இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Friday, June 21, 2013

மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

முத்துப்பேட்டை காதர் மைதீன் அவர்களின் மகளும்,மதுக்கூர் இடையகாடு முகம்மது யூசுப் அவர்களின் மனைவியும்,பஷீர் அகமது (அர் ரஹ்மான் கல்விக்குழு உறுப்பினர்) அவர்களின் மாமியாருமான ஹபீபுன்னிஸா அவர்கள் முத்துப்பேட்டையில் இன்று (21/06/2013)வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Monday, June 10, 2013

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
                                                                ( அல்குர் ஆன் :89:27-30)


மதுக்கூர் சூரியத்தோட்டம்,மணியாங்குளம் எதிரில் மர்ஹும் நாராண்டியார் வீட்டுS.முகைதீன் பாவா அவர்களின் மனைவியும்,M.சாகுல்ஹமீது அவர்களின் தாயாருமான பாப்பாத்தி அம்மாள் என்கிற ரபிஹா பீவி அவர்கள் இன்று (10/06/2013) வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Saturday, May 25, 2013


அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !

எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
    
                                                                      ( அல்குர் ஆன் :89:27-30)



மதுக்கூர் பெரியச்செட்டித்தெரு  மர்ஹும் ஹபீப் முகம்மது அவர்களின் மகனும்,உரக்கடை அப்துல் ரொஜக் அவர்களின் மருமகனுமான சேட் என்கின்ற அப்துல்காதர் அவர்கள் இன்று 25/05/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா  செய்வோம்.

Wednesday, May 15, 2013

திருமண வாழ்த்து

மணமகன்


R.இம்ரான் 


(த/பெ S.ரகுமத்துல்லா)

மணமகள்

S.முகைதீன் பீவி

(த/பெ A. சதக்கத்துல்லா)

மணநாள்

ரஜப் மாதம் பிறை 5 (16.05.2013) வியாழக்கிழமை
மணவாழ்த்து

பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஐமஅ பைனகுமா ஃபீஹைர்

Saturday, May 11, 2013

மதுக்கூர் மேலசூரியத்தோட்டம் மர்ஹும் மா.செ.உதுமான்ஷா ராவுத்தர் 

அவர்களின் மகன் மா.செ.ஹலீல் ரஹ்மான் அவர்கள் இன்று 12/05/2013 

வஃபாத்தாகிவிட்டர்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
மதுக்கூரில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

மதுக்கூரில் பரபரப்பு

பாரதீய ஜனதா கட்சியின் கண்டனப்பொதுக்கூட்டம் (மத்திய அரசை கண்டித்து) இன்று மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் நடைபெறுகின்றது.இப்பொதுக்கூட்டத்தின் காரணமாக முக்கூட்டுச்சாலைவழியாக பட்டுக்கோட்டை செல்லும் அனைத்து வாகனங்களும் காலை முதலே ஒருவழிப்பாதைவழியாக திருப்பிவிடப்பட்டது.மதுக்கூரில் அரசியல்,சமுதாய அமைப்புகள் பொதுகூட்டங்கள் நடத்தினால் பேரூந்து நிலையத்தில் தான் நடைபெறுவது வழக்கம்.வழக்கத்திற்கு மாறாக இப்பொதுக்கூட்டத்திற்கு முக்கூட்டுச்சாலையில் (பட்டுக்கோட்டை ரோட்டில்) இடம் கொடுக்கப்பட்டுள்ளதை உணர்ந்த மதுக்கூர் நகர தமுமுகவினர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாரை தொடர்பு கொண்டு வழக்கத்திற்கு மாறாக பொதுமக்களுக்கு மிகவும் இடையூறான பகுதியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது என எடுத்துரைத்த போது.இனிமேல் பேரூந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை.வரும் காலங்களில் முக்கூட்டுச்சாலையில் மட்டுமே பொதுகூட்டங்கள் நடத்திக்கொள்ளலாம் என்ற மழுப்பல் பதில் ஒன்றை அளித்தார்.

இப்பொதுக்கூட்டத்தில் BJP மாநில தலைவர் பொன்.இராதகிருஷ்ணன் பேசுகின்றார்.இன்று மதுக்கூரில் உள்ள தர்காவில் கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடைபெறுவதல் கூடுதல் பதற்றம் நிகழ்கின்றது.இதன்காரணமாக மதுக்கூரில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளார்கள்.விநாயக சதுர்த்தி ஊர்வலத்திற்க்கு குவிக்கப்படுவது போன்று போலீஸார் மதுக்கூரில் குவிக்கப்பட்டுள்ளார்கள். மெயின்ரோடு,சூரியத்தோட்டம் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.ஒருவிதமான பதற்றம் மதுக்கூரில் நிலவி வருகின்றது.

