இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, January 4, 2012

மதுக்கூரில் புதிய வங்கி....



மதுக்கூரில் அரசுடமையாக்கப்பட்ட வங்கியாக இந்தியன் வங்கி மட்டுமே உள்ளது.தனியார் வங்கிகளாக லஷ்மி வில்ஸ் வங்கி,கும்பகோணம் பரஸ்பர பண்ட லிமிடெட் ஆகியவைகளும்,தமிழக அரசினால் நிர்வாகிக்கப்படும் தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி,தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவைகளும் உள்ளது.
நமதூருக்கு மேலும் ஒரு அரசுடமை வங்கி குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியினை கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.அவர்களின் முயற்சிக்கு என்றும் உறுதுணையாக நிற்போம்.

இந்நிலையில் சிட்டி யூனியன் பாங்க் லிட் தனது கிளையினை மதுக்கூரில் தொடங்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு மதுக்கூர் மெயின்ரோடு மாஸ் சிட்டி டவர் என்ற முகவரில் இன்னும் ஒரிரு நாட்களில் துவக்க விழா காண இருக்கின்றது.
சிட்டி யூனியன் பாங்க் முதன்முதலில் 31/10/1904 அன்று கும்பகோணத்தில் தனது முதல் கிளையினை தொடங்கி இந்தியாவின் 14 மாநிலங்களில் சுமார் 275 கிளைகளை கொண்டுள்ளது

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...