இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, February 27, 2013


முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்க கூட்டம்


 மதுக்கூர் ஜாமிய மஸ்ஜித் பரிபாலன கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு என்பது நமதூரில் உள்ள முஸ்லிம் முன்னேற்றச்சங்கம்,மிப்தாஹுல் இஸ்லாம் சங்கம் இரண்டின் சார்பாக ஒரு சங்கத்திற்க்கு 15 நபர்கள் விதம் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் ஒருவர் ஜமாத் தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக வைத்துள்ளதாக தெரிகின்றது.

அதிலும் இந்தமுறை மேலவீதியினை சார்ந்தவர் ஜமாத் தலைவராக உள்ளார்.செயலாளர்,பெருளாளர் கீழத்தெருவைச்சார்ந்தவர்கள் உள்ளார்கள்.வருகின்ற முறை கீழத்தெரு முகல்லாவை சேர்ந்தவர் தலைவராகவும்,மேலத்தெரு முகல்லாவை சார்ந்தவர்கள் செயலாளர்,பெருளாளராக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிகின்றது.

கீழத்தெரு முஹல்லா சார்பாக 15 நபர்களை தேர்வு செய்வதற்காக நேற்று 24/02/2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்கத்தில் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் 15 நபர்களை தேர்வு செய்யும் அதிகாரம் சங்கத்தின் முன்னாள் (மூத்த) நிர்வாகிகளான M.S.A.அப்துல் ரஜாக்,A.N.M.முகம்மது அலி ஜின்னா,A.M.அப்துல் காதர் ஆகியோரிடம் ஓப்படைக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

மேற்கூரிய சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் 15 நபர்களை கொண்ட பட்டியலை அறிவிப்பு செய்து அவர்களை கீழத்தெரு முஹல்லா சார்பாக ஜமாத்தை நிர்வாகிக்கும் பொறுப்பும்,15 நபர்களில் ஒருவரை ஜமாத் தலைவராக தேர்வு செய்யும் அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

15 நபர்களின் பெயர் விபரம்

  1. .M.S.A.அப்துல் ரஜாக்
  2. .A.M.அப்துல் காதர் (Tamilnadu medical)
  3. A.N.M.முகம்மது அலி ஜின்னா
  4. A.N.M.அஜீஸ் ரஹ்மான் (Abar travels)
  5. ஜபருல்லா (ராயல்)
  6. S.S.M.H.முகம்மது அலி ஜின்னா (ஊருட்டி)
  7. S.முபாரக் அலி
  8. A.முத்து முகம்மது
  9. இஸ்ஹாக் (Tamilnadu medical)
  10. O.P.அப்துல் ராஜக்
  11. A.S.M.முஸ்தபா
  12. N.S.M.முகமம்து பாரூக்
  13. M.K.M.அப்துல் கறீம 
  14. T.A.K.A.முகைதீன் மரைக்காயர்
  15. T.A.K.M.ஆஷீக் மரைக்காயர்

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் சிறப்பான முறையில் செயல்பட இறைவனை பிரார்த்திக்கின்றோம்.அதே வேளையில் ஐவேலை தொழுகையினையும் நிறைவேற்றக்கூடியவர்களாக இருக்க  அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.

Saturday, February 23, 2013

மதுக்கூர் சூரியத்தோட்டத்தில் திறப்பு விழா கண்ட மஸ்ஜித் ஹாரப் அல் நயிமீ பள்ளிவாசல் திறப்பு விழாவுக்காக வைக்கப்பட்ட விளம்பர போர்டுகள்.நமது கோமராவில் சிக்கியது.















