இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, March 29, 2010

இந்தியாவில் வறுமை கோடுக்கு கீழ் 31% முஸ்லிம்கள்: பொருளாதார ஆய்வில் தகவல்

இந்தியாவில் 31 சதவீத முஸ்லிம்கள் வறுமைக் கோடுக்கு கீழ் இருப்பதாக தேசிய பயன்பாட்டு பொருளியல் ஆய்வுக் குழு ​(என்.சி.ஏ.இ.ஆர்)​ நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.

முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர்,​​ மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கும் கல்வி வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் இந்த சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆய்வில் தெரியவந்துள்ள விவரம்:

10 முஸ்லிம்களில் 3 பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது சராசரி தனி நபர் மாத வருமானம் ரூ.​ 550க்கும் குறைவாகவே உள்ளது.

2004-05 ஆண்டு நிலவரப்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற ​முஸ்லிம்களின் சராசரி தனி நபர் மாத வருமானம் ரூ.338.

நாட்டில் பழங்குடி மக்களில் 50 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்.​ தாழ்த்தப்பட்ட மக்களில் 32 சதவீதம் பேரும், அதற்கு அடுத்தபடியாக முஸ்லிம்களில் 31 சதவீதம் பேரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தில் கல்வி ரீதியாக நிறைய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.​ முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் குறு மற்றும் குடிசைத் தொழில்களில் ஈடுபடுவதன் மூலமே வருமானத்தை ஈட்டுகின்றனர் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.​

2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 13.8 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 13.4 சதவீதம் ஆகும்.

நன்றி : தட்ஸ்தமிழ்

Saturday, March 27, 2010

பாபர் மசூதி இடிப்பை அத்வானி வேடிக்கை பார்த்தார் - ஐபிஸ் அதிகாரி சாட்சியம்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதை பாதுகாக்க எந்த விதமான முயற்சிகளையும் அத்வானி மேற்கொள்ளவில்லை என்று சிபிஐ நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரியும் அரசு தரப்பு சாட்சியுமான அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா, அரசு தரப்பு சாட்சியாக சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சாட்சியம் அளித்தார்.

கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட சங்கப்பரிவார் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.​ இந்த வழக்கில் இதுவரை 8 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின் போது குப்தா,​​ அத்வானியின் மெய்க்காவலராகப் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா இன்று ரேபரேலியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.


தற்போது டெல்லியில் 'ரா' பிரிவில் பணியாற்றி வரும் அஞ்சு குப்தா, பாபர் மசூதி இடிப்பு சம்பவ நாளுக்கு முன்பும் பின்பும் அத்வானியின் செயல்பாடுகள் குறித்தும், அவர் எங்கெல்லாம் சென்றார் யாரை எல்லாம் சந்தித்தார் என்ற விவரங்களையும் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

'சர்ச்சைக்குரிய இடத்தில் சுமார் 100 பேர் (கர சேவகர்கள்) கூடியிருந்த நிலையில் அங்கு அத்வானி சென்றார். கூட்டத்தினர் மத்தியில் அவர் பேச ஆரம்பித்தார்.

ஆக்ரோஷமாகவும், உணர்ச்சி வசப்பட்டும் அவர் பேச பேச கூட்டத்தினர் மத்தியில் உணர்ச்சி வேகம் அதிகரித்து பதட்டமான நிலை உருவானதை உணர முடிந்தது' என்று அஞ்சு குப்தா தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்வானியோடு, இதர பாஜக தலைவர்களான வினய் கட்டியார், பிரமோத் மகாஜன், உமா பாரதி, சாத்வி ரிதாம்பரா, கல்ராஜ் மிஸ்ரா, ஆச்சார்யா தர்மேந்திரா, விஷ்ணு ஹரி டால்மியா, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் இருந்ததாக அஞ்சு குப்தா குறிப்பிட்டுள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தனது வாழ்நாளில் மிகவும் துயரமான சம்பவம் என்றும், பாபர் மசூதி இடிப்பு கட்டுப்படுத்த முடியாதபடி, இயல்பாக வெடித்த ஒரு கலவரம் என்றும் அத்வானி கூறி வந்தார்.

ஆனால் அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் தெரிவித்த சாட்சியங்கள் அத்வானி தெரிவித்த கருத்துக்களுக்கு முரணாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தில் அஞ்சு மேலும் சாட்சியம் அளிக்கையில்,'அத்வானி மற்றும் அவருடன் இருந்த தலைவர்கள் பாபர் மசூதி இருந்த இடத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்தார்கள்.
கரசேவகர்கள் மசூதியை இடிக்கும்போது அது இடிக்கப்படாமல் பாதுகாக்க அத்வானி உட்பட அவருடன் இருந்த தலைவர்கள் எந்த விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
மாறாக மசூதி இடிந்து விழுந்த போது மேலே குறிப்பிட்ட எட்டு தலைவர்களும் ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்' என்று கூறியுள்ளார்.

நன்றி: தட்ஸ்தமிழ்

Thursday, March 25, 2010

ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு- தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவு

கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் முஸ்லிம்களுக்கு 4 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் ஆந்திர அரசின் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் முஸ்லிம்களுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஆந்திர மாநில அரசு உருவாக்கியது. இதன் அடிப்படையில் கடந்த 2007ம் ஆண்டில் அரசாணையும் பிறப்பித்தது.

இதை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்ற பெஞ்ச் ஆந்திர அரசின் சட்டம் செல்லாது என அறிவித்து, அரசு உத்தரவுக்கு தடை விதித்தது.

உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து ஆந்திர அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 22ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இம்மனுவை விசாரணைக்கு ஏற்றது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இன்று இம்மனு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதிகள் ஜே.எம்.பாஞ்சால், பி.எஸ்.சௌகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு பின் நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், முஸ்லிம்களுக்கு 4 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் ஆந்திர அரசின் சட்டம் செல்லும் என குறிப்பிட்டனர்.

குஜராத் கலவரம் வழக்கு : சிறப்பு விசாரணைக்குழு முன் மோடி 27ம் தேதி ஆஜர்

குஜராத் வன்முறைகள் தொடர்பாக சாட்சியம் அளிக்க வரும்படி, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அனுப்பிய சம்மனுக்கு இணங்கி வருகிற 27ம் தேதி மோடி விசாரணைக்குழு முன் ஆஜராகிறார்.