Thursday, May 2, 2013


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மதுக்கூர் நகர கிளையின் சார்பாக கடந்த 27/04/2013 அன்று உலகளாவிய இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சியும் மற்று மாலை 6:30 மணியளவில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.

காலை 11:00 மணியளவில் தமுமுக மாநில செயலாளர் சகோதரர் அப்துல் சமது அவர்கள் இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்தார்கள்.தொடர்ந்து பொதுமக்கள் புகைப்பட கண்காட்சியினை பார்க்க வந்த வண்ணம் இருந்தார்கள்.குறிப்பாக பெண்கள் தங்களின் குடும்பத்தினருடன் கூட்டம் கூட்டமாக பார்க்க வந்தார்கள்.புகைப்பட கண்காட்சியினை பார்த்து அழுத வண்ணம் சென்றார்கள்.முஸ்லிம் அல்லாத சகோதர,சகோதரிகளும் பெருமளவு புகைப்பட கண்காட்சியினை பார்க்க வந்தனர்.


புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டவர்களில் ஒருசிலரின் கருத்துக்கள்:


  • பிரார்த்தனை மட்டும் தான் அல்லாஹ் மாற்றம் கொடுப்பான்.விழிப்புணர்வு கண்காட்சி பல் இடங்களில் தொடர்ந்து நடத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.(கே.என்.எம்)




  • இதை பார்த்து எனது நரம்புகள் துடிக்கின்றது .(அகமது கபீர்.)



  • இந்த கண்காட்சியினை பார்த்து வார்த்தைகள் வரவில்லை.மனிதாபிமானம் இல்லா உலகம்.(வி.சுமதி)



  • கேவலம் மனிதர்களிடையே ஜாதி,மதம் வேறுபாடின்றி வாழவேண்டும்.மனிதர்களாக பிறந்த நாம் இந்த பூமியை கடந்த செல்வது ஒருமுறை மட்டுமே.இந்த நிலையில் ஜாதி மதம் தேவையில்லை விஞ்ஞான உலகில் ஒரு உயிரில் இருந்து வந்த தான் மனித இனம் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை.எனவே அனைவரும் சொந்தகளாக வாழ வேண்டும்.(T.இரவிச்சந்திரன்.விக்ரமம்)



  • இனிமேலும் ஏதேனும் நடக்காமல் அல்லாஹ்தான் உதவி செய்யவேண்டும்.நாம் அனைவரும் அல்லாஹ்விடம் துவா செய்யவேண்டும்.அல்லாஹ் இதே போல் தண்டனையை அவர்களுக்கும் கூடிய விரைவில் கொடுப்பான்.நிச்சயம் கொடுக்க வேண்டும்.(திருமதி .சர்புதீன்)



  • சுப்ஹானல்லாஹ்.முஸ்லிம் இனப்படுகொலைகளை பார்க்கும் போது என் கண்ணில் இரத்தம் வந்துவிட்டது.முஸ்லிம்களுக்கு எதிரான அட்டுழியங்கள் எந்த நாட்டில் நடந்தாலும் நாம் அனைவரும் ஒன்று சேந்து அழிக்குமாறு ஏக இறைவனிடம் துஆ செயதவளாக ஆமீன்.(திருமதி பகத்)

  • அல்ஹம்துலில்லாஹ்..மதுக்கூர் மக்களுக்கு இஸ்லாமிய சமுகத்திற்கு எதிராக நடக்கும் இந்த அளவு கொடுமைகளை மிகவும் துணிவுடன் வெளிகொண்டு இருப்பது மனதுக்கு ஒரு புதிய நம்பிக்கையினை ஏற்படுத்திஉள்ளது.உங்களின் பணிசிறக்க வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கின்றேன். (எஸ்.ஜெ.சாகுல்)

  • இனப்படுகொலைக்கு எதிரான புகைப்பட கண்காட்சியின் மூலம் மனிதசமூகத்திற்க்கு எதிராக நடக்கும் கொடுமைகளை மறைக்கப்பட்ட உண்மைகளை தமுமுக மக்கள் மன்றத்தில் எடுத்துவைத்து நீதிகேட்டுள்ளது.எங்கு மனிதகுலத்திற்கு தீங்கு நடந்தாலும் தன் குரலால் நீதி கேட்டது அதன் தனிதன்மையை பறைசாற்றியுள்ளது.எல்ல புகழும் இறைவனுக்கு (தாஜுதீன்)

  • இஸ்லாத்தின் வெற்றி ஒற்றுமையில் தான் உள்ளது.மதுக்கூரில் பல மக்கள் பார்க்காத அரிய புகைப்படங்கள் அமைந்து இருந்தன.அல்ஹம்துலில்லாஹ். (என்.சேக்)



இதுபோன்று பலதரப்பட்ட மக்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செயதார்கள்.















