இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, December 24, 2013

மதுக்கூர் சந்தையில் தீ விபத்து

மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலனகமிட்டிக்கு சொந்தமான 
புகழ்பெற்ற சந்தைப்பேட்டை உள்ளது.இச்சந்தைப்பேட்டையில் பல்வேறு தொழில் ஸ்தாபனங்கள் செயல்படுகின்றது.குறிப்பாக காய்கறிக்கடைகள் செயல்படுகின்றது.இதில் தர்காவை சுற்றி தற்போது கட்டப்பட்ட வணிக வளாகத்தில் பட்டுக்கோட்டையை சார்ந்த குமார் என்பவர் காய்கறிக்கடை நடத்திவருகின்றார்.நேற்று இரவு வழக்கப்போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு குமார் பட்டுக்கோட்டைக்கு சென்றுவிட்டார்.இன்று 24/12/2013 அதிகாலை 4:45 மணியளவில் குளிப்பதற்காக சென்ற பெண்கள் சந்தையில் தீ எரிவதைக்கொண்டு திடுக்கிட்டு வீட்டில் இருந்த ஆண்களிடம் கடை எரிவதை கூறியுள்ளார்கள்.சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் வருவதற்குள்ளாக குமாரின் காய்கறிக்கடை முழுவதுமாக எரித்துவிட்டது.தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாஅல்லது சதி செயல் எதுவும் காரணமா என மதுக்கூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றார்கள். சம்பவ இடத்திற்கு மதுக்கூர் ஜமாத் தலைவர் முகைதீன் மரைக்காயர்,செயலாளர் சதக்கத்துல்லா,பேரூராட்சி தலைவர் பஷீர் அகமது,துணைத்தலைவர் ஆனந்த் மற்றும் ஜமாத் பிரமுகர்கள் பார்வையிட்டனர்.






Saturday, December 21, 2013

நிக்காஹ் வாழ்த்து


இறைவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்து மனைவியரைப்படைத்தான்:நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக!உங்களிடையே அன்பையும்,கருணையும் தோற்றுவித்தான்.திண்ணமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன.(திருக்குர் ஆன் 30:21)



ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லறத்தைப் போன்று வேறு எதனையும் காணமாட்டீர்கள்.(நபி மொழி)

மணமக்கள்

நபில் (என்கின்ற) S.நத்தர்ஷா (த/பெ.M.A.ஷேக்தாவூது)

A.பெமீனா (த/பெ K.அமானுல்லா,அதிராம்பட்டிணம்)

மணநாள்
ஹிஜிரி 1435 ஆம் ஆண்டு ஸபர் மாதம் பிறை 18 (22/12/2013 ஞாயிற்றுக்கிழமை)

மண இடம்
அதிராம்பட்டிணம்

மணவாழ்த்து
பாரக் கல்லாஹு லக வபாரக்க அலைக்க வ ஐம அ பைனகுமா ஃபீகைர்


(உங்கள் இருவருக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக,நன்மையான காரியங்கள் அனைத்திலும் உங்கள் இருவரையும் ஒன்றுசேர்த்து வைப்பானாக)

Friday, December 20, 2013

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் பள்ளிவாசல்தெரு கட்டையர் அப்பா வீட்டு மர்ஹும் முகம்மது இஸ்மாயில் அவர்களின் மகளும்,சாகுல் ஹமீது,சமையல் மாஸ்டர்கள் காதர் மைதீன்,பக்கீர் மைதீன்,காசியப்பா மற்றும் நைனா முகம்மது ஆகியோரின் சகோதரியுமான செல்லாச்சி (என்கின்ற) பாத்திமா பீவி அவர்கள் இன்று 20/12/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Thursday, December 19, 2013

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் மேலசூரியத்தோட்டம் முகம்மது ஹாஜா மைதீன் அவர்களின் தாயாரும்,டிரைவர் ஹைதர் அலி (கத்தார்) ,ராசிக் அகமது ஆகியோரின் பாட்டியாருமான சுலைஹா அம்மாள் அவர்கள் இன்று 19/12/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Wednesday, December 18, 2013

