இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, January 26, 2015

மதுக்கூரில் குடியரசு தின நிகழ்ச்சிகள்.

தமுமுக அலுவலம்

மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக இந்தியாவின் சுகந்திரதினம்,குடியரசு தினங்களில் நகர அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகின்றது.இன்று இந்தியாவின் 66வது குடியரசு தின கொடியேற்று நிகழ்ச்சி வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது.நகர நிர்வாகிகள் ஜபருல்லா,இலியாஸ் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் நகர பெருளாளர் சேக்பரீது அவர்கள் கொடியேற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் நிர்வாகிகள்  முஜிபுர் ரஹ்மான்,ஹாஜா மைதீன் மற்றும் நிர்வாகிகள் தாஜுதீன்,ராசிக் அகமது,அப்பாஸ்,சாதிக்பாட்சா என பலரும் கலந்து கொண்டார்கள்.



பேரூராட்சி அலுவலகம்

மதுக்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தின நிகழ்ச்சியில் செயல் அதிகாரி திரு ரமேஷ் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பஷீர் அகமது,பேரூராட்சி துணைத்தலைவர் ஆனந்த்,பேரூராட்சி உறுப்பினர்கள் பெரமையன்,நாகூர் கனி,கபார்,ரியாஸ் அகமது,ஜோதி,சுரேஷ்,முருகையன்,மணிவேல் ,மற்றும் முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள்,வர்த்தக சங்க நிர்வாகிகள்,அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.


அர் ரஹ்மான் பள்ளி

மதுக்கூர் அர் ரஹ்மான் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் இன்று நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் மதுக்கூர் பேரூராட்சி 8வது வார்டு உறுப்பினர் சகோதரர் ரியாஸ் அகமது அவர்கள் கொடிஏற்றி வைத்து மாணவ,மாணவியர்களுக்கு பரிசு வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் அர் ரஹ்மான் கல்விக்குழு உறுப்பினர்கள் அப்துல் காசிம்,முகம்மது யாக்கூப்,மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை தலைவர் சாகுல் ஹமீது,ஆசிக் ரஹ்மான்,அப்துல் நாசர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



இதுபோன்று மதுக்கூரில் இயங்கும் அரசு அலுவலங்கள்,பள்ளிக்கூடங்கள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகம் போன்ற இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...