இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, July 17, 2012


மதுக்கூரில் தொடர்ந்து திருட்டு நடைப்பெற்று வருதை நாம் சுட்டிக்காட்டி வருகின்றோம்.மதுக்கூர் காளியம்மான் கோவில் எதிரில் (செட்டித்தெரு இரண்டாவது தெரு) மர்ஹூம் ஹபீப் முகம்மது குடும்பத்தினர் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு முதல் நாள் இரவு சென்று விட்டு மறுநாள் அதிகாலை (இன்று 17/07/2012) 2:30 மணிக்கு வந்துள்ளார்கள்.அவர்கள் வீடு முதல் நாளிலிருந்து அடுத்தநாள் முழுவது பூட்டியிருந்ததை கண்காணித்த திருட்டுக்கும்பல் இன்று நாள்ளிரவில் மேற்படி வீட்டில் திருட முயற்சி மேற்கொண்டுள்ளார்கள்.அதற்க்குள்ளாக நிகழ்ச்சிக்கு சென்ற சகோதரர் ஹபீப் முகம்மது குடும்பத்தினர் தங்களது வீட்டிற்க்கு வருவதை உள்ளே இருந்த திருட்டுக்கும்பல் உணர்ந்து தங்கள் கொண்டுவந்த ஆயுதங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பிவிட்டார்கள்.


வந்தவர்கள் பயங்கர ஆயுதங்களை வைத்து இருந்தது அதிர்ச்சியினை ஏற்படுத்துகின்றது.காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.வழக்கம்போல் காவல்துறை விசாரணை மேற்கொள்கின்றோம் என்றார்கள்.ஆயுதங்களையும் காவல்துறை கைப்பற்றி சென்றார்கள்


தக்க நேரத்தில் குடும்பத்தினர் வீட்டிற்க்கு வந்ததால் திருட்டு தடுக்கப்பட்டது.


திருட்டுக்கும்பல் மூன்று பேர் சேர்ந்த கும்பல் என்பது அவர்கள் விட்டுச்சென்ற 3 ஜோடி செருப்புகள் மூலம் தெரிகின்றது.





                                 திருட்டுக்கும்பல் விட்டுச்சென்ற பயங்கர ஆயுதங்கள்


திருடர்கள் விட்டுச்சென்ற செருப்பு ஜோடிகள்

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...