நிக்காஹ் வாழ்த்து


இறைவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்து மனைவியரைப்படைத்தான்:நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக!உங்களிடையே அன்பையும்,கருணையும் தோற்றுவித்தான்.திண்ணமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன.(திருக்குர் ஆன் 30:21)

ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லறத்தைப் போன்று வேறு எதனையும் காணமாட்டீர்கள்.(நபி மொழி)

மணமக்கள்

J.முகம்மது ரபீக் (த/பெ.E.ஜெகபர்தீன்-ஒரத்தநாடு)
J.ஜெகபர் நாச்சியா (த/பெ.E.S.M.ஜெயினுல்லாபுதீன்)


மணநாள்
ஹிஜிரி 1435 ஆம் ஆண்டு ஸபர் மாதம் பிறை 15 (19/12/2013 வியாழக்கிழமை)

மண இடம்
A.K.S.திருமண மண்டபம் மதுக்கூர்.

மணவாழ்த்து
பாரக் கல்லாஹு லக வபாரக்க அலைக்க வ ஐம அ பைனகுமா ஃபீகைர்
(உங்கள் இருவருக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக,நன்மையான காரியங்கள் அனைத்திலும் உங்கள் இருவரையும் ஒன்றுசேர்த்து வைப்பானாக)

மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

 
மதுக்கூர் இராமம்பாள்புரம் முகம்மது அலி,உதுமான்,உமர்,அகமது கபீர்,நிஷார் அகமது ஆகியோரின் தகப்பனர் மூட்டைப்பூச்சி ஆலிம்ஷா என்கின்ற முகம்மது சாலிஹ் அவர்கள் நேற்றிரவு 17/12/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.


மதுக்கூர் புதுத்தெரு (பெருநாள் கொல்லைத்தெரு) அப்துல் மஜீது அவர்களின் தகப்பனர் முகம்மது அப்துல்லா அவர்கள் இன்று 18/12/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.


(இரு ஜனாஸாகளின் நல்லடக்கம் இன்று 18/12/2013 செய்யப்படுகின்றது)

Tuesday, December 17, 2013

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)


மதுக்கூர் சிரமேல்குடிரோடு லண்டன் முகம்மது யூசுப் அவர்கள் இன்று 17/12/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Saturday, December 14, 2013

மதுக்கூர் இந்திரா நகர் சகோதரர் A.முஜிபுர் ரஹ்மான் அவர்களின் வீடு 

குடிபுகும் நிகழ்ச்சி இன்று 15/12/2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது.

சகோதரர் குடும்பத்தினருக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள்.

Friday, December 13, 2013

கண்டன ஆர்ப்பாட்டம்

கடந்த 06/12/2013 (டிசம்பர் 6) அன்று தஞ்சாவூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்ககழகம் (பாபர் மஸ்ஜித்காக) ஏற்பாடு செய்திருந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் மதுக்கூரிலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற வாகனங்களை வழிமறித்து தாக்குதல் நடத்திய இந்து முண்ணனி ஒன்றிய தலைவன் போஸ் (என்கின்ற) குபேந்திரனையும்,அவனுடன்  இருந்து கலவரத்தை தூண்டிய வக்கீல் ராஜபிரபு என்பவனையும் கைது செய்யக்கோரி நேற்று 11/12/2013 தஞ்சாவூரில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற அதே இடத்தில் காவிக்கயவர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்ட தலைவர் அப்துல் ஜப்பார் அவர்கள் தலைமை ஏற்றார்.மாவட்ட நிர்வாகிகள் வல்லம்,பொருளாளர் சேக் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருச்சி சகோதரர் உமர் அவர்கள் இறைவசனத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது.மதுக்கூர் ராவுத்தர்ஷா,தலைமைக்கழக பேச்சாளர் திருச்சி ரபீக்,மாநில மாணவரணி செயலாளர் டாக்டர் சர்வத்கான்,மாநில வணிகர் அணி செயலாளர் சகோதரர் கலந்தர்  என நிர்வாகிகள் ஒருவர்பின் ஒருவராக கண்டன உரைகளையும்,கோஷங்களையும் எழுப்பினார்கள்

