Saturday, March 31, 2012
திசை மாறும் ஊடகங்கள்
சமூகநல ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் மக்கள் நலன் நாடும் அமைப்புகளையெல்லாம் தொடர்ந்து கூறிவந்த கருத்தை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பணியினை சிறப்பாக வகித்த மார்க்கண்டேய கட்ஜு கூறியிருப்பது பொருத்தமானது. வணிகநோக்கு ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படும் அன்னா ஹசாரே ஊழலை ஒழிக்க அறிவியல் பூர்வமான எந்தத் தீர்வையும் அவரால் சொல்ல முடியவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். 'பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிடுவதாலும், வெறும் 15 நாட்கள் போராடினால் மட்டும் ஊழலை ஒழித்துவிட முடியாது எனக்கூறிய கட்ஜு,
"நாட்டில் எரியும் பிரச்சனைகள், வேலையில்லா திண்டாட்டம், ஏழ்மை என எவ்வளவோ இருக்க ஐஸ்வர்யா ராய் எப்போது குழந்தை பெறுவார், சச்சின் டெண்டல்கர் எப்போது சதம் அடிப்பார் என்பது போன்ற அறிவுப்பூர்வமான(?) விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைச் சாடினார். டெண்டுல்கர் சதம் அடிப்பதால் பாலாறும் தேனாறும் ஓடப்போகிறதா?"
என்று குத்தலாகக் கேட்டார்.
நாட்டின் 90 சதவீத ஊடகங்கள் இத்தகையப் போக்கினையே கடைப்பிடிப்பதை எவ்வளவு நாள்தான் சகித்துக் கொண்டிருப்பது என்ற வினாவினை நாட்டு மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். மார்க்கண்டேய கட்ஜு போன்ற நடுநிலையோடு செயல்படும் சான்றோர்களின் கருத்துக்கள் இப்போது தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகின்றன. நாட்டு மக்களின் மனநிலையை, பொதுப்புத்தியை வடிவமைக்க நினைக்கும் வணிகநோக்கு ஊடகங்களின் எண்ணம் இனிவரும் காலத்தில் நிறைவேறாது என்பது திண்ணம்.
மக்களின் விழிப்புணர்வு பற்றிப்பரவத் தொடங்கி யதால் செயற்கையான பரபரப்பு விரைவில் மறையத் தொடங்கும்
Thursday, March 29, 2012
பிரதமருடன் முஸ்லிம் எம்.பி.க்கள் சந்திப்பு.
காவல்துறையின் செயலைக் கண்டித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, மூத்த பத்திரிக்கையாளர் காஸிமிக்கு இழைக்கப்படும் கொடுமைகளை ஆதாரத்துடன் விளக்கினர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் அப்பாவி முஸ்லிம் பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்தனர். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிடுகையில், இதுபோன்ற செயல் கவலை அளிப்பதாக குறிப்பிட்டு, இதுகுறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் விசாரிப்பதாகவும் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் சுல்தான் அஹமது எம்.பி. உட்பட பத்து எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.
மூத்த பத்திரிக்கையாளருக்கே இந்த நிலையென்றால் சாதாரண பாமர முஸ்லிம்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு இந்த சம்பவம் மிகப்பெரிய சான்றாக உள்ளது.
Sunday, March 25, 2012
இராமநாதபுரம் மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக ரயில்வே துறையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக தொடர்ந்து இராமநாதபுரத்தை புறக்கணித்து வரும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கீழ்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இராமநாதபுரம் சட்மன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் அரண்மனையில் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க. மாநில செயலாளர் சலிமுல்லாகான், ம.ம.க மாநில அமைப்பு செயலாளர் மதுரை மைதீன், மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா, மாவட்ட செயலாளர் தஸ்பிக் அலி, த.மு.மு.க மாவட்ட செயலாளர் அன்வர் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்திக் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், வர்த்தக சங்க அமைப்புகள், பொதுநலஅமைப்புகள் கலந்து கொண்டனா;.
கோரிக்கை:
1) மதுரை - ராமேஸ்வரம் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும்.
2) மதுரை - ராமேஸ்வரம் இடையே கூடுதல் ரயில் சேவை வேண்டும்.
3) திருச்சி - ராமேஸ்வரம் இடையே கூடுதல் ரயில் சேவை வேண்டும்.
4) காரைக்குடி - கன்னியாகுமரி இடையே இராமநாதபுரம் வழியாக புதிய வழித்தடம்
5) ராமநாதபுரம் வந்துசேரும் சென்னை விரைவு ரயில் காலை 5 முதல் 8 மணிக்குள் வந்து சேரவேண்டும்.
6) சென்னை விரைவு ரயில்களை உச்சப்புளி ரயில்நிலையத்தில் நிறுத்துதல்.
7) சென்னை - ராமேஸ்வரம் இடையே சூப்பர் பாஸ்ட் வண்டியை பகல் நேரத்தில் விடுதல்
8) ராமேஸ்வரம் முதல் கோவை வரை ரயில் சேவை வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்;.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமார் 500க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Thanks : tmmk.in
Thursday, March 22, 2012
புனிதப் பயணம் வந்த தமிழகப் பெண்கள் சவூதியில் பரிதவிப்பு.
புனிதப்பயணமாக சவூதி அரேபியாவிற்குச் செல்லும் பெண்கள் இஸ்லாமிய வரம்புக்குட்பட்ட , தக்க துணையின்றிப் பயணம் செய்ய அந்நாட்டுச் சட்டம் அனுமதிப்பதில்லை.இந்நிலையில் மஹ்தியா நிறுவனம் மூலம் மக்காவுக்குச் சென்ற மயிலாடுதுறைப் பகுதியைச் சேர்ந்தத நான்கு பெண்மணிகள் திரும்பவும் இந்தியாவுக்கு வருவதற்குரிய தக்க துணையை இந்நிறுவனம் ஏற்பாடு செய்யவில்லை. இதை அறியாத இவர்கள் இந்தியாவிற்குத் திரும்புவதற்காக ஜித்தா விமான நிலையம் சென்றபோது விமான நிலையத்தில் அதிகாரிகள் இவர்களைத் தனியாகப் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.இரு முறை முயன்றும் இப் பெண்மணிகள் நாடு திரும்ப அனுமதிக்காமல், மக்காவிற்கே திருப்பி அனுப்பப் பட்டனர்.
இந்தத் தகவல் அறிந்த முன்னாள் தமிழக வக்புவாரியத் தலைவர் ஹைதர் அலி ஜித்தா தமிழ்சங்கத்தைச் சேர்ந்த ரஃபியா மற்றும் முகமது சிராஜுதீன் ஆகியோரைத் தொடர்பு கொண்டார்.இவர்களின் முயற்சியால் ஜித்தாவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்குத் தகவல் அனுப்பப்பட்டது. இந்த வாரத்துக்குள் இந்த நான்கு பெண்மணிகளையும் இந்தியாவுக்கு அனுப்ப முடியும் என்று தெரிய வருகிறது.
Wednesday, March 21, 2012
பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஹஜ் பயணிகளுக்காக மார்ச் 24-ல் சிறப்பு முகாம்
Saturday, March 10, 2012
கலாச்சார சீரழிவு அதிகரித்து வருகிறது-தமுமுக கவலை
Sunday, March 4, 2012
அசினா பர்வீன்... நெகிழ வைத்த பிஞ்சு!
Thursday, March 1, 2012
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைப்பு
நன்றி: திணமணி செய்தி 01-Mar-2012