இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, August 30, 2016

மதுக்கூரில்

கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்திற்கு காவிரி நீரைப் பெற்று தரக்கோரி இன்று விவசாய சங்கங்கள் நடத்திய போராட்டத்தில் மமக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு.

மனிதநேய மக்கள் கட்சி தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் எம்.கபார்.தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் ஜபருல்லா,முன்னாள் பேரூர் கழக தலைவர் ஹாஜா மைதீன் ஆகியோர்  கலந்து கொண்டார்கள்.



மதுக்கூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு நேரமருத்துவர்கள் நியமிக்க மமகவினர் மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து கோரிக்கை..

மதுக்கூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவர்கள் பணி அமர்த்த கோரி இன்று மாவட்ட ஆட்சி தலைவரை மனிதநேய மக்கள் கட்சியினர் சந்தித்து மனு கொடுத்து உள்ளனர்.

இக்கோரிக்கை மிக முக்கியமானது எனவும் அவசியமானது எனவும் பலதரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்பு எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து.

இச் சந்திப்பில் மமக மதுக்கூர் நகர செயலாளர் ராசிக் அகமது, துனை செயலாளர் சபீர் அகமது, தமுமுக மாவட்ட துணை செயலாளர் ஜபருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 


 

Thursday, August 25, 2016

வாழ்த்தும்..பிரார்த்தனையும்.
இளம் சாதனையாளர் விருது பெற்ற எங்கள் பாசமிகு சகோதரர்.மதுக்கூர் பேரூர் கழக பொருளாளர்,கிரசெண்ட் கன்ஸ்ட்ரசன் மதுக்கூர் Er .A முகமது இலியாஸ் BE அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்களும்.பிரார்த்தனைகளும்.


அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்.(TMMK)
மதுக்கூர் பேரூர்க் கழகம்

Wednesday, August 24, 2016


பாதுகாப்பானதா கூடங்குளம் உலை?