தமுமுக மாநில செயலாளர் சகோதரர் கோவை செய்யது அவர்களின் எழுச்சி கண்டன உரையும்,தமுமுக மாநில பொதுச்செயலாளர் சகோதரர் அப்துல் சமது அவர்களின் சங்கபரிவார்களின் வரலாற்று சூழ்ச்சிகளை மேற்கொள்கட்டிய உரைகளையும் செய்தார்கள்.இறுதியில் மாவட்ட செயலாளர் சகோதரர் அதிரை அஹமது ஹாஜா அவர்களின் நன்றியுரையுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்டம்,தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்,நாகை (வடக்கு,தெற்கு) மாவட்டங்கள்,புதுக்கோட்டை மாவட்டம்,திருவாரூர் மாவட்டம் என டெல்டா மாவட்ட நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்












Monday, December 9, 2013

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் சூரியத்தோட்டம் ஆலிம்ஷா வீட்டு மர்ஹும் முகம்மது உசேன் அவர்களின் மகனும்,ஜாகீர் உசேன்,பாட்சா,அப்துல் மாலிக் ஆகியோரின் தகப்பனாரும்,காடை வீட்டு அமானுல்லா அவர்களின் மாமனாருமான முகம்மது இஸ்மாயில் அவர்கள் இன்று 09/12/2013 வஃபாத்தாகிவிட்டார்கள். 


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
மதுக்கூரில் சங்பரிவார் தீவிரவாதியின் இனசெயல்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்(TMMK) சார்பாக தொடர்ந்து 18 ஆண்டுகாலமாக பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 தேதி அன்று பல்வேறு போராட்டக்களங்களை அமைத்து ஜனநாயக வழியில் போராடி வருகின்றது.இந்த வருடம் மாநிலத்தின் பெரு நகரங்கள் சுமார் 50 இடங்களில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமுமுக மாநில தலைமை அறிவித்து இருந்தது.அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் (தெற்கு) சார்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள மதுக்கூர் நகர தமுமுக சார்பாக 5 வேன்களில் தஞ்சாவூர் நோக்கி சென்றனார்.(இதில் ஒரு வேனில் பெண்கள்).தமுமுகவின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றுகொண்டு இருந்தது.

மதுக்கூரிலிருந்து 3 கீ.மி தொலைவில் உள்ள புலவஞ்சி என்ற கிராமத்தில் இந்து முண்ணனி ஒன்றிய தலைவர் போஸ் என்பவன் எனது அடியாட்களுடன் சாலையின் நடுவே தனது வாகனத்தை குறுக்குநெடுக்காக நிறுத்திக்கொண்டு இந்த வழியாக டிசம்பர் 6 போராட்டத்துக்கு வாகனங்கள் செல்லக்கூடாது என கெக்கரித்து உள்ளான்.வாகன டிரைவர் சகோதரர் ரியாஸ் அகமது மட்டும் இறக்கி சென்று ஏன் ? ரோட்டை மறிக்கின்றீர்கள் நாங்கள் போராட்டத்து செல்லவேண்டும் என கூறியுள்ளார்.அதற்கு போஸ் இது என் ஊர்.எனது ரோடு யாரும் இந்த வழியாக செல்லக்கூடாது என மீண்டும் கூறியுள்ளான்.மதுக்கூர் காவல் நிலையத்துக்கு நிர்வாகிகள் தகவல் கொடுக்க எப்போதும் போல் தாமதமாக வந்த மதுக்கூர் காவல் துறை வழக்கம்போல் முஸ்லிம்களை நீங்கள் கலைந்து செல்லுங்கள் நாங்கள் பார்த்து கொள்கின்றோம் என கூற போராட்டத்திற்கு சென்ற முஸ்லிம்கள் எங்களை சம்மந்தமில்லாமல் வழிமறித்த போஸ் மற்றும் அவனது அடியாட்களை கைது செய்யவேண்டும் என கூற  போஸை நோக்கி சென்ற மதுக்கூர் காவல்நிலைய ஆய்வாளர் அவர்களை பார்த்து போஸின்தம்பி வக்கீல் ராஜபிரபு என்பவன் நீ போயா என்னயா பண்ணுவே கேஸ்தானே போடுவே போட்டுக்கோ என கூறிக்கொண்டே அருகில் வீடு கட்டுவதற்காக அடுக்கிவைக்கப்பட்டிருந்த செங்கற்களை எடுத்து முஸ்லிம்கள் மீது வீசினார்கள்.இதில் முஸ்லிம்களின் வாகன வரிசையில் முதலில் நின்று கொண்டிருந்த வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்தது.அதுவரை பொறுமையின் புகழிடமாக இருந்த முஸ்லிம்கள் அவனே கைது செய்யவேண்டும் என கூறி புலவஞ்சி கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.புலவஞ்சி கிராமத்திலிருந்து சாலை மறியலை கலைத்துவிட்டுவிட்டு மதுக்கூர் வடக்கு பெரமையா கோவில் நான்கு சாலைகளில் முஸ்லிம்கள் அமர்ந்து போஸ் மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற முழக்கங்களுடன் சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து செய்துகொண்டிருந்தனர்.