குஜராத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின் வன்முறைகள் நிகழ்ந்தன. இதில், ஏராளமானோர் பலியாயினர். இந்த வன்முறைகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. இந்தக் குழு, குஜராத் முதல்வர் மோடிக்கு சம்மன் அனுப்பியது. அதில், மார்ச் 21ம் தேதி குழு முன் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனவே 21ம் தேதி மோடி ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்று அவர் விசாரணைக்குழு முன் ஆஜராகாததால் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுபற்றி நரேந்திர மோடியின் வக்கீல் மகேஷ் ஜெத்மலானியிடம் கேட்டதற்கு வருகிற 27-ந் தேதி நரேந்திரமோடி சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது, நரேந்திரமோடி கடந்த 21-ந்தேதி ஆஜராகும்படி விசாரணை குழு சம்மன் எதுவும் அனுப்பவில்லை. 27-ந்தேதி ஆஜராகும்படிதான் சம்மன் வந்துள்ளது. எனவே 27-ந்தேதி அவர் ஆஜர் ஆவார். விசாரணை குழு கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதில் அளிப்பார் என்றார்.

குஜராத் வன்முறையின் போது, ஆமதாபாத்தில் குல்பர்க்கா சொசைட்டி பகுதியில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ஈஷன் ஜாப்ரே என்பவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். அவரின் மனைவி ஜாகியா ஜாப்ரே கொடுத்த புகாரின் அடிப்படையில், மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, March 23, 2010

இஸ்ரேலுடனான உறவை இந்தியா கைவிட வேண்டும்

மஸ்ஜிதுல் அக்ஸாவை தகர்ப்பதற்கான முயற்சிகளை மேற்க்கொண்டும், ஃபலஸ்தீனில் முஸ்லிம்களை கொன்றொழித்தும் வரும் இஸ்ரேலுடனான உறவையும் ஒத்துழைப்பையும் இந்தியா முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என முஸ்லிம் தனியார் சட்டம் கோரிக்கை விடுத்துள்ளது.

'ஜவஹர்லால் நேருவின் காலத்திலிருந்த கொள்கைக்கு இந்தியா திரும்பிச் செல்ல வேண்டும். ஃபலஸ்தீன மக்களுக்கெதிரான இஸ்ரேலின் கொடூரத்தை இந்தியா எதிர்க்கவேண்டும்’ என மூன்று நாள் நீண்ட முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் வருடாந்திர மாநாட்டில் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விவரித்துக் கொண்டு வாரியத்தின் துணைப் பொதுச்செயலாளர் மவ்லான அப்துற்றஹீம் குரைஷி தெரிவித்தார்.

அரபு நாடுகள் தங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை களைந்து இஸ்ரேலுக்கு முன்பாக முதுகெலும்பை நிமிர்த்தி நிற்கவேண்டும். மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலையுடன் அதிகரித்துவரும் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கெதிராகவும், ஃபலஸ்தீனில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற் கெதிராகவும் போராட அரபு நாடுகள் தயாராக வேண்டும் என அப்துற்றஹீம் குரைஷி கூறினார்.

பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர்கோயில் கட்டுவதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும் என்ற பா.ஜ.கவின் தலைவர் நிதின் கட்காரியின் கோரிக்கையை வாரியம் தள்ளுபடிச் செய்தது. பாப்ரி மஸ்ஜித் எந்தவொரு கோயிலையும் தகர்த்தோ அல்லது இடத்தை ஆக்கிரமித்தோ கட்டப்பட்டது அல்ல. ஷரீஅத் சட்டப்படி கட்டப்பட்ட மஸ்ஜிதை சொந்த விருப்பப்படி விட்டுக் கொடுக்க முஸ்லிம்களுக்கு உரிமையில்லை என மாநாட்டில் பாப்ரி மஸ்ஜித் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்த முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் பாப்ரிமஸ்ஜித் கமிட்டி கன்வீனர் எஸ்.க்யூ.ஆர்.இல்லியாஸ் தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கவும், சட்டத்தை அங்கீகரிக்கவும் பா.ஜ.க தயாராகவேண்டுமென்று இல்லியாஸ் கோரிக்கை விடுத்தார். லிபர்ஹான் கமிஷனில் குறிப்பிடப்பட்டுள்ள பாப்ரிமஸ்ஜிதை தகர்க்க திட்டமிட்டவர்களின் பெயர்களை பாப்ரி மஸ்ஜித் இடிப்புவழக்கில் உட்படுத்தவேண்டும். பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 ஆம் நாளை அனைத்து முஸ்லிம்களும் பிரார்த்தனை நாளாக கடைப்பிடிக்கவேண்டும். காழ்ப்புணர்வை ஏற்படுத்தும் போராட்டங்களை தவிர்க்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் கலவரத் தடுப்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர போராட்டத்தில் களமிறங்க வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுத்தொடர்பான போராட்ட நிகழ்ச்சிகளுக்கு உருக்கொடுக்க, ஒத்தக்கருத்துடைய அமைப்புகளின் கூட்டம் ஒன்று விரைவில் டெல்லியில் கூட்டப்படும். கலவரத் தடுப்பு சட்ட மசோதாவில் மாற்றங்களைக் கொண்டுவர ஆதரவைத் திரட்ட எம்.பிக்களான முஹம்ம்து அதீஃப், ஷஃபீக்குர்ரஹ்மான் பர்க் ஆகியோரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்விற்கும், உதவிக்குமான நடவடிக்கைகளும், கலவரத்திற்கு காரணமானவர்களை தண்டிப்பதற்கான பிரிவுகளும் மசோதாவில் உட்படுத்தவேண்டுமென்று குரைஷி தெரிவித்தார்

ஈராக் ஆக்கிரமிப்பு 7 ஆண்டு முடிவடைந்த நிலையில்: அமெரிக்காவில் பிரம்மாண்ட போர் எதிர்ப்பு பேரணி.

வாஷிங்டன்:ஈராக்கை அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படைகள் ஆக்கிரமித்து 7வது ஆண்டு நிறைவுறுவதையடுத்து அமெரிக்காவின் பல நகரங்களில் போர் எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்றன. ஈராக்கிலிருந்து உடனடியாக ராணுவத்தை வாபஸ் பெறவேண்டும் என போராட்டக்காரர்கள் அரசை வலியுறுத்தினர். வெள்ளை மாளிகையின் வெளியிலுள்ள மதில் சுவரில் சவப்பெட்டிகளின் மாதிரிகளை வைத்த 8 போராட்டக்காரர்களை போலீஸ் கைது செய்தது.