அணுஉலை விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடு, தமிழக மக்களின் கண்களாக இருக்க வேண்டும்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மூன்று தலைவர்களும், காணொளி மூலம் கூடங்குளம் அணுஉலையின் அடுத்தடுத்த அலகுகளை இந்திய நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கின்றனர். அணுசக்தி தேவையா, தேவையில்லையா எனும் விவாதத்தில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இருக்கலாம்; பாதுகாப்பு ஏற்பாடுகளில் அப்படி இருவேறு கருத்துகளுக்கு இடம் இருக்க முடியாது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்நிகழ்ச்சியில் பேசுகையில், “கூடங்குளம் அணுஉலை குறித்து மக்களின் சந்தேகங்களைப் போக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டது. மக்களின் அச்சங்களைப் போக்க அரசு நடவடிக்கை எடுத்தது. கூடங்குளம் அணுஉலை உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. கூடங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் வளர்ச்சிக்கு தமிழக அரசு உறுதுணையாக உள்ளது” என்றெல்லாம் பேசியிருக்கிறார். இதே ஜெயலலிதா, கடந்த 2013 அக்டோபர் 13 அன்று, தூத்துக்குடியில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது “கூடங்குளம் அணுமின் நிலையத்தைப் பொறுத்தவரை, உள்ளூர் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசு நிச்சயம் செயல்படும். இந்தப் பிரச்சினையில் உங்களில் ஒருத்தியாக நான் இருப்பேன்” என்று குறிப்பிட்டது இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டியது. இத்தகைய பின்னணியில் முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய சமீபத்திய உரையில் குறிப்பிட்டிருக்கும் ‘பாதுகாப்பு உறுதி’ எந்த அளவுக்கு உண்மையானது?
கள யதார்த்தம்
இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் 1989-ம் ஆண்டிலேயே “கூடங்குளம் அணுஉலையிலிருந்து வரக்கூடிய அணுக் கழிவுகளை அணுஉலை பக்கத்திலேயே சேமிக்காமல், தொலைதூரத்தில் சேமிக்க வழி காண வேண்டும்” என்று கூறியுள்ளது. 2013-ல் உச்ச நீதிமன்றமும்கூட இதை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உத்தரவிட்டது. ஆனால், இன்றுவரை நடக்கவில்லை. ‘‘உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகளில் இரு பரிந்துரைகளை நிறைவேற்ற நீண்ட காலம் தேவைப்படும்’’ என்று அணுசக்தித் துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நிறைவேற்றப்படாத இந்த இரண்டு பரிந்துரைகளும் அணுஉலையில் உள்ள ரியாக்டரின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பானவை. இத்தகைய பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை.
நான் பல முறை சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன், ‘‘தமிழக அரசு அமைத்ததாகக் கூறும் நிபுணர் குழுவின் அறிக்கையைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று. இதுநாள் வரை தாக்கல் செய்யப்படவில்லை. என்ன காரணம்? கூடங்குளம் அணுஉலையை எதிர்த்துப் போராடும் மக்களிடம் அந்தக் குழு எவ்விதக் கருத்துக்கேட்பு நிகழ்ச்சியையும் நடத்தவில்லை; மக்களின் அச்சங்களைப் போக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் யாரும் ஈடுபடவில்லை. கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றி வாழும் மக்களுக்குப் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி எதுவும் இந்நாள் வரை அளிக்கப்படவில்லை. அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிக்க அருகில் ஒரு பன்னோக்கு மருத்துவமனைகூட அமைக்கப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சு எந்த அளவுக்கு உண்மைச் சூழலைப் பிரதிபலிக்கிறது?
பாதுகாப்பு ஓட்டைகள்
2014 அக்டோபரில் கூடங்குளம் அணுஉலையில் உள்ள முதல் அலகில் டர்பைன் என்று சொல்லக்கூடிய விசையாழியின் கத்திகள் உடைந்து, அவ்விசையாழிகள் கடுமையாகச் சேதமாகியுள்ளன என்று தகவல்கள் வெளியாயின. இதற்குச் சில மாதங்களுக்கு முன்பு அணுஉலையின் வால்வில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக ஆறு ஊழியர்கள் பலத்த காயத்துக்கு இலக்கானார்கள் என்ற தகவல் வெளியானது. ஜூலை 2013-ல் கூடங்குளம் அணுஉலையின் முதல் அலகு செயல்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகும்கூட, ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம் அரைகுறையாகவே செயல்பட்டுவந்தது. இந்த இரண்டு வருடங்களில் கூடங்குளம் அணுஉலை பழுதடைந்து 32 முறை இயக்கம் நின்றிருக்கிறது என்கிறார்கள்.
இந்திய அணுசக்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், “கூடங்குளம் அணுஉலையில் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்கள் மற்றும் பாகங்கள் தரமற்றவை” என்று பகிரங்கமாக அறிவித்தார். “கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது” என்றும் “அணுஉலை உபயோகத்துக்கு ஊழல்கள் நிறைந்த ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட அனைத்தும் தரமற்ற கருவிகள்” என்றும் “உடனே அலகு மூன்று மற்றும் நான்கைத் தொடங்குவதற்கான பணிகளை நிறுத்த வேண்டும்” என்றும் இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ராம்தாஸ் தலைமையிலான குழு பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பியது.
விஸ்வநாதனின் சப்பைக்கட்டு
சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, கூடங்குளம் அணுஉலையின் செயல்பாடுகள் தொடர்பாக ஆகஸ்ட் 7, 2014 அன்று நான் சில முக்கியமான குறைகளைச் சுட்டிக்காட்டினேன். அதற்குப் பதிலளித்த அன்றைய எரிசக்தித் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், “சந்தேகப்படுவதற்கோ அல்லது ஐயமுறுவதற்கோ ஏதுமில்லை” என்று சப்பைக்கட்டு கட்டினார்.
அக்டோபர் 23, 2013 அன்று கூடங்குளம் அணுஉலை மின்இணைப்பில் சேர்க்கப்பட்டது முதல் 840 நாட்களில் 372 நாட்கள் மட்டுமே இயங்கியுள்ளது என்பது தமிழக முதல்வரின் கவனத்துக்கு வரவில்லையா அல்லது தெரிந்தும் மறைக்கிறாரா?
கூடங்குளம் அணுசக்தி நிலையத்தைச் சுற்றியுள்ள 30 கி.மீ. சுற்று எல்லையில் 10 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். அணுஉலையில் விபத்து ஏற்பட்டால், இந்த மக்களை வெளியேற்றிக் காப்பாற்றுவதற்கு உருப்படியான திட்டம் ஏதும் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழக மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வுரிமை சம்பந்தப்பட்ட அளவில், இந்த அணுஉலையின் பாதுகாப்புத் தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது. உலகிலேயே மிக அதிக பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை அணுஉலை விபத்துகள்தான். மேலை நாடுகளில் இவற்றைக் கண்காணிப்பதற்குச் சுயேச்சை அதிகாரமுள்ள அமைப்புகள் உள்ளன. இந்தியாவில் அப்படி எதுவும் இல்லை. எனவே, அணுஉலைகளின் பாதுகாப்பு என்பது மர்மமான இரும்புத் திரையாகவே உள்ளது.
மத்திய - மாநில அரசுகள் வளர்ச்சி என்ற மந்திரச் சொல்லால் எல்லோர் வாய்களையும் அடைத்துவிட முடியாது. கூடங்குளம் அணுஉலை இந்திய அணுசக்தித் துறையின் பெருமிதங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தைப் பொறுத்த அளவில் அது பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிராதாரப் பிரச்சினை. கூடங்குளம் அணுஉலையில் அடுத்தடுத்த அலகுகளை விரிவாக்கும் முன் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுப்பது முக்கியம். இந்த விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடு தமிழக மக்களின் கண்களாக இருக்க வேண்டுமே ஒழிய; மத்திய அரசின் வாயாக ஒலிக்கக் கூடாது!
கட்டுரையாளர் - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்,
தொடர்புக்கு: jawahirinfo@gmail.com
கேன்ஸர் விழிப்புணர்வு நிகழ்ச்சி