மதுக்கூர் சூரியத்தோட்டத்தில் புதியப்பள்ளிவாசலுக்கு (மஸ்ஜித் ஹாரப் அல் நயீமி) பெரும் பொருளாதார உதவி செய்தவரும்.பள்ளியினை திறந்துவைத்தவருமான  ராசல் கைமா அரபியர் ஹாரப் சாலம் அல் நயீமி அவர்களும் அவர்களின் புதல்வருமான ராஷித் ஹாரப் சாலம் அல் நயீமி அவர்களும் பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக கடந்த முன்று தினங்களுக்கு முன்னர் இந்தியா (மதுக்கூர் )வந்தனர்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்று கடந்த 22/02/2013 அன்று திருச்சியிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம்  துபாய் போய் சேர்ந்தனர்.துபாய் விமான நிலையத்தில் சகோதரர்கள் S.N.A.முகம்மது புகாரி,A.M.இமாமுதீன் ஆகியோர் முன்னிலையில் மதுக்கூர் சகோதரர்கள்.நன்றியுடன் வரவேற்றார்கள்.
 

Thursday, February 21, 2013


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இனிதாய் முடிந்த இறை இல்லப்பணி...

மதுக்கூர் சூரியத்தோட்டத்தில் (சன் கார்டனில்)முத்தாய் மலர்ந்தது மஸ்ஜித் ஹாரப் அல் நயீமி.


அல்லாஹ்வின் கிருபையால் அழகாக நிறைவு பெற்றது மஸ்ஜித்  ஹாரப் அல் நயீமி பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி. எல்லா புகழும் இறைவனுக்கே!

மதுக்கூர் மாநகருக்கு கடந்த 6 ஆண்டுகளில் இரண்டாண்டுகளுக்கு ஒரு பள்ளிவிதம் இறைவனின் மஸ்ஜித்துக்கள் நிறைந்து வருகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.கடந்த காலங்களில் மஸ்ஜித் இஃக்லாஸ்,மஸ்ஜித் தக்வா வரிசையில் இன்று 21/02/2013 புதிய பள்ளிவாசலாக மஸ்ஜித் ஹாரப் அல் நயீமி தோன்றியுள்ளது.

இன்று காலை சுமார் 10:30 மணிக்கு  பள்ளிவாசல் எதிர்புறம் அமைக்கப்பட்டிருந்த மர்ஹும் P.S.K.N.நூர்தீன் ராவுத்தர் ,S.N.A நத்தர்ஷா ஆகியோர் நினைவு விழா மேடையில் ஜாமிஆ பள்ளிவாசல் துணை இமாம் மெளலவி M.முகம்மது அலி நூரி அவர்கள் இறை வசனம் ஓத நிகழ்ச்சி இனிதே தொடங்கியது,நிகழ்ச்சிக்கு ஜாமிஆ மஸ்ஜித பரிபாலன கமிட்டியின் தலைவர் சகோதரர் PSKA அமானுல்லா அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.மிப்தாஹுல் இஸ்லாம் சங்க முன்னாள் செயலாளர் சகோதரர் A.M. முகம்மது பாரூக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மேலப்பள்ளிவாசலின் இமாம் மெளலவி M.முகம்மது முகைதீன் நூரி,மஸ்ஜித் நூர் பள்ளி இமாம் மெளலவி M.முகம்மது யூசுப் அவர்கள்,ஜாமிஆ மஸ்ஜித் செயலாளர் சகோதர முகம்மது பாரூக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.சகோதரர் K.M.H.ஷாகுல்ஹமீது அவர்களும் இப்பள்ளிக்காக ழைத்தவர்களை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பெரியப்பள்ளிவாசலின் இமாம் மெளலவி S.M.முகம்மது யூசுப் அவர்கள் உரைநிகழ்த்தினார்.
உரைகளுக்கு மத்தியில் மதுக்கூர் அல்ஃபாஸ் கம்யூட்டர்ஸ் உரிமையாளர் சகோதரர் K.T.M.J.நிசார் அகமது அவர்களின் முயற்சியில் உருவான பள்ளிவாசல் திறப்புவிழா சிறப்பு மலரை ராசல்கைமா அரபியர் சகோதரர் ராஷித் ஹாரப் சாலம் அல் நயீமி அவர்கள் முதல் பிரதியினை  வெளியிட நமதூர் ஜமாத் தலைவர் சகோதரர் PSKA அமானுல்லா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

சிறப்புரையாக மெளலவி M.சேக் முஹ்யித்தீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இறுதியில் மிப்தாஹுல் இஸ்லாம் சங்க இணைச்செயலாளர் சகோதரர் R.செய்யது சலீம் மெளலானா அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

