இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, October 11, 2016

வக்ப் செய்யப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)
அல்லாஹ்வின் பேராருளாலும் மறைந்த பெரியவர்கள் மர்ஹும் அப்துல்லா (பஞ்சாயத்துபோர்டு),மர்ஹும் முகம்மது சாலின் (மூட்டை பூச்சி ஆலிம்ஷா) உதவியுடனும்,மறைந்த பெரியவர் மர்ஹும் ANM முகம்மது அலி ஜின்னா அவர்களின் சீரிய நிர்வாகத்தாலும்,உழைப்பாலும் பல முயற்சிகள் மேற்கொண்டதின் காரணமாக அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட இறை சொத்துக்களான கீழ்கண்ட சொத்துக்களூம் மற்றும் அதன் சார்பு நிர்வாகமும் தற்போது மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி வசம்வக்ப் செய்யப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்.




1.மதுக்கூர் இராமம்பாள் புரத்தில் உள்ள தக்வா பள்ளிவாசல் (சமீபத்தில் சகோதரர் கமாலுதீன் ஹதியா செய்த 4 குழி உட்பட மொத்தம் 28 குழி மற்றும் பயன்பாட்டில் உள்ள பொருட்கள்)
2.மதுக்கூர் இந்திரா நகரில் சகோதரர் நத்தர்ஷா அவர்கள் ஹிப்பத் மூலம் அளித்த இடம்.(தற்போதைய மக்கா மஸ்ஜித்)
3.மதுக்கூர் இடையகாடு ஷேக் நசுருதீன் (பூண்டியார்) அவர்கள் ஹிப்பத் மூலம் எழுதி கொடுத்த இடம் (தற்போதைய குர் ஆன் மதரஸா)
4.மதுக்கூர் படப்பைக்காட்டில் முகம்மது ராசுத்தர் மகன் முகம்மது தாவூத் அளித்த இடம்.
மேற்கண்ட அனைத்தும் மர்ஹும் ANM முகம்மது அலி ஜின்னா அவர்களால் அல்லாஹ்வின் உதவியினை கொண்டு உள்ளூர் ,வெளியூர் கொடை உள்ளம் கொண்ட நன்கொடையாளர்களால் மிகச்சீரிய மார்க்கப்பணிக்காக உழைப்பாலும் சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது.இப்பணிகளுக்காக உழைத்த சகோதரர்கள் ஜமால் முகம்மது (ஆனந்த),SPN நைனா முகம்மது,VM முகம்மது இஸ்ஷாக்,மர்ஹும் ASM ஜக்கிரியா,A.ஜாகீர் உசேன்,NPMF ரியாஸ் அகமது,SMR அப்துல் ஹமீது,KNM அப்துல் மாலிக் ஆகியோருக்கு அல்லாஹ் அருள் புரியட்டுமாக.
கடந்த இரண்டு வருடங்களாக இச்சொத்துக்களை பெரியப்பள்ளி நிர்வாகத்திடம் வக்ப் செய்யப்போவதாக மறைந்த ANM முகம்மது அலி ஜின்னா அவர்கள் கூறி அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.தற்போது அன்னாரின் மறைவுக்கு பின்னர் அன்னாரின் எண்ணத்தின் பெயரில் அல்லாஹ்வின் கிருபையால் அனைத்து சொத்துக்களும் ஜாமியா மஸ்ஜித் பெயரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ANM முகம்மது அலி ஜின்னா அவர்களின் இல்லத்தில் வைத்து ஜாமியா மஸ்ஜித் நிர்வாகத்திடம்வக்ப் செய்யப்பட்டு உள்ளது.

இத்தகைய நற்பணிக்காக உழைத்த அனைவருக்கும் அல்லாஹ் என்றென்றும் அருள் புரியட்டும்.



No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...