அதிரையில் 29/08/2016 கேன்ஸர் வளிப்புனர்வு நிகழ்ச்சி --கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி? Cancer Awareness Program

இந்த நூற்றாண்டில் மனித சமூகத்துக்குப் பெரும் சவாலாக உள்ள நோய்களுள் மிக முக்கியமானது ‘கேன்ஸர்’ எனும் புற்றுநோயாகும். இந்தியாவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

புற்றுநோய் என்றால் என்ன?

மனித உடலின் வளர்ச்சிக்கும் இயக்கத்துக்கும் இன்றியமையாதவையாகத் திகழும் ‘செல்கள்’ எனும் உயிரணுக்களைச் செயற்படவிடாமல் தடுக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்கின்றோம்.

கேன்ஸர் எனும் புற்று நோயின் உற்பத்தியைப் பற்றிக் கட்டாயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு குழந்தை பிறந்து வளர்கிறதென்றால் குறிப்பிட்ட கணக்கில் அக்குழந்தையினுள் செல்கள் பிறந்து, தன் பணியினை முடித்துக்கொண்டு உயிரிழந்துவிடும். உயிரிழந்த செல்கள் அழிந்துகொண்டிருக்கும்போதே புதிய செல்கள் பழைய செல்களின் அளவைவிடக் கூடுதலாகப் பிறந்துவிடும். பழைய செல்களின் இறப்பும் அவற்றின் அழிவும் புதிய செல்களின் உற்பத்தியும்தான் குழந்தையையும் அதன் தலை முடியையும் நகங்களையும் விரைந்து வளர்க்கின்றன. பழைய செல்களின் இறப்பைவிட, புதிய செல்கள் குறைவாக உற்பத்தி ஆவதையே நாம் ‘முதுமை’, ‘நினைவாற்றல் குறைவு’, ‘தடுமாற்றம்’ என்கின்றோம்.

ஆரோக்கியமான உடல் நலம் உள்ள ஒருவருக்கு, எத்தனை செல்கள் புதிதாகப் பிறக்கின்றன தெரியுமா?

ஒரு வினாடிக்கு சுமார் 20,00,000 (2 மில்லியன்) செல்கள்! வளரும் இளைஞர் ஒருவரின் உடலில் அழியும் செல்களை ஈடுகட்டவும் புத்தியக்கத்திற்கும் பிறப்பெடுக்கும் செல்களின் ஒரு நாள் எண்ணிக்கை சுமார் 222-242 பில்லியன். உயிரை இழந்து அழியும் செல்களின் ஒரு நாள் எண்ணிக்கை 50-70 பில்லியன்.

இவ்வாறாக, உயிரிழந்து அழியவேண்டிய செல்கள், அழிந்துவிடாமல் சிலரின் உடலில் தங்கிவிடுகின்றன. வீணான, தேவையற்ற இந்த செல்கள்தாம் ‘கேன்ஸர் செல்கள்’.

