமது சுகர்னோ தலைமையில் ஆவனியாபுரம் ஷஹாபுதீன், கந்தகுமாரன் அமானுல்லாஹ், கோட்டக்குப்பம் அப்துல் ரஹ்மான், பின்னத்தூர் ரபி, பரங்கிப்பேட்டை பாரூக் ராஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
நன்றி:- இந்நேரம்.காம்

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...