சமுதாய விழிப்புணர்வு புகைப்படங்கள்













மாலை நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சகோதரர் முகம்மது ராசிக் அவர்களின் இறைவசனத்துடன் இனிதே தொடங்கியது.மாவட்ட தலைவர் அப்துல் ஜபார் அவர்கள் தலைமையில் நகர செயலாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர்.


சகோதரர் மதுக்கூர் ஃபவாஸ்கான் அவர்கள் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினர்.மதுக்கூர் கே.ராவுத்தர்ஷா அவர்கள் தமுமுக வின் சமுதாய பணிகள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினர்.நிறைவாக தமுமுக மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது அவர்கள் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ற தலைப்பில் முஸ்லிம்களுக்கு எதிராக பின்னப்படும் சதிவேலைகளை தோலுரித்துகாட்டினர்.

இறுதியாக இலியாஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.












Saturday, April 27, 2013


மதுக்கூர் புதுத்தெரு சாலியப்பா வீட்டு அண்ணா இல்லம் ஆரிப் அவர்கள் சிங்கப்பூரில் இன்று 27/04/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

உலகலவிய இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி


இன்று 27/04/2013 காலை 11:30 மணியளவில் மதுக்கூர் பெரியப்பள்ளிவாசல் அருகில் மதுக்கூர் நகர தமுமுக சார்பாக நடத்தப்படும் இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சியினை தமுமுக மாநில செயலாளர் சகோதரர் அப்துல் சமது அவர்கள் திறந்து வைத்தார்கள்.
































Friday, April 26, 2013

இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் மாநகரில் நாளை 27/04/2013 சனிக்கிழமை 

(இன்ஷா அல்லாஹ்) காலை 10:30 மணி முதல் இரவு 6:30 மணிவரை 

உலகில் நடைபெறும் இனப்படுகொலைகளை சித்தரிக்கும் மாபெரும் 

புகைப்பட கண்காட்சி நடைபெறுகின்றது.

இப்புகைப்பட கண்காட்சியினை நமது குடும்பத்தினர் பார்க்க சொல்லி 

ஆர்வமூட்டுங்கள்.

அதனை தொடர்ந்து இரவு 6:30 மணியளவில் சமுதாய விழிப்புணர்வு 

பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.

இப்பொதுக்கூட்டத்தில் 


தமுமுக மாநில பொதுச்செயலாளர் 

சகோதரர் அப்துல் சமது அவர்கள் 

கலந்து கொண்டு



"முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்"
தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துகின்றார்.

அனைவரும் வருக.

Wednesday, April 24, 2013


மதுக்கூர் இடையகாடு (பெரியார் நகர்) மர்ஹும் KPMK பக்கீர் மைதீன் அவர்களின் மனைவியும்,KPM முபாரக் அலி அவர்களின் தாயாருமான கமருன்னிஷா அவர்கள் இன்று 24/04/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
 
Mubarak ali contact No : 99650 86120

Saturday, April 20, 2013


மதுக்கூர் இடையகாடு மருகை என்கின்ற மர்ஹும் முத்துமரைக்காயர் அவர்களின் மனைவியும்,கறிக்கடை மர்ஹும் அப்துல் ஜலீல்,சேட் (எ) நைனாமூசா,உமர் அலி,உஸ்மான் அலி,ஹாஜா மைதீன் ஆகியோரின் தாயாருமான பாத்திமா ஜொகரா அவர்கள் இன்று 20/04/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Wednesday, April 17, 2013


மதுக்கூர் புதுத்தெரு (மஸ்ஜித் நூர் தெரு பள்ளித்தெரு) பருப்பானத்து வீட்டு காதர் மைதீன்,குத்புதீன்,அன்வர்தீன் ஆகியோரின் தகப்பனர் அப்துல் மஜீது அவர்கள் இன்று 17/04/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Tuesday, April 16, 2013


மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தண்ணீர்,மோர் பந்தல்கள் 

கடும் கோடை காலத்தில் மக்களுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர்,மோர் பந்தல்கள் தாய்கழகம தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் தொடக்கப்பட்ட காலத்திலிருந்து பொதுமக்களுக்கு சமுதாய பேரியக்கம் தமுமுக சார்பாக வைக்கப்பட்டு வருவது வழக்க்ம்.

தமுமுகவின் வழிகாட்டலின்படி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தமிழகமெங்கும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.இன்று 16/04/2013 மனிதநேய மக்கள் கட்சி மதுக்கூர் நகர கிளையின் சார்பாக 9வது வார்டுக்கு உட்பட்ட முகம்மதியர்தெரு,மகாசூப்பர் மார்க்கெட்,கொல்லைத்தெரு,பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலை ஆகியவற்றின் 
ஜங்ஷனில் தண்ணீர் பந்தல் நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.இதில் பொதுமக்களுக்கு ஐஸ்கீரிம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் நிசார் அகமது,கவுன்சிலர் கபார்,பவாஸ்,ரமீஸ்,மாலிக்,மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்



.