ஏழு ஆண்டுகள் முடிந்த பிறகும் அமெரிக்க ராணுவம் ஈராக்கில் தொடர்வது வெட்கக்கேடு என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணி மரியா ஆல்வின் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இது தவறாகும், ஈராக்கில் கொல்லப்படுவது அப்பாவிகளாகும் என அவர் மேலும் கூறியுள்ளார். ஒபாமா புஷ்ஷின் கொள்கைகளைத்தான் பின் தொடர்கிறார். அதிபர் எவராயினும், கொல்லப்படுவது அப்பாவி மக்களாகும் என போராட்டத்தில் பங்கேற்றோர் கூறினர். கலிஃபோர்னியாவிலும், நியூயார்க்கிலும் போர் எதிர்ப்பு பேரணிகள் நடைப்பெற்றன

Friday, March 19, 2010

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கூட்டத்தில் பங்குக் கொள்ள தமுமுக தலைவர் வட இந்தியா பயணம்

அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் ஆண்டு கூட்டம் உ.பி. மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் மார்ச் 19 முதல் 21 வரை நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் கட்டாய திருமண பதிவுச் சட்டம், பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு, பாபரி மஸ்ஜித் வழக்கு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் பங்குக் கொள்வதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் (மார்ச் 18) விமானம் மூலம் லக்னோ புறப்பட்டுச் சென்றார். இக்கூட்டம் முடிவடைந்த பிறகு உ.பி.யிலும் டெல்லியிலும் அரசியல் மற்றும் சமூக பிரமுகர்களை தமுமுக தலைவர் சந்திக்கிறார். பிறகு டெல்லியில் மத்திய சிறுபான்மை நல அமைச்சர் சல்மான் குர்ஷித் வரும் மார்ச் 25ம் தேதி கூட்டியுள்ள முக்கிய சிறுபான்மை சமூகத் தலைவர்களுடனான கலந்தாய்விலும் தமுமுக தலைவர் பங்கு கொள்கிறார். இந்த கலந்தாய்வில் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகின்றது.

Wednesday, March 17, 2010

அதிரையில் திரண்ட முஸ்லிம்கள்

அதிரையில் A.J பள்ளி சுற்றுச்சுவரை இடித்த இந்து தீவிரவாதியை கைது செய்ய வலியுறுத்தி செவ்வாய் 16/03/10 அன்று காலை 10 மணியளவில் கடையடைப்பு, பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது. கூட்டித்திற்கு ஹனீப் காக்கா அவர்கள் தலைமையேற்க, T M M K ஜியாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார், ஷாகுல் ஹமீது T M M K, நியாஸ் அகமது (P F I ), மற்றும் ஆலிம் ஹாரூன் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள். நிஜாம் (P F I ) நன்றியுறை நவிழ்ந்தார்கள். வீடியோ...

ஆந்திர முஸ்லிம்களின் ஒற்றுமை...

ஆந்திராவில், அரசுப் பணியிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மாநில அரசு பிற்ப்பித்த உத்தரவை சமீபத்தில் ஆந்திர உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

ரத்து செய்யப்பட்ட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்கக்கோரி, மார்ச் 13 ஆம் தேதிய்னறு ஐக்கிய முஸ்லிம்கள் பேரவையால் (Muslim United Front) ஹைதரபாத்திற்கு அருகில் நடத்தப்பட்ட இம் மாநாட்டிற்கு கட்சி – இயக்க – அமைப்பு வேறுபாட்டைக் கடந்து ஆந்திர முஸ்லிம்கள் அனைவரும் கலந்துக்கொண்டது ஆந்திர அரசியல் கட்சிகளிடம் பயத்தை கிளப்பியுள்ளது.

மாநிலத்தில் நான்கு சதவிகித இட ஒதுக்கீட்டையும்- மத்தியில் பெண்களுக்கான 33 சதவிகித ஒதுக்கீட்டில் முஸ்லிம் பெண்களுக்கும் உள் ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்று இம்மாநாட்டில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

சச்சார் கமிட்டி மற்றும் ஃபதாமி கமிட்டியின் பரிந்துரைகளின் படி முஸ்லிம்களுக்கு கல்வியில் ஒதுக்கீடு கோரிக்கையை முன் வைத்ததோடு மட்டுமல்லாது ரங்கநாத் கமிஷன் பரிந்துரையின் படி இந்திய முஸ்லிம்களுக்கு 10 சதவிகித ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைபடுத்த வலியுறுத்தியது.

கட்சி மற்றும் இயக்க வேறுபாடுகளை கடந்து எம்.ஐ.எம், (MIM) காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் சார்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் – ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்துக்கொண்டனர்.

Tuesday, March 16, 2010

சகோதரர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) - உம்ரா புகைபடங்கள்

அஸ்ஸலாமு அளிக்கும் வரஹ்மாதுல்லாஹ்..

சகோதரர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபின் உம்ரா பயணம் மேற்கொண்டபோது எடுத்த புகைபடங்கள்..



Wednesday, March 10, 2010

மொஸாத் எனும் பயங்கரவாதிகள் தண்டிக்கபடுவார்களா!

அண்டை நாடுகளில் புகுந்து விமான தாக்குதல்கள் மூலமாகவும் பாஸ்பரஸ் போன்ற எரிகொள்ளிகளை வீசியும் அப்பாவி மக்களை கொன்று ஒரு மிரட்சியை ஏற்படுத்துவது இஸ்ரேலின் ஒரு பயங்கரவாத செயல் எனில் மொஸாத் எனும் உளவுப்படை மூலமாக அயல்நாட்டு தலைவர்களை கொல்வது மற்றொரு செயல்.

1991ல் ஈராக் அதிபர் சதாம் ஹூஸைனை கொல்ல முயற்சி செய்தது, 1997 ல் அம்மானில் வைத்து ஹமாஸ் தலைவர் காலித் மிஷாலை கொல்ல நடந்த முயற்சி, 1988ல் பாலஸ்தீன தலைவர் கலீல் வசீரை துனீசியாவில் வைத்து கொலை செய்தது. 1980 ல் எகிப்து நாட்டின் நியூக்ளியர் விஞ்ஞானி யஹ்யா அல் மசாதை கொலை செய்தது போன்றவற்றை குறிப்பிடலாம்.