கேன்ஸர் எனும் புற்று நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் யாவை?
எந்த வகையான உணவுப் பொருட்களைத் தவிர்த்துக்கொண்டால் …?
எந்தப் பொருட்களைப் பயன்படுத்தாவிட்டால் …?
எந்த வகை வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டால் … புற்று நோயிலிருந்து தப்பிக்கும் சாத்தியங்கள் உள்ளன?

என்பது குறித்து ஆழமான விழிப்புணர்வு முகாம் ஒன்றை அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாடு செய்துள்ளது. அதன் விபரங்கள்:

இடம் : பவித்ரா திருமண மண்டபம், ECR, அதிராம்பட்டினம்.
காலம் : 29.8.2016 திங்கட்கிழமை, காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை
காணொளி விளக்கம் : டாக்டர் M. முஹம்மது இப்ராஹீம்.
MS., MRCS (UK)., DNB., FMAS., FAIS.

நிகழ்ச்சியின் இறுதியில் புற்று நோய் குறித்த உங்கள் ஐயங்களைக் கேள்விகளாகக் கேட்டுத் தெளிவடையலாம்.

சிறந்த கேள்விகள் கேட்கும் மூவரைத் தேர்ந்தெடுத்து, பரிசுகள் வழங்கப்படும்.

பெண்களுக்குத் தனி இட வசதி உண்டு.

டாக்டரிடம் தனியாகச் சிறப்பு ஆலோசனை பெற முன் பதிவு செய்துகொள்ளுங்கள்: 9043727525.

Tuesday, August 23, 2016

கேன்ஸர் விழிப்புணர்வு நிகழ்ச்சி




அதிரையில் 29/08/2016 கேன்ஸர் வளிப்புனர்வு நிகழ்ச்சி --கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி? Cancer Awareness Program

இந்த நூற்றாண்டில் மனித சமூகத்துக்குப் பெரும் சவாலாக உள்ள நோய்களுள் மிக முக்கியமானது ‘கேன்ஸர்’ எனும் புற்றுநோயாகும். இந்தியாவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

புற்றுநோய் என்றால் என்ன?

மனித உடலின் வளர்ச்சிக்கும் இயக்கத்துக்கும் இன்றியமையாதவையாகத் திகழும் ‘செல்கள்’ எனும் உயிரணுக்களைச் செயற்படவிடாமல் தடுக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்கின்றோம்.

கேன்ஸர் எனும் புற்று நோயின் உற்பத்தியைப் பற்றிக் கட்டாயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு குழந்தை பிறந்து வளர்கிறதென்றால் குறிப்பிட்ட கணக்கில் அக்குழந்தையினுள் செல்கள் பிறந்து, தன் பணியினை முடித்துக்கொண்டு உயிரிழந்துவிடும். உயிரிழந்த செல்கள் அழிந்துகொண்டிருக்கும்போதே புதிய செல்கள் பழைய செல்களின் அளவைவிடக் கூடுதலாகப் பிறந்துவிடும். பழைய செல்களின் இறப்பும் அவற்றின் அழிவும் புதிய செல்களின் உற்பத்தியும்தான் குழந்தையையும் அதன் தலை முடியையும் நகங்களையும் விரைந்து வளர்க்கின்றன. பழைய செல்களின் இறப்பைவிட, புதிய செல்கள் குறைவாக உற்பத்தி ஆவதையே நாம் ‘முதுமை’, ‘நினைவாற்றல் குறைவு’, ‘தடுமாற்றம்’ என்கின்றோம்.

ஆரோக்கியமான உடல் நலம் உள்ள ஒருவருக்கு, எத்தனை செல்கள் புதிதாகப் பிறக்கின்றன தெரியுமா?

ஒரு வினாடிக்கு சுமார் 20,00,000 (2 மில்லியன்) செல்கள்! வளரும் இளைஞர் ஒருவரின் உடலில் அழியும் செல்களை ஈடுகட்டவும் புத்தியக்கத்திற்கும் பிறப்பெடுக்கும் செல்களின் ஒரு நாள் எண்ணிக்கை சுமார் 222-242 பில்லியன். உயிரை இழந்து அழியும் செல்களின் ஒரு நாள் எண்ணிக்கை 50-70 பில்லியன்.

