இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Friday, January 25, 2013

மதுக்கூரில் விஸ்வரூபம்

மதுக்கூர் ஜாமிஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டிக்கு புதிய  தலைமைத்துவம் வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி  ஜாமிஆ மஸ்ஜித்துக்கு ஜனநாயகம் வேண்டி போராடும் சங்கம் சார்பாக இன்று 25.01.2013 வெள்ளிக்கிழமை  ஜும்மா முடிந்த பிறகு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில்  கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டம் சகோதரர் அண்ணா மெடிக்கல் அப்துல் மாலிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.சகோதரர்கள்  செய்யது,ஜாகீர் உசேன்,பாரூக் உசேன்,ராசிக்,மற்றும் அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்டு  வேண்டும் வேண்டும் புதிய தலைமை வேண்டும்,ஜனநாயகம் வேண்டும்,சுழற்சி முறையில் பொறுப்புக்கள் வேண்டும்,போன்ற கோஷங்கள் போடப்பட்டது.

ஆர்பாட்டம் நியாயமானது என பலரும் தங்களின் கருத்துக்களை சொல்லிக்கொண்டே சென்றார்கள்.

சகோதரர் செம்மல் சாதிக் அவர்களின் நன்றி உரையுடன் அடுத்த கட்ட போராட்டத்திற்க்கு ஆயத்தமாக அனைவரும் கலைந்து சென்றார்கள்.













நமதூர் வரலாற்றில் ஜமாத்துக்கு எதிராக முதல் முறையாக நடைபெறும் போராட்டம் இதுவாக தான் இருக்க முடியும்.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...