இதற்காகவே இஸ்ரேல் ஏராளமான அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுத்து உலக நாடுகளில் ஊடுருவ செய்துள்ளது. அதன் தலைவனாக இருப்பவன் மிர் தகான். ஹிஸ்புல்லா இயக்க தலைவரான முக்னிய்யாவை மிக சாமார்த்தியமாக கொன்றதற்காக இவனது பதவிக்காலம் முடிந்த பிறகும் மீண்டும் அவனை மொசாத் தலைவனாக இஸ்ரேல் அரசு நீடிக்க செய்தது.

ஹமாஸ் இயக்கத்தின் எதிர்ப்பை தாக்குபிடிக்க முடியாமல் திணறும் இஸ்ரேல், அதன் தலைவர்களை கொல்லும் பொறுப்பை இந்த மிர் தகானிடம் வழங்கியது. கடந்த மாதம் துபாய்க்கு வந்த ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் மப்ஹூஹை கொல்வதற்காக பல நாடுகளிலிருந்து கூலிப்படைகளை கொண்டு வந்து துபாயில் ஒரு ஹோட்டலில் வைத்து மப்ஹூஹை கொலை செய்துவிட்டு இயற்கை மரணத்தை போன்று ஒரு செட்டப்பையும் செய்துவிட்டு கொலையாளிகள் தப்பிவிட்டனர். ஆனால் அதை மிக சாமார்த்தியமாக துபாய் போலீஸ் கண்டுபிடித்து வெளியிட்டு விட்டது.

சூப்பர் மேன் என பெயர்பெற்ற இந்த மொஸாத் தலைவன் மிர் தகானால் தங்களுக்கு இத்தகைய ஒரு வெட்கக்கேடான நிலை ஏற்படும் என்று இஸ்ரேல் நினைத்திருக்கவில்லை. தாம் நினைத்தது போல இவன் ஒரு ஜேம்ஸ்பாண்ட் அல்ல என்று தற்போது புரிந்து இருக்கும்.

கொலை செய்து விட்டு தடயமில்லாமல் தனது சகாக்கள் தப்பி சென்ற போது வீரசாகசம் செய்துவிட்ட நிலையில் தகானும் எஜமானர்களும் துள்ளிகுதித்தனர். துபாய் போன்ற ஒரு சிறிய நாட்டில் நடக்கும் கொலைகளை அரசால் கண்டுபிடிக்க இயலாது என்றே மொஸாத் கருதியது. ஆனால் தடயமின்றி எங்கும் எதையும் செய்ய துணிந்த மொஸாத்தை விரல் சூப்ப செய்துவிட்டு துபாய் போலீஸ் அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் தாஹி கல்ஹான் தமீமியை ஹீரோ ஆக்கி விட்டது இந்த நிகழ்ச்சி.

விமானநிலையத்தில் இறங்கியது முதல் குற்றவாளிகளின் செயல்பாடுகள் அனைத்தையும் கேமராக்களில் பதிவு செய்ததை பார்த்து இஸ்ரேலை விட பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ் முதலான நாடுகள் மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்பட்டு போனது.

இந்நாடுகளின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி தான் குற்றவாளிகள் துபாய்க்கு வந்தனர். பிரிட்டனில் இது பற்றிய சூடு பறக்க தொடங்கி விட்டது. ஆனால் பாஸ்போர்ட் போலியானது என்று பிரிட்டன் அரசு சொல்கின்றது. போலி பாஸ்போர்ட்டுகள் பரிசோதிப்பதில் ஐரோப்பிய யூனியனிடம் பரிசு பெற்ற பிரிட்டன் தான் இந்த பாஸ்போர்ட்டுகளை பரிசோதனை செய்தததென்றும் அவை ஒரிஜினல் பாஸ்போர்ட் தான் என்றும் துபாய் போலீஸ் கண்டிப்புடன் கூறியுள்ளது.

ஹாலோகிராம் நீரெழுத்துக்களும் பயோமெட்ரிக் முத்திரையுடன் கூடியது தான் பாஸ்போர்ட். அதுவும் போலி என பிரிட்டன் கூறுமானால் அதையும் குற்றவாளிகளால் தயாரிக்க முடியுமெனில் அரசு வழங்கும் பாஸ்போர்ட்டால் என்ன பயன் என்று பிரிட்டிஷ் பத்திரிகையாளரான ராபர்ட் ஃபிஸ்கி கேள்விp எழுப்பியுள்ளார்.

தீவிரவாத செயல்களுக்கு ஐரோப்பிய பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்துவது இது முதன்முறையல்ல. 1987 ல் பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி மொஸாத் நடத்திய ஆபரேசனை தொடர்ந்து அன்றைய பிரதம மந்திரி மார்கரெட் தாச்சர் 13 இஸ்ரேலிய அதிகாரிகளை வெளியேற்றி பிரிட்டனிலுள்ள மொஸாத் அலுவலகத்திற்கு சீல் வைத்து மூடுவிழா நடத்தியது.

இனிமேல் இதுபோன்று நடக்காது என உறுதிமொழி கொடுத்ததால் மீண்டும் பிரிட்டனில் துவங்க அனுமதி வழங்கப்பட்டது. 1997 ல் அம்மானில் விஷம் தெளித்து ஹமாஸ் தலைவர் காலித் மிஷாலை கொல்ல திட்டமிட்ட மொஸாத் கூலிப்படையினர் நியூசிலாந்த் மற்றும் கனடாவின் பாஸ்போhட்டை தான் பயன்படுத்தினர்.

இரண்டு நாடுகளுடனும் பின்னர் மொஸாத் மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டது. மொஸாத் தலைவன் மிர் தகானை பொறுத்தவரை இது அவனுக்கு இரண்டாவது அடி. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு ஏழு வருடங்களுக்கு முன்பாக அவனிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் இஸ்ரேலின் கனவு எதுவும் ஈரான் விஷயத்தில் பலிக்கவில்லை. அணுஆயுத தயாரிப்பில் ஈரான் தன்னிறைவு பெற்றுவிட்டது என நஜாதி அறிவித்த சில நாட்களிலேயே துபாய் கொலையில் அகப்பட்டு அதிலும் மொஸாத்தின் துணி அவிழ்த்தெறியப்பட்டுவிட்டது.