மதியம் 2:15 மணிக்கு லுஹர் தொழுகை நடத்தப்பட்டு உணவுகள் பரிமாறப்பட்டு பள்ளிவாசலின் திறப்புவிழா நிகழ்ச்சி இனிதாக நிறைவு பெற்றது.பள்ளிவாசல் திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு சன்பாய்ஸ் சார்பாக "இஸ்லாம் விரும்பும் இனிய பெண்கள்" என்ற தலைப்பிலான நூல் இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் பல சகோதரர்கள் மனமுந்து டீ,குளிர்பானம் பாசமான வினியோகங்கள் நடைப்பெற்று கொண்டே இருந்தது.

பள்ளிவாசல் அமைய காரணமாக இருந்தவர்கள் மேடையில் கெளரவிக்கப்பட்டார்கள்.இன்ஷா அல்லாஹ் இறைவனும் அவர்களை கெளரவிக்க துவா செய்வோம்.

ஊரில் எத்தனையே இயக்கங்கள் இருந்தாலும் அல்லாஹ்வின் ஆலய திறப்பு விழா நிகழ்ச்சியில் அனைவரும் ஓன்றினைந்து இருந்தது சந்தோஷாமாக இருந்தது.காழ்புணர்ச்சிகள் இல்லாத இதே ஓற்றுமை என்றும் நிலைத்து இருக்க இறைவனை தொழுது துவா செய்கின்றோம்.

பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஜமாத் நிர்வாகிகள்,இரு சங்க நிர்வாகிகள்,பேரூராட்சி தலைவர்,பேரூராட்சி உறுப்பினர்கள்,நண்பர் குழு நண்பர்கள்,சமுதாய போராளிகள்,இயக்கவாதிகள்,மாணவர்கள்,இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இப்பள்ளி மதுக்கூர் மாநகரில் அமைய உழைத்த அனைவருக்கும் எங்களின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளை சமர்பிக்கின்றோம்.அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னித்து கிருபை செய்ய துவா செய்கின்றோம்


சம உரிமை பேணும்
சகோதரத்துவத்தை வளர்க்கும்
சலாஹ் என்னும் தொழுகையினை நிறைவேற்றிட
சன் கார்டனில் அல்லாஹ்வின் ஆலயம் அமைத்த
சன்றோருக்கும்:சபையோருக்கும்
சங்கைமிகு ஜமாத்தாருக்கும் 
சமுதாய பேரியக்கம்-தமுமுக சார்பாக
சலாத்தை சமர்பிக்கின்றோம்.






































Tuesday, February 19, 2013


இறுதி கட்ட பணிகளில் இறைஇல்லம்

மதுக்கூரில் விழாக்கோலம்

மதுக்கூர் சூரியத்தோட்டம் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்டிருக்கும் மஸ்ஜித் ஹாரப் அல் நயீமி பள்ளிவாசலின் கட்டுமான பணிகள் இறைவனின் மாபெரும் கிருபையால் முடிவு பெற்றுவிட்டது.இப்பள்ளியின் திறப்பு விழா நிகழ்ச்சி நாளை 20/02/2013 புதன் கிழமை மாலை பெண்கள் பயானுடன் தொடங்குகின்றது.இப்பள்ளியின் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக ஒருவழிப்பாதை தற்காலிகமாக மாற்றிவிடப்பட்டுள்ளது.பிரமாண்மான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.திறப்புவிழா பற்றிய நோட்டீஸ் வீடுதோறும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.சகோதரர்களின் விளம்பர பிளக்ஸ்போர்டுகள் சூரியத்தோட்டதில் குடிகொண்டுள்ளது.

இப்பள்ளிக்கு பெரும் நிதி உதவி செய்தவரும்,பள்ளிவாசல் திறப்பாளருமான  ராசல்கைமாயை சார்ந்த அரபியர் ஹாரப் சாலம் அல் நயீமி மற்றும் அவரது மகனார் ராஷித் ஹாரப் அல் நயீமி ஆகியோர் நேற்று துபாயிருந்து திருச்சிவந்தனர்.இன்று மாலை மதுக்கூருக்கு வருகைதந்து மஸ்ஜித் தை பார்வைவிட்டார்.

