இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Sunday, March 25, 2012

இராமநாதபுரம் மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக ரயில்வே துறையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்


இராமநாதபுரம் மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக தொடர்ந்து இராமநாதபுரத்தை புறக்கணித்து வரும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கீழ்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இராமநாதபுரம் சட்மன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் அரண்மனையில் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க. மாநில செயலாளர் சலிமுல்லாகான், ம.ம.க மாநில அமைப்பு செயலாளர் மதுரை மைதீன், மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா, மாவட்ட செயலாளர் தஸ்பிக் அலி, த.மு.மு.க மாவட்ட செயலாளர் அன்வர் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்திக் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், வர்த்தக சங்க அமைப்புகள், பொதுநலஅமைப்புகள் கலந்து கொண்டனா;.

கோரிக்கை:

1) மதுரை - ராமேஸ்வரம் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும்.

2) மதுரை - ராமேஸ்வரம் இடையே கூடுதல் ரயில் சேவை வேண்டும்.

3) திருச்சி - ராமேஸ்வரம் இடையே கூடுதல் ரயில் சேவை வேண்டும்.

4) காரைக்குடி - கன்னியாகுமரி இடையே இராமநாதபுரம் வழியாக புதிய வழித்தடம்

5) ராமநாதபுரம் வந்துசேரும் சென்னை விரைவு ரயில் காலை 5 முதல் 8 மணிக்குள் வந்து சேரவேண்டும்.

6) சென்னை விரைவு ரயில்களை உச்சப்புளி ரயில்நிலையத்தில் நிறுத்துதல்.

7) சென்னை - ராமேஸ்வரம் இடையே சூப்பர் பாஸ்ட் வண்டியை பகல் நேரத்தில் விடுதல்

8) ராமேஸ்வரம் முதல் கோவை வரை ரயில் சேவை வேண்டும்.


ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்;.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமார் 500க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.




Thanks : tmmk.in

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...