2004ல் செச்சனிய நாட்டின் முன்னாள் அதிபரான ஸலீம்கான் பாந்திரேயை கொன்ற ரஷ்ய உளவாளிகளை கத்தார் அரசு கண்டுபிடித்து விசாரணை செய்து தண்டனை கொடுத்தது என்றாலும் இறுதியாக தண்டனையை அனுபவிக்க ரஷ்யாவிற்கே விட்டுகொடுக்கும் நிலையே ஏற்பட்டது.

ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மப்ஹூஹை கொன்றவர்கள் விஷயத்தில் இதுபோன்றதொரு நடவடிக்கையை எவருமே விரும்பவில்லை. ஆனால் அதற்கு துபாய் அரசு இன்னும் துணிச்சல் பெறவேண்டும்.

அமெரிக்காவிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக கூறி பின்லாடனை தண்டிக்க நினைக்கும் அமெரிக்காவும் பாகிஸ்தானியர்கள் மும்பையில் புகுந்து தாக்கியதாக கூறி அவர்களையும் தண்டிக்க விரும்பும் இந்திய அரசும் ஹமாஸ் தலைவரை இன்னொரு நாட்டில் புகுந்து கொலை செய்த இஸ்ரேலியர்களை தண்டிக்க கோருமா?

உலகின் எப்பகுதியிலுள்ளவர்களுக்கும் தண்டனை வழங்க சக்தி பெற்றதாக கூறிக்கொள்ளும் ஐக்கிய நாடுகளின் சபையும் சர்வதேச நீதிமன்றமும் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்குமா? அல்லது தண்டனை வழங்க இருக்கும் துபாய் அரசுடன் ஒத்துழைக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Tuesday, March 9, 2010

குஜராத்திலிருந்து முஸ்லிம்களை துடைத்தெறிய முயலும் மோடி

குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடியை பயங்கரவாத முதலமைச்சர் என்றே அழைக்கின்றனர். இவர் தலைமையில் அரசு அமைந்த நாள் முதல், குஜராத்தில் எத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்கள், எங்கெல்லாம் வசித்து வருகிறார்கள் என்ற கணக்கெடுப்பை எடுத்து வருகிறார். இதற்கு முன்னர் 1999 ல் இவரது கணக்கெடுப்பை உயர்நீதி மன்றம் தடுத்து நிறுத்தியது. சட்டத்தை மீறுவது என்பது இந்துத்துவவாதிகளுக்கு வழமையான விடயம் என்பதால் இப்போது மீண்டும் துவங்கி விட்டார்.

இப்போது, முஸ்லிம்கள் எப்படி வாழ்கிறார்கள்? எங்கெல்லாம் பரவி வாழ்கிறார்கள் என்று கண்டறிய ஒரு விசாரணை கமிஷன் அமைத்து இருக்கிறார். இதேப் போல் மற்றொரு சிறுபான்மையினமாகிய கிறிஸ்தவர்களின் கணக்கெடுப்பும் எடுக்கப்படுகிறது. இதனை 1949 ம் ஆண்டிலிருந்து துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்புகளின் நோக்கம் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இல்லாத குஜராத்தை உருவாக்குவதே. மேலும் முஸ்லிம்களின் பொருளாதர நிலை குறித்து ஆய்வு செய்யவும் மோடி பணித்துள்ளார். நிலத்தை வாங்கி விற்பவர்களின் கூட்டமைப்பு கூட, முஸ்லிம்களுக்கு நிலத்தை விற்பதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இதுபோல அரசியல் சட்டத்தின் உணர்வுகளுக்கு எதிரான செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லாமல் போனது ஏன்? என்று தெரியவில்லை. குஜராத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்களையும் கணக்கெடுக்கவும் மோடி அரசு தவறவில்லை.

இதற்காக மோடி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சேத்னா என்பவரை நியமித்துள்ளார். இந்த சேத்னா, 2004 ல் பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை தீ வைத்து கொளுத்திய 21 பேரை ஒட்டு மொத்தமாக விடுதலை செய்தவர்.

குஜராத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஜோஹ்புராவில் எந்த அடிப்படை வசதியும் செய்திடாமல் வதைத்து வருகிறார் மோடி. இந்துத்துவா சிந்தனையின் சோதனைக் களம் என்று வருணிக்கப்படும் காந்தி மண் காவிப் புழுதியால் மறைக்கப்பட்டு வருகிறது. குஜராத் முஸ்லிம்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும் சூழ்நிலையில், தங்கள் இசுலாமிய அடையாளங்களை மறைத்து இந்து பெயர்களுடன் ஜீவித்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். மேலும் சங் பரிவார்கள் ஊடகங்களில், குஜராத் சிறந்த நிர்வாகியால் ஆளப்படுவதாக பீலா விடுகின்றனர். ஆனால் உண்மை நிலை அதுவல்ல.

நன்றி:தி சண்டே இண்டியன்..

Saturday, March 6, 2010

மதுக்கூர் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மதுக்கடை மறியல் போர் விளம்பரங்கள்..

இன்ஷா அல்லாஹ் நாளை மதுக்கூர் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மதுக்கடை மறியல் போர் மதுக்கூர் பேருந்து நிலையத்திலிருந்து காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது...




போதையில் தடுமாறும் கணவனின் நிலைகண்டு கலங்கும் தாய்மார்களின் கண்ணீர் போக்க, அதைக் கண்டு கதறும் பிள்ளைகளின் துயரம் போக்க, மகன்களின் மது பழக்கத்தை கண்டு பதறும் பெற்றோர்களின் வாட்டம் போக்க... பொதுமக்கள் திரளாக இப்போராட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றது..

***** மனிதநேய மக்கள் கட்சி ****
மதுக்கூர் நகரம்.

உஷார்!! RSS நடத்தும் போலி கணக்கெடுப்பு!!

தமிழகத்தில் RSS பயங்கரவாதிகளின் மகளிர் அமைப்பு முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு வீடு வீடாகச் சென்று நமது சமுதாய மக்களின் குடும்பவிபரம் குறித்து கணக்கெடு;ப்பு நடத்தி வருகிறார்கள். இது சமீபத்தில் அதாவது 09-02-2010 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் அவர்களால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஆகும். இந்த கணக்கெடுப்பு பற்றி அறிந்த நமது சகோதரர்கள் அவர்களிடம் இதுபற்றிய விபரங்களை கேட்டபோது அரசாங்கம் சொல்லிதான் இந்த கணக்கெடுப்பு நடத்துகிறோம் என்று சொன்னார்கள்.

