இன்று 27/04/2013 காலை 11:30 மணியளவில் மதுக்கூர் பெரியப்பள்ளிவாசல் அருகில் மதுக்கூர் நகர தமுமுக சார்பாக நடத்தப்படும் இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சியினை தமுமுக மாநில செயலாளர் சகோதரர் அப்துல் சமது அவர்கள் திறந்து வைத்தார்கள்.
Friday, April 26, 2013
இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் மாநகரில் நாளை 27/04/2013 சனிக்கிழமை (இன்ஷா அல்லாஹ்) காலை 10:30 மணி முதல் இரவு 6:30 மணிவரை உலகில் நடைபெறும் இனப்படுகொலைகளை சித்தரிக்கும் மாபெரும் புகைப்பட கண்காட்சி நடைபெறுகின்றது.
இப்புகைப்பட கண்காட்சியினை நமது குடும்பத்தினர் பார்க்க சொல்லி ஆர்வமூட்டுங்கள்.
அதனை தொடர்ந்து இரவு 6:30 மணியளவில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.
இப்பொதுக்கூட்டத்தில் தமுமுக மாநில பொதுச்செயலாளர் சகோதரர் அப்துல் சமது அவர்கள் கலந்து கொண்டு
"முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்" தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துகின்றார்.
அனைவரும் வருக.
Wednesday, April 24, 2013
மதுக்கூர் இடையகாடு (பெரியார் நகர்) மர்ஹும் KPMK பக்கீர் மைதீன் அவர்களின் மனைவியும்,KPM முபாரக் அலி அவர்களின் தாயாருமான கமருன்னிஷா அவர்கள் இன்று 24/04/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
Mubarak ali contact No : 99650 86120
Saturday, April 20, 2013
மதுக்கூர் இடையகாடு மருகை என்கின்ற மர்ஹும் முத்துமரைக்காயர் அவர்களின் மனைவியும்,கறிக்கடை மர்ஹும் அப்துல் ஜலீல்,சேட் (எ) நைனாமூசா,உமர் அலி,உஸ்மான் அலி,ஹாஜா மைதீன் ஆகியோரின் தாயாருமான பாத்திமா ஜொகரா அவர்கள் இன்று 20/04/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
Wednesday, April 17, 2013
மதுக்கூர் புதுத்தெரு (மஸ்ஜித் நூர் தெரு பள்ளித்தெரு) பருப்பானத்து வீட்டு காதர் மைதீன்,குத்புதீன்,அன்வர்தீன் ஆகியோரின் தகப்பனர் அப்துல் மஜீது அவர்கள் இன்று 17/04/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
Tuesday, April 16, 2013
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தண்ணீர்,மோர் பந்தல்கள்
கடும் கோடை காலத்தில் மக்களுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர்,மோர் பந்தல்கள் தாய்கழகம தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் தொடக்கப்பட்ட காலத்திலிருந்து பொதுமக்களுக்கு சமுதாய பேரியக்கம் தமுமுக சார்பாக வைக்கப்பட்டு வருவது வழக்க்ம்.
தமுமுகவின் வழிகாட்டலின்படி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தமிழகமெங்கும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.இன்று 16/04/2013 மனிதநேய மக்கள் கட்சி மதுக்கூர் நகர கிளையின் சார்பாக 9வது வார்டுக்கு உட்பட்ட முகம்மதியர்தெரு,மகாசூப்பர் மார்க்கெட்,கொல்லைத்தெரு,பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலை ஆகியவற்றின் ஜங்ஷனில் தண்ணீர் பந்தல் நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.இதில் பொதுமக்களுக்கு ஐஸ்கீரிம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில்நகர செயலாளர் நிசார் அகமது,கவுன்சிலர் கபார்,பவாஸ்,ரமீஸ்,மாலிக்,மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
.
