இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, December 21, 2016

புதிய ஆம்புலன்ஸுக்கு நிதி தாரீர்..
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்((தமுமுக) மதுக்கூர் பேரூர் கழகம் சார்பாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்து சமுதாய மக்களுக்கும் பயன்படுகின்ற வகையில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டு சிறப்புடன் சேவையை செய்து வருகின்றோம்.அல்ஹம்துலில்லாஹ்.

தற்போது பழைய ஆம்புலன்ஸை மாற்றி புதிய ஆம்புலன்ஸ் மூலம் சேவையை இன்னும் துரிதப்படுத்தலாம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் புதிய ஆம்புலன்ஸ் வாங்குவதற்காக நிதி வேண்டி உங்களை எல்லாம் சந்திக்க வர உள்ளோம்.இன்ஷா அல்லாஹ்.
அள்ளிக்கொடுக்கும் அல்லாஹ்வின் நல்லடியார்களே ஆம்புலன்ஸ் சேவைக்கான நிதி தாரீர் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக)
மதுக்கூர் பேரூர் கழகம்.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...