இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, May 18, 2010

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தமிழக அரசின் இலவச பயிற்சித் திட்டம்

சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு அளிக்கும் பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மேற்கொண்டு வருகின்றன.இப்பயிற்சிகள் இலவசமாகவே அளிக்கப்படுகின்றன.

எலெக்ட்ரிகல் டெக்னீஷியன், ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன், டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பிரிவுகளில் பயிற்சிகள் தரப்படுகின்றன.

யாரெல்லாம் இப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்?
எலக்ட்ரிகல் டெக்னீஷியன் பயிற்சி:
இப்பயிற்சிக்கு 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும். 32 வயதுக்கு உள்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு ஓராண்டு ஆகும்.

ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன் பயிற்சி:
இப்பயிற்சிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 25வயதுக்கு உள்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் கால அளவு 6 மாதங்கள் ஆகும்.

டி.டி.பி. (டெஸ்க் டாப் பப்ளிஷிங்), டேட்டா என்ட்ரி பயிற்சிகள்:
டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பயிற்சிகளுக்கு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 32. இது மூன்று மாதப் பயிற்சி ஆகும்.

பயிற்சிக்கு விண்ணப்பிக்க என்ன நடைமுறை?
விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்,வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ்கள், நகல்கள் ஆகியவற்றை ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய முகவரி இட்ட உறையையும் கொண்டு வரவேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய இடம் எது?
தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர்,
42/25,ஜி.ஜி. காம்ப்ளெக்ஸ்,இரண்டாவது தளம்
(வி.ஜி.பி. அருகில்),அண்ணா சாலை,
சென்னை -600 002.
தொலைபேசி:044- 2852 7579,2841 4736,98401 16957.
சி.ரங்கநாதன், இயக்குநர்,
தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர்,

Monday, May 17, 2010

முஸ்லிம் ஃபோபியா:தேவ்பந்த் மார்க்க அறிஞரை விமானத்திலிருந்து இறக்கி கைதுச்செய்த போலீஸ்

முஸ்லிமாக இருந்தால் விமானத்தில் வைத்து மொபைல் போனில் கூட பேசக்கூடாது போலும். அதுவும் தாடியும், தொப்பியும் வைத்திருந்தால் விமானத்தில் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு கிலிதான் போங்க.

டெல்லியிலிருந்து துபாய் வழியாக லண்டன் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்வதற்காக ஏறி அமர்ந்தார் உ.பி.மாநிலத்தின் பிரசித்திப் பெற்ற தேவ்பந்த் தாருல் உலூம் மதரஸாவின் மார்க்க அறிஞர் மவ்லானா நூருல் ஹுதா.

விமானம் புறப்படுவதற்கு முன்னர் இவர் தனது மொபைல் போனில் தனது ஊரிலிலுள்ள உறவினரிடம் 'ஜஹாஸ் உட்னே வாலா ஹெ, ஹம் உட்னே வாலா ஹெ' (விமானம் இப்பொழுது புறப்படப் போகிறது) என்று கூறியுள்ளார்.

இதனை அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர் 'மவ்லானா விமானம் இப்பொழுது வெடித்துச் சிதறப் போகிறது' என மொபைல் போனில் கூறியதாக விமான பணியாளர்களிடம் கூற அவர்கள் பைலட்டிடம் கூறி விமானம் புறப்படுவது நிறுத்தப்பட்டது.

போலீஸில் இவ்விபரம் தெரிவிக்கப்பட்டவுடன் அவர்கள் உடனடியாக வந்தனர், மவ்லானா நூருல் ஹுதா தான் பேசியது அவ்வாறல்ல எனக்கூறி புரியவைத்த போதிலும் 50 வயதான மவ்லானாவை தீவிரவாதி என சந்தேகமடைந்து கைதுச் செய்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவுச் செய்து திஹார் ஜெயிலில் அடைத்துள்ளனர். பின்னர் உள்துறை அமைச்சகத்துக்கு இவ்விபரம் தெரியவந்து அவர்கள் தலையிட்டு மவ்லானா ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் ஒரு இஸ்லாமிய மாநாட்டில் கலந்துக் கொள்ள செல்லவிருந்தார் மவ்லானா. இதனைக் குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் ஒய்.எஸ்.தட்வால் கூறுகையில், "அப்பெண்மணிக்கு ஏற்பட்ட தவறான புரிந்துணர்வு தான் பிரச்சனைக்கு காரணம்" என்றார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...