இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, May 2, 2013


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மதுக்கூர் நகர கிளையின் சார்பாக கடந்த 27/04/2013 அன்று உலகளாவிய இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சியும் மற்று மாலை 6:30 மணியளவில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.

காலை 11:00 மணியளவில் தமுமுக மாநில செயலாளர் சகோதரர் அப்துல் சமது அவர்கள் இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்தார்கள்.தொடர்ந்து பொதுமக்கள் புகைப்பட கண்காட்சியினை பார்க்க வந்த வண்ணம் இருந்தார்கள்.குறிப்பாக பெண்கள் தங்களின் குடும்பத்தினருடன் கூட்டம் கூட்டமாக பார்க்க வந்தார்கள்.புகைப்பட கண்காட்சியினை பார்த்து அழுத வண்ணம் சென்றார்கள்.முஸ்லிம் அல்லாத சகோதர,சகோதரிகளும் பெருமளவு புகைப்பட கண்காட்சியினை பார்க்க வந்தனர்.


புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டவர்களில் ஒருசிலரின் கருத்துக்கள்:


  • பிரார்த்தனை மட்டும் தான் அல்லாஹ் மாற்றம் கொடுப்பான்.விழிப்புணர்வு கண்காட்சி பல் இடங்களில் தொடர்ந்து நடத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.(கே.என்.எம்)




  • இதை பார்த்து எனது நரம்புகள் துடிக்கின்றது .(அகமது கபீர்.)



  • இந்த கண்காட்சியினை பார்த்து வார்த்தைகள் வரவில்லை.மனிதாபிமானம் இல்லா உலகம்.(வி.சுமதி)



  • கேவலம் மனிதர்களிடையே ஜாதி,மதம் வேறுபாடின்றி வாழவேண்டும்.மனிதர்களாக பிறந்த நாம் இந்த பூமியை கடந்த செல்வது ஒருமுறை மட்டுமே.இந்த நிலையில் ஜாதி மதம் தேவையில்லை விஞ்ஞான உலகில் ஒரு உயிரில் இருந்து வந்த தான் மனித இனம் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை.எனவே அனைவரும் சொந்தகளாக வாழ வேண்டும்.(T.இரவிச்சந்திரன்.விக்ரமம்)



  • இனிமேலும் ஏதேனும் நடக்காமல் அல்லாஹ்தான் உதவி செய்யவேண்டும்.நாம் அனைவரும் அல்லாஹ்விடம் துவா செய்யவேண்டும்.அல்லாஹ் இதே போல் தண்டனையை அவர்களுக்கும் கூடிய விரைவில் கொடுப்பான்.நிச்சயம் கொடுக்க வேண்டும்.(திருமதி .சர்புதீன்)



  • சுப்ஹானல்லாஹ்.முஸ்லிம் இனப்படுகொலைகளை பார்க்கும் போது என் கண்ணில் இரத்தம் வந்துவிட்டது.முஸ்லிம்களுக்கு எதிரான அட்டுழியங்கள் எந்த நாட்டில் நடந்தாலும் நாம் அனைவரும் ஒன்று சேந்து அழிக்குமாறு ஏக இறைவனிடம் துஆ செயதவளாக ஆமீன்.(திருமதி பகத்)

  • அல்ஹம்துலில்லாஹ்..மதுக்கூர் மக்களுக்கு இஸ்லாமிய சமுகத்திற்கு எதிராக நடக்கும் இந்த அளவு கொடுமைகளை மிகவும் துணிவுடன் வெளிகொண்டு இருப்பது மனதுக்கு ஒரு புதிய நம்பிக்கையினை ஏற்படுத்திஉள்ளது.உங்களின் பணிசிறக்க வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கின்றேன். (எஸ்.ஜெ.சாகுல்)

  • இனப்படுகொலைக்கு எதிரான புகைப்பட கண்காட்சியின் மூலம் மனிதசமூகத்திற்க்கு எதிராக நடக்கும் கொடுமைகளை மறைக்கப்பட்ட உண்மைகளை தமுமுக மக்கள் மன்றத்தில் எடுத்துவைத்து நீதிகேட்டுள்ளது.எங்கு மனிதகுலத்திற்கு தீங்கு நடந்தாலும் தன் குரலால் நீதி கேட்டது அதன் தனிதன்மையை பறைசாற்றியுள்ளது.எல்ல புகழும் இறைவனுக்கு (தாஜுதீன்)

  • இஸ்லாத்தின் வெற்றி ஒற்றுமையில் தான் உள்ளது.மதுக்கூரில் பல மக்கள் பார்க்காத அரிய புகைப்படங்கள் அமைந்து இருந்தன.அல்ஹம்துலில்லாஹ். (என்.சேக்)



இதுபோன்று பலதரப்பட்ட மக்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செயதார்கள்.















சமுதாய விழிப்புணர்வு புகைப்படங்கள்













மாலை நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சகோதரர் முகம்மது ராசிக் அவர்களின் இறைவசனத்துடன் இனிதே தொடங்கியது.மாவட்ட தலைவர் அப்துல் ஜபார் அவர்கள் தலைமையில் நகர செயலாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர்.


சகோதரர் மதுக்கூர் ஃபவாஸ்கான் அவர்கள் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினர்.மதுக்கூர் கே.ராவுத்தர்ஷா அவர்கள் தமுமுக வின் சமுதாய பணிகள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினர்.நிறைவாக தமுமுக மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது அவர்கள் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ற தலைப்பில் முஸ்லிம்களுக்கு எதிராக பின்னப்படும் சதிவேலைகளை தோலுரித்துகாட்டினர்.

இறுதியாக இலியாஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.












No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...