மாவட்ட தமுமுக நிர்வாகிகளுக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டது.  அதிராம்பட்டிணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி டிசம்பர் 6 போராட்டத்திற்கு சென்றவர்களுக்கு  இந்த சம்பவங்கள் எடுத்துக்கூறப்பட்டது.உடனடியாக களத்தில் இறக்கிய அதிராம்பட்டிண தமுமுகவினர் பட்டுக்கோட்டை மணிக்கூண்டில் புலவஞ்சியில் முஸ்லிம்களின் வாகனம் தாக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல் செய்தனர்.இதனால் பட்டுக்கோட்டை நகரில் சுமார் 1/2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் மதுக்கூரில் தொடர்ந்து ஒரு மணிநேரம் நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.சாலை மறியல் நடைபெற்ற  இடத்திற்கு வந்த  மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்கள் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் போரில் பெரமையா கோவிலிருந்து கலைந்து சென்று காவல்நிலையத்தில் திரண்டனர்.முஸ்லிம்கள் காவல்நிலையத்தில் திரண்ட சில நிமிடங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன் அவர்கள் மதுக்கூர் காவல்நிலையம் வந்தடைந்தார்.நடந்த விபரங்களை கேட்டு தகுந்த  நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி செய்து காவல்நிலையத்தின் முன்பு திரண்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துங்கள் என முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக  எஸ்பியிடம் பேச்சுவார்த்தை நடத்தியவர்களிடன் கூறினார்.அதன்படிஒரு சிலரை தவீர்த்து அனைவரும் கலைந்து சென்றனர்.முறைப்படி தமுமுக சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.தமுமுக வாகனங்களை தாக்கியவர்களில் 4 நபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்கள்.முக்கிய குற்றவாளிகள் இந்து முண்ணனி ஒன்றிய தலைவர் போஸ்,அவனது தம்பி வக்கீல் ராஜபிரபு ஆகியோர் மட்டும் தலைமறைவாக உள்ளனர்.

சங்பரிவார்களின் இந்த செயலை கண்டித்து தமுமுக மட்டுமில்லாது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா உட்பட அனைத்து இஸ்லாமிய அமைப்பினரும் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தை தொடர்ந்து தஞ்சாவூரில் நடைபெற்ற  மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தலைமையேற்று நடத்திய கோவை சுல்தான் மற்றும் மாவட்ட தலைவர் அப்துல் ஜப்பார்,மாவட்ட செயலாளர் அகமது ஹாஜா,மாவட்ட மமக செயலாளர்அகமது கபீர், மாவட்ட பொருளாளர் சேக் அலாவுதீன்,பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியாவின் மாவட்ட செயலாளர் ஹாஜி சேக்.மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் உட்பட பலரும் மதுக்கூரில் முகாமிட்டு இருந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து  குற்றாவளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரினார்கள்.