Thursday, April 11, 2013


மதுக்கூர் பள்ளிவாசல் தெரு வளநாடு மளிகை அப்துல்சுபான்,மர்ஹும் அப்துல் சமது,அமானுல்லா,ஜமால் முகம்மது ஆகியோரின் தாயார் ஜைத்துன் அம்மாள் அவர்கள் இன்று 11/04/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Saturday, April 6, 2013


புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே

மதுக்கூர் இடையகாடு பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடையினை கண்டித்து மதுக்கூர் நகர மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கடந்த 26/03/2013 அன்று மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்து அதற்கான களப்பனியினை செய்தனர்.போராட்டத்தின் வீரியத்தினை அறிந்துகொண்ட அரசுத்துறை மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இடையகாடுவாசிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.பேச்சுவார்த்தையில் ஒருசில நாட்களில் புதிய மின் மாற்றி அமைக்கப்படும் என எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர்.அதன்படி கடந்த 02/04/2013 அன்று இடையகாடு பகுதியில் 100 KV மின் திறன் கொண்ட  புதியமின்மாற்றி வைக்கப்பட்டது.எல்லா புகழும் அல்லாஹ்கே !

இருந்தும் தெருவிளக்குகள் இடையகாடு பகுதியில் இன்னும் சரியாக எரியவில்லை.வீட்டு பகுதிகளுக்கு சீரான மின்சாரம் கிடைக்கின்றது.தெருவிளக்குகள் கூடிய விரைவில் சரிசெய்யப்படும் என கூறியுள்ளார்கள்.

துரிதமாக செயல்பட்ட மின்வாரியத்திற்கு எங்களின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.



Wednesday, April 3, 2013


மதுக்கூரில் சாலை மறியல் போராட்டம்

மதுக்கூர் ஆற்றாங்கரை மெயின்ரோட்டில் (பழைய சுப்பையன் கிளப் அருகில்) பெண்கள் குளிக்கும் கரை மிக அருகில் புதிய அரசுமதுபானக்கடை நேற்று திடீர் என திறக்கப்பட்டது.அதிர்ச்சி அடைந்த அப்பகுதிமக்கள் எப்படியும் அரசுமதுபானக்கடையினை அகற்றவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்ட அப்பகுதி மக்கள் இன்று காலை 10 மணியளவில் ஆற்றாங்கரை அருகில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்பபோராட்டத்தில் 100 பெண்கள் உட்பட பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள்,தமுமுக மதுக்கூர் நகர நிர்வாகிகள்,எஸ்டிபிஐ நகர நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சியினர் என 200 க்கும் அதிகமனோர் கலந்து கொண்டனர்.

போராட்ட இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை ஆர்டிஓ ரகுமத்துல்லகான்,மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் வருகை தந்து இரண்டு நாளில் கடை இடமாற்றம் செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததினை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.


புகழ் அமைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே !

மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் பொதுமக்களுக்கு மிகவும் இடையூராக இருந்த அரசு மதுபானக்கடைகளை அப்புறப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் களம்கண்ட சமுதாய பேரியக்கமாம் தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக்கழகத்தின் மதுக்கூர் நகர கிளை தொடர் முயற்சிகளை மேற்கொண்டது.அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் முக்கூட்டுச்சாலையில் உள்ள இரு டாஸ்மாக் கடைகளில் ஒன்று இன்று முதல் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது.மற்றொன்று புதிய கட்டிடத்தில் வேறு இடத்திற்கு இடம் மாற்றப்படும் என கலால்துறையினர் உறுதியளித்து உள்ளார்கள்.
மேற்படி டாஸ்மாக் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் CM Cell மூலமாக கோரிக்கை மனு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கொடுக்கப்பட்டது.Cm Cekk மூலமாகவும் கோரிக்கை ஏற்கப்பட்டதாக பதில் அனுப்பப்பட்டுள்ளது.விரிவான செய்திகள்  விரைவில் (இன்ஷா அல்லாஹ்)

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
 

Sunday, March 31, 2013


மதுக்கூர் சிரமேல்குடிரோடு தல்பார் வீட்டு மர்ஹும் அப்துல் ஜப்பார் அவர்களின் மகன் அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று 31/03/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்கின்றோம்.

Saturday, March 9, 2013


மதுக்கூர் நூருல் இஸ்லாம் தெரு அப்துல்கனி.அப்துல்வஹாப்,இமாமூதின்,இல்மூதீன் ஆகியோரின் தகப்பனார் அப்துல் மஜீது அவர்கள் நேற்று 08/03/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்




மதுக்கூர் சூரியத்தோட்டம் மர்ஹும் M.S.அல்லாபிச்சை அவர்களின் மருமகன் நைனா மூசா அவர்கள் 08/03/2013 இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...