அப்படிhனால் அரசு உங்களிடம் கணக்கெடுப்பு நடத்தசொல்லி தந்த ஆணையோ அல்லது அரசின் அங்கீகார அடயாள அட்டையோ தந்திருப்பார்களே அதை காண்பியுங்கள் என்று கேட்டபோது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. நாங்கள் சச்சார் கமிஷனுக்காக கணக்கெடுக்க வந்தவர்கள் என்று கூறினார்கள். சரி அதர்க்காக உங்களுக்கு அரசு தந்த அங்கீகார அடையாள அட்டையை எங்களிடம் காண்பியுங்கள் என்று கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லிஇருக்கிறார்கள்.

இதனால் உஷாரான நமது சகோதரர்கள் அரசு அதிகாரிகளை நாடி இந்த சம்பவம் பற்றிகேட்டபோது அரசுதரப்பில் இவ்வாறு கணக்கெடுப்பு நடத்த யாரையும் நாங்கள் அனுமதிக்கவில்லை என்று கூறினார்கள் இதனால் பதட்டமடைந்த சகோதர்கள் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்து இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே ! ஹிந்து பயங்கரவாதிகளான ஆர் எஸ். எஸ். கும்பல்களின் சதிவலைகளை அறிந்து விழிப்புணர்வுடன் இருக்க சமுதாய மக்களை எச்சரிக்கிறோம். இப்படித்தன் இவ்கள் முதலாவதாக மும்பயிலும் பிறகு கோயம்புத்தூரிலும் குஜராத்திலும் போலி கணக்கெடுப்புகளை நடத்தி நமது சமுதாய பெண்மணிகளின் கற்பை சூறையாடினார்கள். பச்சிளம்குளந்தைகளையும் கற்பிணிகளையும் தீயிலிட்டு சாம்பலாக்கினார்கள். நமது சகோதரர்கின் வியாபாரதலங்களை முடிந்த அளவு கொள்ளையடித்துவிட்டு மீதியை தீக்கிரயாக்கினார்கள். தமிழகத்திலும் இதை அரங்கேற்ற ஹிந்து பயங்கரவாதிகள் நாள் குறித்துவிட்டார்கள்.

இதில் ஆச்சரியமான விசயம் என்னவெனில் நமது பகுதிகளின் முழு விபரங்களையும் இந்த சதிகாரர்களுக்கு பட்டியர் இட்டு கொடுப்பது யார் தெரியுமா? நம்மோடு ஒட்டி உறவாடி நெருங்கி பழகும் நம் வீட்டிற்கு வேலை செய்ய வரும் அவர்களது ஒற்றர்களான கொத்தனார் பால்காரன் காய்கறிவியாபாரி ஐஸ்கிரீம் வியாபாரி கியாஸ் வினியோகஸ்தர்கள் தெருவில் பொருள்களை விற்கவரும் டிப்படாப்ஆசாமிகள் பல கம்பெனிகளின் பெயரைச்சொல்லி களப்பணி செய்யும் பெண்கள் என பல ஒற்றர்கள் நமது பகுதிகளில் ஏற்கனவே நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இதிலிருந்து நாம் உஷார்அடையாமல் இருந்தால் இழப்பு நமக்குத்தான். நமது சமுதாய சகோதரிகளுக்கும்தான். நன்மையை ஏவி தீமையை தடுக்க முன் வாருங்கள்.

நன்றி : மின்னஞ்சல் தாருல்ஸபா

குணங்குடி அனீபா வழக்கு விசாரணை முடிவு& விடுதலைக்கு பிரார்த்திக்க வேண்டுகோள்

1997ம் ஆண்டு நடைபெற்ற இரயில் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக விசாரணை சிறைவாசியாக சிறையில் வாடிவரும் குணங்குடி அனீபா அவர்களின் வழக்கு விசாரணை கடந்த 02-03-2010 அன்று முடிவடைந்தது. வழக்கறிஞர்கள் புகழேந்தி, பா.ப. மோகன், சேவியர் பெலிக்ஸ் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகினர்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிரேம் குமார் 19.03.2010 அன்று வழக்கை ஒத்தி வைத்தார். அன்று இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.இந்நிலையில் தமுமுக வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன் சிறையில சென்று குணங்குடி அனீபாவை சந்தித்தார். அப்போது த.மு.மு.க தனது விடுதலைக்காக எடுத்து வந்த முயற்சிகளை நினைவு கூர்ந்த அனிபா அவர்கள் தனது வழக்கில் விரைந்து தீர்ப்பு அளிக்க கோரி தனது மனைவி மூலமாக தலைமை நீதிபதிக்கு மனு அளித்துள்ளதாகவும், விரைவில் தீர்ப்பு வெளிவந்து தானும், மற்ற சகோதரர்களும் விடுதலையாக எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு அனைத்து சகோதரர்களையும் கேட்டுக் கொண்டார்.இடுப்பு வலியால் நடக்க சிரமப்பட்டு கைத்தடி மூலம் நடந்து வந்த அனீபா அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று விரைவில் விடுதலையாக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஒருவழியாக நீண்டகால விசாரணை இழுத்தடிப்புக்கு பின் வழக்கு விசாரணை முடிந்திருக்கிறது. அதே நேரத்தில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னே தற்போதுள்ள நீதிபதியை மாற்றுவதற்கான வேலைகள் நடப்பதாகவும் தெரிகிறது. ஏற்கெனவே 6 நீதிபதிகள் மாறி 7வது நீதிபதியாக பிரேம்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இன்னொரு நீதிபதி வரும் பட்சத்தில் குறைந்தது இன்னும் இரண்டு மாதங்கள் தீர்ப்பு தாமதமாகலாம். இது ஏற்கெனவே வேதனையில் இருக்கும் அனீபா குடும்பத்தினரையும், முஸ்லிம் சமுதாயத்தையும் காயப்படுத்துவதாக இருக்கும்.உயர்நீதிமன்றத்தில் அனீபாவுக்கு பிணை கேட்டபோது இன்னும் ஒரு மாதத்தில் வழக்கை முடித்து விடுவோம் என அரசு தரப்பு சொன்னது.