சிலருக்கு நோட்டிஸில் எனது பெயர் இல்லை,எனது பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என இதுபோன்ற சில மனகசப்புகள் உள்ளது.மேலும் சிலருக்கு வீதிகள் சம்மந்தமான சங்கடங்களும்,மேலும் சிலருக்கு எங்களை அழைக்கவில்லை என்ற மனவருத்தமும் இருப்பதாக அறியமுடிகின்றது.இது அல்லாஹ்வின் ஆலயம் யாரும் யாரிடமும் மனகசப்பின்றி நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற துவா செய்வோம்.

இந்த இனிமையான வேலையில் அரபியர் ஹாரப் சலாம் அல் நயீமி அவர்களின் எண்ண ஓட்டத்தை இறைவனின் கிருபையால் உணர்ந்து மதுக்கூருக்கு இப்பள்ளிவர முன்முயற்சி எடுத்த சகோதரர் எஸ்.என்.எஸ்.நைனா முகம்மது (ராவுத்தர்ஷா) அவர்களுக்கும்,இந்த இடத்தில் இடம் அளித்த மிப்தாஹுல் இஸ்லாம் சங்கத்தினருக்கும் எங்களின் இதயம் நிறைந்த நன்றிகள்.

இப்பள்ளிவாசல் தொழுகைக்காக வக்ப் செய்யப்பட்ட பிறகு அப்பள்ளியின் முஅத்தீன் தினந்தோறும் ஐவேளையும் ஹய்ய அலஸ்ஸலாஹ் (தொழுகையின் பக்கம் வாருங்கள்),ஹய்ய அலல் ஃபலாஹ் வெற்றியின் பக்கம் வாருங்கள்,என அழைப்புவிடுவார்.அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு வக்த் தொழுகையிலும் போய் கலந்து கொண்டு வரிசைகளால் (ஷப்)அப்பள்ளியினை அலங்கரிப்போம்.இன்ஷா அல்லாஹ்...







Monday, February 18, 2013

மதுக்கூரில் சூரியத்தோட்டத்தில் வருகின்ற 20/02/2013 புதன்கிழமை மாலை பெண்கள் பயானுடன் திற்ப்பு விழா காணும் மஸ்ஜித் ஹாரப் அல் நயீமி பள்ளியின் திறப்பு விழா அமைப்பிதழ்




Wednesday, February 13, 2013


இடைவிடாது நடைபெறும் இறை இல்ல பணிகள்

மதுக்கூர் சூரியத்தோட்டத்தில் மஸ்ஜிநுன் ஹாரப் அல்நயீமி வருகின்ற 20/02/2013 புதன் கிழமை மாலை பெண்கள் நிகழ்ச்சியுடன் அடுத்த நாள் 21/02/2013 லுஹர் தொழுகைக்கு வக்ப் செய்யப்பட இருக்கும்  பள்ளிவாசலில் இறுதிகட்ட கட்டிட பணிகள் மிகவும் விறுவிறுப்பாக இரவு பகல் பாரமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

வர்ணம் பூசும் பணி,மார்பிள்ஸ் போடும் பணி,மினார கட்டும் பணி உளூ செய்யும் இடம்,கழிவறை கட்டும்பணி என பணிகள் தொய்வின்றி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.இறை இல்ல கட்டிட பணியினை ஒருங்கிணைந்து வரும் சகோதரர் லக்கி அப்துல் காதர் அவர்கள் திறம்பட பணியாளர்களை தட்டிக்கொடுத்து பணிகளை வாங்கி வருகின்றார்.

கட்டிட பணிகளை அவ்வபோது மதுக்கூர் ஜாமி ஆ மஸ்ஜித் நிர்வாகிகளும்,மிப்தாஹுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளும்,அமீரக நிர்வாகிகளும் பார்வையிட்டு வருகின்றார்கள்.








கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...