மதுக்கூரில் மூத்த தலைவர் ஹைதர் அலி

மதுக்கூரில் நடைபெற்ற சம்பவத்தை அறிந்த மாநில நிர்வாகிகள் தொடர்ந்து மதுக்கூர் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு நிலைமையினை அவ்வபோது கேட்டறிந்து கொண்டிருக்கின்றார்கள். 07/12/2013 காலை மதுக்கூருக்கு வருகை தந்த தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி அவர்கள் விபரங்களை கேட்டறிந்து உயர் காவல்துறை அதிகாரிகளிடம் சம்பவத்துக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.மூத்த தலைவருடன் நாகை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஜபருல்லா,சதக்கத்துல்லா,நாச்சிக்குளம் தாஜுத்தீன்,நாச்சிக்குளம் கவுன்சிலர் குத்புதீன்,முத்துப்பேட்டை நிர்வாகிகள் மாலிக்,வக்கீல் தீன்,மற்றும்  நகர நிர்வாகிகளும்,நாகை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் முஸாவுதீன்,அஸரப் அலி ஆகியோர்  வருகை தந்தனர்.மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் தமுமுகவினர் மதுக்கூர் தமுமுக நிர்வாகிகளை தொடர்பு கொண்டுள்ளார்கள்.










Friday, December 6, 2013

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30

மதுக்கூர் பள்ளிவாசல் தெரு அத்திக்கடையார் வீட்டு மர்ஹும் இபுராகீம் ராவுத்தர் அவர்களின் மகனும்,A.S.M ஜக்கரியா அவர்களின் அண்ணனும்,பாக்குக்கடை A.S.M.M கமாலுதீன்.A.S.M.M.சாதிக்பாட்சா ஆகியோரின் தகப்பனாருமானA.S.M.முகம்மது யாக்கூப் அவர்கள் இன்று 06/12/2013 வஃபத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Wednesday, December 4, 2013

மதுக்கூரில் மக்கள் திரள் ஆர்ப்பாட்ட விளக்க தெருமுனைக்கூட்டங்கள்.

கடந்த 18 ஆண்டு காலமாக பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 தேதி அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக ஜனநாயக வழியில் பல்வேறு போராட்டக்களங்களை நடத்திவருகின்றது.வருகின்ற டிசம்பர் 6 தேதி மாவட்ட தலைநகரங்களில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்த தமுமுக மாநில தலைமை தீர்மானித்து அதற்கான ஆயத்த பணிகள் மாநில முழுவதும் தமுமுக செயல்வீரர்கள் தனிநபர் சந்திப்பு,ஜமாத் சந்திப்பு,அமைப்புகள் சந்திப்பு,தோழமை இயக்க சந்திப்பு ,போஸ்டர்,பிளக்ஸ்,தெருமுனைகூட்டங்கள்,பொதுகூட்டங்கள் என சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் இன்று 04/12/2013 அன்று மதுக்கூர் பேருந்துநிலையம்,முக்கூட்டுச்சாலை ஆகிய இடங்கள் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் மதுக்கூர் நகர தமுமுக மாணவரணி சார்பாக நடத்தப்பட்டது.மாவட்ட மாணவரனி பொறுப்பாளர் சகோதரர் A.ஃபவாஸ் தலைமையிலும்,தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் E.S.M.ராசிக்,நகர தலைவர் M.ஹாஜா மைதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இப்பிரச்சாரத்தில் சகோதரர் திருச்சி செய்யது அவர்கள் கலந்துகொண்டு பாபர் மஸ்ஜித்தின் வரலாற்றை விளக்கி பேசினார். (மழை சிறிதுளியாய் விழுந்துகொண்டே இருந்தது.பிரச்சாரம் நடந்துகொண்டே இருந்தது)







கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...