இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Sunday, December 13, 2015

மதுக்கூர் முக்கிய பிரமுகர்கள் பேரூர் கழக (தமுமுக) அலுவலகம் வருகை
சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலிருந்து மக்களை காப்பாற்றும் பணிகளிலும்,நிவாரண உதவிகள் செய்யும் பணிகளிலும் இஸ்லாமிய அமைப்புகள் இறை பொருத்தத்தை நாடி சிறப்பாக செய்துவருகின்றார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
குறிப்பாக தமுமுக & மமக தீபாவளிக்கு முன்னர் ஏற்பட்ட பெரும் மழையிலிருந்து தனது நிவாரணப்பணிகளை தொடர்ந்து செய்துவருகின்றது.
மதுக்கூர் பேரூர் கழக தமுமுக மற்றும் மமக சார்பாக கடந்த 08/12/2015 செவ்வாய்கிழமை முதல் கட்ட
நிவாரணப்பொருட்கள்டன் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவி செய்து வந்ததை அறிவீர்கள்.சுமார் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட தொகை மதிப்புள்ள நிவாரணப்பொருட்களுடன் இரண்டாம் கட்டமாக இன்று 13/12/2015 மதுக்கூர் பேரூர் கழக தமுமுக கடலூர் மாவட்டம் புறப்பட்டு சென்றுஅங்குள்ள நிர்வாகிகளின் ஆலோசனையின்படி நிவாரண உதவிகள் செய்துவருகின்றார்கள்.
மதுக்கூர் பேரூர் கழகத்திலிருந்து நிவாரணப்பொருட்கள் செல்வதை நண்பர்கள் வட்டம் மூலம் அறிந்த மதுக்கூர் ஜாமிஆ மஸ்ஜித் கமிட்டி தலைவர் TAKA முகைதீன் மரைக்காயர்,அவர்கள்,மதுக்கூர் காவல் ஆய்வாளர் கிங்ஸ் தேவ் ஆன்ந்த்,உதவி காவல் ஆய்வாளர் அவர்கள்,கவுன்சிலர் NPM ரியாஸ் அகமது அவர்கள்,திமுக பிரமுகர் SNS ஹாஜா முகைதீன் அவர்கள்,தமாகா பிரமுகர் புஷ்பா நாதன் அவர்கள்,தொழில் அதிபர் MSA செய்யது முகம்மது (சேனா) அவர்கள்,சமூக ஆர்வலர் A.ஜாகீர் உசேன் அவர்கள் என பலரும் அலுவலகம் வருகை தந்து நிவாரணபொருட்களை பார்வையிட்டு பணியாற்றிய செயல்வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வழியனுப்பி வைத்தார்கள்.
"எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே "






No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...