மதுக்கூர் சிரமேல்குடிரோடு தல்பார் வீட்டு மர்ஹும் அப்துல் ஜப்பார் அவர்களின் மகன் அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று 31/03/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்கின்றோம்.
Saturday, March 9, 2013
மதுக்கூர் நூருல் இஸ்லாம் தெரு அப்துல்கனி.அப்துல்வஹாப்,இமாமூதின்,இல்மூதீன் ஆகியோரின் தகப்பனார் அப்துல் மஜீது அவர்கள் நேற்று 08/03/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
மதுக்கூர் சூரியத்தோட்டம் மர்ஹும் M.S.அல்லாபிச்சை அவர்களின் மருமகன் நைனா மூசா அவர்கள் 08/03/2013 இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
Thursday, March 7, 2013
மதுக்கூர் தமுமுக நகர மாணவரணி பொறுப்பாளருக்கு அரிமா சங்கம் சார்பாக பாராட்டு. (அல்ஹம்துலில்லாஹ்)
மதுக்கூர் அருகில் உள்ள படப்பைக்காடு கிராமத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி குளத்தில் குளிக்க சென்ற 5 குழந்தைகள் தண்ணீரில் முழ்கியது.அதே கரையில் குளித்த சகோதரர் ஜபருல்லா துணிச்சலாக போராடி மூன்று குழந்தைகளை காப்பாற்றினார்.(இச்செய்தியினை கடந்த 06/05/2012 அன்று இமெயில் மூலமாக நமது வாசக நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டோம்)
சகோதரர் ஜபருல்லா அவர்களின் இந்த துணிச்சலான செயலைப்பாராட்டி பல்வேறு சமுதாய.சமூக.சேவை அமைப்புகள் பாராட்டி வருகின்றார்கள்.கடந்த 02/03/2013 அன்று அரிமா சங்கம் சார்பாக சகோதரர் ஜபருல்லா அவர்களை பாராட்டி பரிசும் வழங்கினார்கள்.(எல்லா புகழும் இறைவனுக்கே !)
சகோதரர் ஜபருல்லா அவர்கள் மதுக்கூர் நகர தமுமுக மாணவரணி பொறுப்பாளராக இருந்து இன்று மனிதநேய மக்கள் கட்சியின் நகர துணைச்செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய செய்தி
(3 குழந்தைகளை காப்பாற்றிய தமுமுக மாணவரணி பொறுப்பாளர்.)
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் பேருராட்சி துணைத்தலைவராக இருப்பவர் ஜீவானந்தம் என்கின்ற ஆனந்த்.இவரின் சகோதரியின் பிள்ளைகள் கோடை விடுமுறைக்காக மதுக்கூரில் உள்ள தாய்மாமா (ஆனந்த்) வீட்டிற்க்கு வந்துள்ளார்கள்.
04/05/2012 காலை சுமார் 11:30 மணியளவில் ஆனந்த சகோதரிகளின் பிள்ளைகள்,ஆனந்தின் மகள் என 5 குழந்தைகள் மதுக்கூர் சூரியத்தோட்டம் அம்மாகுளம் அருகில் உள்ள தாமரைக்குளம் (படப்பைக்காடு கிராம)எல்லைக்கு உட்பட்ட குளத்தில் நேற்று குளித்து உள்ளார்கள்.குழந்தைகள் குளித்த அதே கரையில் சகோதரர் ஜபருல்லாவும் (மதுக்கூர் தமுமுக மாணவரணி பொறுப்பாளர்)குளித்துள்ளார்.
முதன்முதலாக அந்த குளத்தில் குளித்த குழந்தைகள் குளத்தின் ஆழத்தை அறியாமல் சற்று தொலைவில் சென்றுவிட்டனார்.நீச்சல் தெரியாத குழந்தைகள் 5 பேரும் சகதி நிறைந்த பகுதிக்கு சென்றுவிட்டனர் அவர்களின் ரஞ்சித்(12) என்ற மாணவன் தன் கண் எதிரே ராஜேஸ் (14),நந்தகுமார் (6)இருவரும் தண்ணீரில் மூழ்குவதைஅறிந்து கரையில் தனது துணிகளுக்கு சோப்பு போட்டுக்கொண்டிருந்த சகோதரர் ஜபருல்லாவை நோக்கி அண்ணே எங்களை காப்பாற்றுங்கள் என சப்தம் போட்டுஇருக்கின்றார்.குழந்தைகள் தண்ணீரில் மூழ்குவதை அறிந்த சகோதரர் ஜபருல்லா துரிதமாக செய்ல்பட்டு குழந்தைகள் கபில் (5),ரஞ்சித் (15) காவியா (12) மூன்று குழந்தைகளையும் காப்பாற்றி கரையில் சேர்த்துவிட்டு மீண்டும் குளத்துக்குள் சென்று மற்ற இருவரையும் காப்பாற்ற முயற்சிகள் செய்து உள்ளார்.அவரால் மற்ற இரு குழந்தைகளையும் காப்பாற்ற முடியவில்லை.
துரிதமாக செயல்பட்டு 3 குழந்தைகளை காப்பாற்றிய சகோதரர் ஜபருல்லா அவர்களின் செயல் அனைவராலும் பாரட்டப்படக்கூடியதாக உள்ளது.
Wednesday, March 6, 2013
புகழ் அனைத்தும் அல்லாஹ்கே
கடந்த 26/02/2013 அன்று பட்டுக்கோட்டையில் உள்ள பிரபல ஜவுளிக்ககடையில் பணிப்புரியும் பெண்கள் வேலை முடிந்து ஜவுளிக்கடைக்கு சொந்தமான வேனில் ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது மோகூர் கிராமத்தில் வேன் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்தவர்கள் காயமடைந்தார்கள்.விபத்து நடந்த இடத்திற்க்கு விரைந்து சென்ற தமுமுக மதுக்கூர்,அதிராம்பட்டிணம் ஆம்புலன்ஸ் மற்றும் தமுமுகவினர் துரிதமாக செயல்பட்டு காயமடைந்தவர்களை பட்டுக்கோட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவங்களை அறிந்த ஜவுளிக்கடையின் அதிபர் மதுக்கூர் தமுமுக நகர அலுவலகத்திற்கு கடந்த ஞாயிறு 03/03/2013 இரவு வருகைதந்து தமுமுகவினரின் சேவையினை மனதாரபாரட்டிசென்றார்.
எல்லா புகழும் அல்லாஹ்கே !
Sunday, March 3, 2013
மதுக்கூர் மெயின்ரோடு வெற்றிக்கலைக்காரவீட்டு மர்ஹும் முகம்மது யூசுப் அவர்களின் மனைவியும்,மகாராஜா டெக்ரேசன் அப்துல் சலீம்,பஷீர் அகமது ஆகியோரின் தாயார் ரபிஹா அம்மாள் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்