இவ்வாறாக, உயிரிழந்து அழியவேண்டிய செல்கள், அழிந்துவிடாமல் சிலரின் உடலில் தங்கிவிடுகின்றன. வீணான, தேவையற்ற இந்த செல்கள்தாம் ‘கேன்ஸர் செல்கள்’.

கேன்ஸர் எனும் புற்று நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் யாவை?
எந்த வகையான உணவுப் பொருட்களைத் தவிர்த்துக்கொண்டால் …?
எந்தப் பொருட்களைப் பயன்படுத்தாவிட்டால் …?
எந்த வகை வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டால் … புற்று நோயிலிருந்து தப்பிக்கும் சாத்தியங்கள் உள்ளன?

என்பது குறித்து ஆழமான விழிப்புணர்வு முகாம் ஒன்றை அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாடு செய்துள்ளது. அதன் விபரங்கள்:

இடம் : பவித்ரா திருமண மண்டபம், ECR, அதிராம்பட்டினம்.
காலம் : 29.8.2016 திங்கட்கிழமை, காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை
காணொளி விளக்கம் : டாக்டர் M. முஹம்மது இப்ராஹீம்.
MS., MRCS (UK)., DNB., FMAS., FAIS.

நிகழ்ச்சியின் இறுதியில் புற்று நோய் குறித்த உங்கள் ஐயங்களைக் கேள்விகளாகக் கேட்டுத் தெளிவடையலாம்.

சிறந்த கேள்விகள் கேட்கும் மூவரைத் தேர்ந்தெடுத்து, பரிசுகள் வழங்கப்படும்.

பெண்களுக்குத் தனி இட வசதி உண்டு.

டாக்டரிடம் தனியாகச் சிறப்பு ஆலோசனை பெற முன் பதிவு செய்துகொள்ளுங்கள்: 9043727525.

Monday, August 22, 2016

மரண அறிவிப்பு
மதுக்கூர் மெயின்ரோடு சேக் மைதீன் அவர்களின் தகப்பனர் ம.செ.செய்யது இஸ்மாயில் அவர்கள் இன்று 22/08/2016 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Saturday, August 20, 2016

நெடுஞ்சாலை துறை அறிவிப்பு

பட்டுக்கோட்டை நெடுஞ்சாலை துறை உட்கோட்டத்திற்கு சொந்தமான மதுக்கூர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் கட்டிடங்கள்,கடைகள் ஆகியவை இருந்தால் வரும் 25/08/2016 அன்றுக்குள்ளாக அப்புறப்படுத்தி கொள்ளவேண்டும்.
இல்லையெனில் நெடுஞ்சாலைத்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டு அதற்குண்டான தொகை வசூல் செய்து கொள்ளப்படும் என மதுக்கூர் பகுதியில் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

Thursday, August 18, 2016

பாரக்கல்லாஹ்

மதுக்கூர் பேரூர் கழக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக பொருளாளர் சகோதரர் Er.முகம்மது இலியாஸ் தம்பதியருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

தாயும்,சேயும் நலமுடன் வாழவும்.ஈமான் நிறைந்த குழந்தையாக வாழவும்,வளரவும் துவா செய்கின்றோம்.

Wednesday, August 17, 2016

பட்டுக்கோட்டை வட்டம்(தாலுகா)
இரண்டாக பிரிக்கப்படுகின்றது.


பட்டுக்கோட்டை வட்டத்தை பட்டுக்கோட்டை கிழக்கு என்றும் பட்டுக்கோட்டை மேற்கு என்றும் இரண்டு வட்டமாக பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மதுக்கூர்,பெரியக்கோட்டை,துவரங்குறிச்சி,தம்பிக்கோட்டை மற்றும் அதிராம்பட்டிணம் ஆகிய சரகங்கள் உள்ளடக்கி பட்டுக்கோட்டை கிழக்கு வட்டம் என ஒரு வட்டமாகவும்.
பட்டுக்கோட்டை,நம்பிவயல்,திருச்சிற்றம்பலம்,குறிச்சி மற்றும் ஆண்டிக்காடுசரகங்களை உள்ளடக்கி பட்டுக்கோட்டை மேற்கு என ஒரு வட்டமாகவும் பிரிக்க திட்டமிட்ப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.

