இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, April 3, 2013


மதுக்கூரில் சாலை மறியல் போராட்டம்

மதுக்கூர் ஆற்றாங்கரை மெயின்ரோட்டில் (பழைய சுப்பையன் கிளப் அருகில்) பெண்கள் குளிக்கும் கரை மிக அருகில் புதிய அரசுமதுபானக்கடை நேற்று திடீர் என திறக்கப்பட்டது.அதிர்ச்சி அடைந்த அப்பகுதிமக்கள் எப்படியும் அரசுமதுபானக்கடையினை அகற்றவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்ட அப்பகுதி மக்கள் இன்று காலை 10 மணியளவில் ஆற்றாங்கரை அருகில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்பபோராட்டத்தில் 100 பெண்கள் உட்பட பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள்,தமுமுக மதுக்கூர் நகர நிர்வாகிகள்,எஸ்டிபிஐ நகர நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சியினர் என 200 க்கும் அதிகமனோர் கலந்து கொண்டனர்.

போராட்ட இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை ஆர்டிஓ ரகுமத்துல்லகான்,மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் வருகை தந்து இரண்டு நாளில் கடை இடமாற்றம் செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததினை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...