ஆனால் 4 மாதம் கழிந்துதான் விசாரணை நிறைவுபெற்றிருக்கிறது.தீர்ப்பு வெளிவருவதிலும் தாமதம் ஏற்பட்டால் அது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாகவே இருக்கும். தமிழக அரசு இந்த விசயத்தில் உரிய கவனம் செலுத்தும் என்று நம்புகிறோம்.

Wednesday, March 3, 2010

அமெரிக்கா ஏற்படுத்தும் செயற்கை பூகம்பங்கள்!

ஹைதியில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தை ரஷ்யாவின் கடற்படை ஆய்வு நிறுவனம், அமெரிக்காவின் தரப்பிலிருந்து எந்தவொரு நாட்டிலும் செயற்கையாகப் பூகம்பம் உண்டாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட நில நடுக்க ஆயுதம் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விளைவுகள் என்று வருணித்துள்ளது. அமெரிக்காவின் இந்நவீன ஆயுதத்தை ஈரானுக்கு எதிராக பயன்படுத்த முடியும். இத்தகைய ஆயுதத்தின் சோதனைகள் இறுதிகட்டத்தில் உள்ளன.நில நடுக்க ஆயுதச் சோதனைப் பயன்பாட்டின் போது கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவாக பக்கத்து நாடான ஹைதியில் பெரும் விளைவுகளை உண்டாக்கிய பூகம்பம் ஏற்பட்டது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களை பலி கொடுத்த ஹைதியின் தலை நகரை தற்போது அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய ராணுவம் சுற்றி வளைத்திருக்கிறது. ஹைதியின் தலை நகர் போர்ட் அவ்பரன்ஸ் தெருக்களில் ராணுவத்தின் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது.
ரஷ்ய செய்தி நிறுவனத்தின்படி ரஷ்யாவின் கடற்படை வடக்குப்பிரிவு, பிரதமர் புதினுக்கு கொடுத்த ரகசியத் தகவலில் சில நாட்களுக்கு முன்பு ஹைதியில் ஏற்பட்ட பூகம்பம் அமெரிக்காவின் கடற்படை சோதித்து வந்த ஆயுதம், கட்டுப்பாட்டை மீறியதால் ஏற்பட்டது என்று கூறியுள்ளது. கேதர் நியூஸ் என்ற நிறுவனம் தொகுத்த ஆய்வறிக்கையில் ரஷ்யக் கடற்படை விஞ்ஞானிகளின் மேற்கோள்காட்டி சொல்லப்பட்டுள்ள செய்தியில் ரஷ்யாவின் வடக்கு கடற்படை பிரிவு 2008 ம் ஆண்டு கரீபியன் கடலில் அமெரிக்கக் கடற்படையின் சந்தேகமான செயல்பாடுகளை கண்காணித்து வந்துள்ளது. அப்போது அமெரிக்கா ஏதோ ஒரு முக்கிய ஆயுதத்தைச் சோதிப்பதற்காக இங்கு முகாமிட்டுள்ளது என்ற எண்ணம் ரஷ்யாவின் விஞ்ஞானிகளுக்கு உறுதியானது.

ரஷ்யாவின் கடற்படை விஞ்ஞானிகள் தொடர்ந்து அமெரிக்காவின் செயல்பாடுகளை கண்காணித்து வந்துள்ளனர். 1950 ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட கடற்படை பிரிவை மீண்டும் கடற்படையுடன் சேர்த்துக் கொண்ட அமெரிக்காவின் செயல்பாடுகள் ரஷ்யாவின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
கேதர் நியூஸ் தகவலின்படி கடந்த காலத்தில் ஈரானை இதே ஆயுதம் கொண்டு தாக்க ரஷ்யா திட்டமிட்டிருந்தது. திசம்பர் 1978 ல் அமெரிக்க ஆதரவு ஷா மன்னர் ஈரானை ஆண்டுக்கொண்டிருந்தார். அவரை வீழ்த்தவே ரஷ்யா முயன்றது. வல்லரசு நாடுகளின் இவ்வகையான ஆயுதங்களால் சில நாடுகள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வந்துள்ளன.
கடந்த காலத்தில் வல்லரசாக விளங்கிய ரஷ்யா, அமெரிக்க ஆதரவு ஷா அரசை வீழ்த்துவதற்காக ஈரானின் எல்லைப்பகுதியில் பத்து மெகா டன் எடை கொண்ட குண்டை பூமியின் ஆழத்தில் வெடிக்கச்செய்தது. பால்ட் லயின் ஒன்று ஈரானின் பக்கம் போய்க்கொண்டிருந்தது. நவீன தொழில் நுட்பத்தின் மூலம் வெடிப்பின் அதிர்ச்சி திசையினை ஈரானின் பக்கம் திருப்பி விட்டார்கள். இதன் காரணமாக அமுங்கிக்கிடந்த பால்ட் லயின் செயல்பட்டு 7.4 அளவு பூகம்ப அதிர்வுகள் ஏற்பட்டன.
ரஷ்யாவின் இச்செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு ரஷ்ய ஆதரவு யூகோஸ்லாவியாவில் செயற்கை பூகம்பம் ஏற்படுத்தப்பட்டது. 7.2 அளவிற்கு அதிர்வுகள் ஏற்பட்டன. ரஷ்ய செய்தி நிறுவனத்தின் அறிக்கைப்படி ரஷ்யா 1970ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறது. பூமிக்கு அடியில் அணு ஆயுத வெடிப்பின் மூலமாக செயற்கை பூகம்பத்தை நவீன தொழில் நுட்பத்தின் மூலமாக அமெரிக்கா இதனைச் செய்து வருகிறது.
புதிய தகவல்களின்படி அமெரிக்கா இத்தொடரில் "டெஸ்லா எலக்ட்ரோ மேக்னடிக் பல்ஸ்" ,பிளாஸ்மா, சோனிக் போன்ற தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. ரஷ்ய செய்தி நிறுவனத்தின் தகவலின்படி இம்மூன்று தொழில் நுட்பங்களில் ஒன்றின் மூலம் மார்ச் 2002 ஆம் ஆண்டு ஆப்கானிலும் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அங்கு 7.2 அளவிற்கு பூகம்பம் ஏற்பட்டது.
ஆப்கன் மலைகளில் பதுங்கியிருக்கும் போராளிகளைக் கொல்லுவதற்காகவே அமெரிக்கா இத்தகைய ட்வைஸை பயன்படுத்துகிறது. இதன் விளைவாக இருபதாயிரம் அப்பாவி மக்கள் வீடிழந்தனர். சமீபத்தில் ஹைதியில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு காரணம் அமெரிக்காவின் டெஸ்லா டெக்னாலஜியின் மூலம் கரீபியன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை தோல்வியின் வெளிப்பாடு தான். இத்தகைய ட்வைஸ் 1995 ஆம் ஆண்டு ஜப்பானிலும் பயன்படுத்தப்பட்டது. அதன் அளவு 6.8 ஆக இருந்தது.