அப்படி பிரிக்கப்படும் பட்சத்தில் ஒரு தாலுகா பட்டுக்கோட்டையை தலைமையாக கொண்டும் மற்றொன்று மதுக்கூர் அல்லது அதிராம்பட்டிணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என சொல்லப்படுகின்றது.

Sunday, August 14, 2016

மதுக்கூரில் மதுக்கடை முற்றுகை தற்காலிகமாக நிறுத்தம்

மதுக்கூர் முக்கூட்டுச்சாலை அதிரை ரோட்டில் பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள்,பொது மக்களுக்கு மிகவும் இடையூறாக குடியிருப்பு பகுதியில் இருக்கின்ற அரசு மதுபானக்கடையை (டாஸ்மாக் கடை எண் : 7870) அகற்றக்கோரி இன்று 14/08/2016 மாலை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு  பின்னர் முற்றுகைப்போராட்டமாக மாற்றியமைக்கப்பட்டது.இதன் காரணமாக இன்று காலை முதலே பரபரப்புடன் மதுக்கூர் காணப்பட்டது.காவல் துறை தீவிர கண்காணிப்புகளிலும் ஈடுபட்டனர்.











நேற்றுவரை மெத்தனமாக இருந்த அரசு நிர்வாகம்.மதுக்கூரில் நடைபெறும் மதுக்கடை முற்றுகை போராட்டத்திற்கு டெல்டா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுருந்து மனிதநேய சொந்தங்கள்,தமுமுக செயல்வீரர்கள் கலந்து கொள்ள இருப்பதாக உளவுத்துறை தகவலை அடுத்து இன்று மதியம் 1:00 மணியளவில் போராட்டம் வேண்டாம் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு ஏற்படுத்தலாம் என்று அரசு துறை சமாதான முயற்சிகள் மேற்கொண்டதின் பெயரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அமைதி பேச்சுவார்த்தையில் மூன்று மாதத்திற்குள்ளாக முக்கூட்டுச்சாலை மதுக்கடை இடமாற்றம் செய்யப்படும் என எழுத்துபூர்வமாக கொடுத்ததின் பெயரில் இன்று நடைபெறுவதாக இருந்த மதுக்கூர் முக்கூட்டுச்சாலை மதுக்கடை முற்றுகைப்போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகின்றது.

பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டவர்கள்.
அரசு தரப்பு :பட்டுக்கோட்டை வட்டாட்சியர்,மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளர்,பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர்,மதுக்கூர் காவல் ஆய்வாளர்,கிராம அதிகாரி ஆகியோர்,

தமுமுக & மமக தரப்பு : மமக மாவட்ட செயலாளர் எம்.கபார்,நகர செயலாளர்கள் ராசிக் அகமது (மமக),பவாஸ் (தமுமுக)நகர பொருளாளர் முகம்மது இலியாஸ்,நகர துணை நிர்வாகிகள் அப்பாஸ்,புரோஸ்,முஜிபுர் ரஹ்மான்,அமீரக நிர்வாகிகள் முஜிபுர் ரஹ்மான்,நிசார் அகமது,சிராஜுதீன்,மாவட்ட துணைச்செயலாளர் ஜபருல்லா மற்றும் மனிதநேய சொந்தங்கள் கலந்துகொன்டார்கள்.

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !



Thursday, August 11, 2016

மதுக்கடையை அகற்றக்கோரி.
அறவழி ஆர்ப்பாட்டம்
மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் அதிரை ரோட்டில் பொதுமக்களுக்கும்,குடியிருப்புவாசிகளுக்கும் மிகவும் இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி (டாஸ்மாக் கடை எண் : 7870)தமிழ்நாடு முஸ்லி முன்னேற்றக்கழகத்தின் அரசியல் பிரிவு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வருகின்ற 14/08/2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணியளவில் (இன்ஷா அல்லாஹ்)
மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் நடைபெறும் அறவழி ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு கண்ட உரை நிகழ்த்த உள்ளார்கள்.
மதுவுக்கு எதிராய் போராடும் போராளிகளை போராட்டக்களத்திற்கு அழைக்கின்றது.
மனிதநேய மக்கள் கட்சி
மதுக்கூர்
தொடர்புக்கு : 9715858328,85081 02036,97891 55480


கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...