Thursday, April 11, 2013
மதுக்கூர் பள்ளிவாசல் தெரு வளநாடு மளிகை அப்துல்சுபான்,மர்ஹும் அப்துல் சமது,அமானுல்லா,ஜமால் முகம்மது ஆகியோரின் தாயார் ஜைத்துன் அம்மாள் அவர்கள் இன்று 11/04/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
Saturday, April 6, 2013
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே
மதுக்கூர் இடையகாடு பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடையினை கண்டித்து மதுக்கூர் நகர மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கடந்த 26/03/2013 அன்று மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்து அதற்கான களப்பனியினை செய்தனர்.போராட்டத்தின் வீரியத்தினை அறிந்துகொண்ட அரசுத்துறை மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இடையகாடுவாசிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.பேச்சுவார்த்தையில் ஒருசில நாட்களில் புதிய மின் மாற்றி அமைக்கப்படும் என எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர்.அதன்படி கடந்த 02/04/2013 அன்று இடையகாடு பகுதியில் 100 KV மின் திறன் கொண்ட புதியமின்மாற்றி வைக்கப்பட்டது.எல்லா புகழும் அல்லாஹ்கே !
இருந்தும் தெருவிளக்குகள் இடையகாடு பகுதியில் இன்னும் சரியாக எரியவில்லை.வீட்டு பகுதிகளுக்கு சீரான மின்சாரம் கிடைக்கின்றது.தெருவிளக்குகள் கூடிய விரைவில் சரிசெய்யப்படும் என கூறியுள்ளார்கள்.
துரிதமாக செயல்பட்ட மின்வாரியத்திற்கு எங்களின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
Wednesday, April 3, 2013
மதுக்கூரில் சாலை மறியல் போராட்டம்
மதுக்கூர் ஆற்றாங்கரை மெயின்ரோட்டில் (பழைய சுப்பையன் கிளப் அருகில்) பெண்கள் குளிக்கும் கரை மிக அருகில் புதிய அரசுமதுபானக்கடை நேற்று திடீர் என திறக்கப்பட்டது.அதிர்ச்சி அடைந்த அப்பகுதிமக்கள் எப்படியும் அரசுமதுபானக்கடையினை அகற்றவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்ட அப்பகுதி மக்கள் இன்று காலை 10 மணியளவில் ஆற்றாங்கரை அருகில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்பபோராட்டத்தில் 100 பெண்கள் உட்பட பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள்,தமுமுக மதுக்கூர் நகர நிர்வாகிகள்,எஸ்டிபிஐ நகர நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சியினர் என 200 க்கும் அதிகமனோர் கலந்து கொண்டனர்.
போராட்ட இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை ஆர்டிஓ ரகுமத்துல்லகான்,மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் வருகை தந்து இரண்டு நாளில் கடை இடமாற்றம் செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததினை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
புகழ் அமைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே !
மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் பொதுமக்களுக்கு மிகவும் இடையூராக இருந்த அரசு மதுபானக்கடைகளை அப்புறப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் களம்கண்ட சமுதாய பேரியக்கமாம் தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக்கழகத்தின் மதுக்கூர் நகர கிளை தொடர் முயற்சிகளை மேற்கொண்டது.அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் முக்கூட்டுச்சாலையில் உள்ள இரு டாஸ்மாக் கடைகளில் ஒன்று இன்று முதல் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது.மற்றொன்று புதிய கட்டிடத்தில் வேறு இடத்திற்கு இடம் மாற்றப்படும் என கலால்துறையினர் உறுதியளித்து உள்ளார்கள்.
மேற்படி டாஸ்மாக் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் CM Cell மூலமாக கோரிக்கை மனு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கொடுக்கப்பட்டது.Cm Cekk மூலமாகவும் கோரிக்கை ஏற்கப்பட்டதாக பதில் அனுப்பப்பட்டுள்ளது.விரிவான செய்திகள் விரைவில் (இன்ஷா அல்லாஹ்)