அமெரிக்கா செய்து வரும் இத்தகைய சோதனைகளைப் பற்றி அமெரிக்கர்களுக்கு முன்பே தெரியும்.ஹைதியின் தலை நகரம் பாதிப்பிற்குள்ளாகும் என்பதால் அமெரிக்காவின் ஹை கமான்டர் பூகம்பத்தின் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தென்பகுதி கமாண்டரின் டெபுடி கமாண்டர் ஜெனரல் P.K. கீன் என்பவரை தீவின் பகுதியில் பணியமர்த்திவிட்டார். ஆச்சரியமான செய்தி என்னவெனில், ஜெனரல் கீன் அமெரிக்க ராணுவத்தினருடன் மீட்பு பணிகளுக்கான பெரியளவில் சாதனங்களை எடுத்துக் கொண்டு பணியமர்த்தப்பட்ட இடத்தின் அருகில் சென்று விட்டார். இப்படைத் தான் பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரத்திற்குப் பின் ஹைதியின் விமானத்தளம் மற்றும் துறைமுகத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. இவர்கள் பூகம்பத்தை அளக்கும் கருவிகளையும் எடுத்து சென்று பல பகுதிகளில் பரிசோதித்துப் பார்த்துள்ளார்கள். இதற்கு முன் அமெரிக்க கடற்படை கலிபோர்னியாவின் சுற்றுப்புறத்திலும் இது போன்ற சோதனைகளைச் செய்து பார்த்துள்ளது. இதன் தாக்கம் 6.5 என்ற அளவிற்கு இருந்தது. எனினும் இதில் யாரும் கொல்லப்படவில்லை.

நன்றி : சமரசம்

தஞ்சை மாவட்டத்தில் மின் விநியோக நேரத்தில் மாற்றம்

தஞ்சாவூர்,​​ கும்பகோணம்,​​ பட்டுக்கோட்டை,​​ ஒரத்தநாடு,​​ பேராவூரணி,​​ அதிராம்பட்டினம்,​​ பாபநாசம்,​​ திருக்காட்டுப்பள்ளி,​​ மதுக்கூர் ஆகியப் பகுதிகளில் மார்ச் 1 ஆம் தேதி முதல் மின் விநியோக நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் மா.​ தங்கராஜு.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கும்பகோணம் பகுதி:​ மேலக்காவிரி பகுதியில் காலை 6 முதல் 8 மணி வரை,​​ மகாமகம்,​​ டி.எஸ்.ஆர்.​ பாபநாசம்,​​ ஆடுதுறை பகுதிகளில் காலை 8 முதல் 10 மணி வரை,​​ அய்யம்பேட்டை பகுதியில் பிற்பகல் 2 முதல் 4 மணி வரை,​​ கும்பகோணத்தில் காந்திநகர்,​​ சுந்தரபெருமாள் கோயில்,​​ வாட்டர் ஒர்க்ஸ்,​​ திருபுவனம் பகுதிகளில் மாலை 4 முதல் 6 மணி வரை,​​ பட்டுக்கோட்டை,​​ ஒரத்தநாடு பகுதிகளில் காலை 6 முதல் 8 மணி வரை,​​ அதிராம்பட்டினம் பகுதியில் காலை 10 முதல் பகல் 12 மணி வரை,​​ பேராவூரணி பகுதியில் பிற்பகல் 2 முதல் 4 மணி வரை,​​ மதுக்கூர் பகுதியில் மாலை 4 முதல் 6 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்:​ திருவையாறு மற்றும் செங்கிப்பட்டி பகுதியில் காலை 6 முதல் 8 மணி வரை,​​ அன்னை சத்யா விளையாட்டு மைதானம்,​​ சுற்றுலா மாளிகை,​​ திருக்கானூர்பட்டி பகுதிகளில் காலை 8 முதல் 10 மணி வரை,​​ வல்லம் பகுதியில் காலை 10 முதல் பகல் 12 மணி வரை,​​ பூக்குளம் பகுதியில் பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை,​​ விளார்,​​ முனிசிபல்,​​ இண்டஸ்டிரியல் திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை,​​ கரந்தை,​​ வ.உ.சி.​ நகர்,​​ கீழவாசல்,​​ வண்டிக்காரத் தெரு பகுதிகளில் மாலை 4 முதல் 6 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

Monday, March 1, 2010

கோவையில் த மு மு க வின் பதினைந்தாம் ஆண்டு மாபொரும் எழுச்சி பொதுக்கூட்டம்

கோவையில் த மு மு க வின்
பதினைந்தாம் ஆண்டு மாபொரும் எழுச்சி பொதுக்கூட்டம்


தையல் இயந்திரம் வழங்குதல், மற்றும் நூலகம் திறப்பு விழா

இடம் : கோவை செல்வபுரம் நாள் : 28- 02- 2010 (ஞாயிற்றுகிழமை) மாலை: 6 - 30 மணி

தலைமை : காதர்ஹீசைன் ( தமுமுக செல்வபுரம் கிளை தலைவர் )

வரவேற்புரை : இப்ராஹிம் ( தமுமுக செல்வபுரம் கிளை துனைச் செயலாளர்)
முன்னிலை : மைதீன் சேட், மாநகர தலைவர், தமுமுக
அப்துல் பஷிர், மாவட்ட தலைவர், தமுமுக

சிறப்புரை
எஸ். ஹைதர் அலி அவர்கள்
மாநில பொதுச் செயலாளர், தமுமுக

கோவை இ. உமர் அவர்கள்
மாநில செயலாளர், தமுமுக

கோவை ஜாஹீர் அவர்கள்
மாநில பேச்சாளர், தமுமுக

நன்றியுரை
இப்ராஹிம்
தமுமுக செல்வபுரம் கிளை செயலாளர்

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...