இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Sunday, July 28, 2013

மதுக்கூரில் ஸ்டேட் பாங்க் SBI

மதுக்கூர் மாநகரில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி என்று இதுவரை இந்தியன் வங்கி மட்டுமே செயல்பட்டுவந்தது.மதுக்கூர் வளர்ந்து வரும் தொழில் நகரம் என்பதை உணர்ந்த தனியார் வங்கிகள் தங்களின் கிளைகளை போட்டிப்போட்டு மதுக்கூரில் திறக்கின்றார்கள்,மேலும் விசாலமான இடத்திற்க்கு இடமாற்றங்களும் செய்கின்றார்கள்.இந்நிலையில் மதுக்கூருக்கு அரசுடமையாக்கப்பட்ட மேலும் ஒரு வங்கி வேண்டும் என பலரும் பல வகைகளில் முயற்சி மேற்கொண்டார்கள்.குறிப்பாக மதுக்கூர் .காம் வாசகர்கள் சார்பாகவும் அதன் நிறுவனரான சகோதரர் எம்.முகம்மது இஷாக் அவர்களும் அவரின் பங்குக்கு முயற்சிகள் மேற்கொண்டார்.

அனைவரின் முயற்சிகளின் அடிப்படையில் பாரத் ஸ்டேட் பாங்கு தனது கிளையினை மதுக்கூர் மெயின்ரோட்டில் அறிவழகன் மருத்துவமனை எதிரில் நாளை29/07/2013 திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு அதன் பொதுமேலாளர் திருச்சிராப்பள்ளி  திரு அருண் அகர்வால் அவர்கள் திறந்து வைக்கின்றார்கள்.



Thursday, July 25, 2013

மதுக்கூரில் இஃப்தார்

மதுக்கூரில் பெரியப்பள்ளிவாசல் முதல் மஸ்ஜித் அல் ஹராப் அல் நயீமி வரை உள்ள ஆறு பள்ளிவாசல்களில்  (மஸ்ஜித் அல் ஹராப்  நீங்கலாக)  ஐந்து பள்ளிவாசலில் இஃப்தார் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.நாம் சென்ற வருடம் குறிப்பிட்டதை போன்று ஆரம்ப காலத்தில் மதுக்கூர் பெரியப்பள்ளிவாசலில் ஜாப்னமஸ் நண்பர்கள் குழுவினை சார்ந்த சகோதரர்கள் இஃப்தார் பணியினை ஒழுங்குபடுத்தினர்கள்.அதன் பின்னர் அத்தகும்மாஸ் குருப்ஸ் மேலப்பள்ளியிலும்,MCA குருப்ஸ் மஸ்ஜித் நூரிலும் இஃப்தார் பணிகளை தொய்வின்றி நன்மையினை எதிர்பார்த்து சிறப்பாக செய்கின்றார்கள்.இப்போது மஸ்ஜித் இஃக்லாஸ் பள்ளிவாசலில் சில இளைஞர்களும்,மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் குவாலிட்டி குருப்ஸ் மற்றும் இளைஞர்கள் இணைந்து சிறப்பாக இஃப்தார் பணிகளை செய்து வருகின்றார்கள்.

அனைத்து பள்ளிவாசல்களிலும் மாணவர்களின் கூட்டம் நிரம்பி வழிகின்றது.மஸ்ஜித் தக்வா பள்ளியில் பெரும்பாலும் இஃப்தாருக்கு உணவும் அளிக்கப்படுவதாக தகவல்.மேலும் மேலப்பள்ளிக்கு அதிகம் எதுவும் (சமூசா,வடை,பழவகைகள்) வருவதில்லை என்ற தகவலும் உள்ளது.

எது எப்படியிருந்தாலும் இளைஞர்கள் இஃப்தார் பணிகளில் போட்டி போட்டு சேவை செய்கின்றார்கள்.நோன்பாளிகளுக்கு நோன்பு திறப்பதற்க்கு எல்லா வகையிலும் உதவி புரிகின்றார்கள்.இவர்களின் சேவையினை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அருள் புரியட்டும்.

குறிப்பு : இஃப்தாருக்கு களைக்கட்டும் கூட்டம் இரவு தொழுகைக்கு இல்லை என்ற ஏக்கமும் உள்ளது.










Wednesday, July 24, 2013

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....                                    

யா அல்லாஹ் !
உன்னையே நாங்கள் வணங்குகின்றோம்    
உன்னிடமே உதவியும் தேடுகின்றோம்...

அன்பிற்கினிய சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

கடந்த 18 ஆண்டுகளாக தமிழக முஸ்லிம்களின் பிரச்சனைகளை எதிர்கொண்டு,முஸ்லிம்களின் உரிமைகளை காக்க பலவிதமான போராட்டங்களின்ல் ஈடுபட்டு வரும் சமுதாய பேரியக்கம் தமுமுக என்பதை அனைவரும் அறிவீர்கள்.

தமிழக முஸ்லிம்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த சமூக நீதியின் சுடரொளியாம்,சமுதாய கலங்கரை விளக்கமாய் ஒளி வீசும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் - மதுக்கூர் கிளையின் சார்பாக மாநில தலைமையின் சிறப்பான வழிகாட்டலின்படி பல்வேறு மக்கள் நலப்பணிகளை சிறப்பாக செய்து வருகின்றோம்.(எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே)

எங்களின் சமூக,சமுதாய பணிகள் தொய்வின்றி செயல்பட இப்புனிதமிகு ரமலானில் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை அள்ளிக்கொடுத்து எங்கள் பணிகள் சிறக்க உதவி புரியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

எங்கள் பணிகளில் சில :





  • ஆம்புலன்ஸ் சேவை     








  • சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டங்கள்.







  •  வரதட்சனைக்கு எதிரான தெருமுனைப்பிரச்சாரம்



  • உயிரினும் மேலான எம்பெருமனார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுப்படுத்த எண்ணிய அமெரிக்காவைக்கண்டித்து ஆர்பாட்டம்.








  •     சிறையில் உள்ள அப்பாவி முஸ்லிம்களை

              மீட்டெடுப்பதற்காக தொடர் போராட்டம்.

  • முஸ்லிம்களுக்கு தனி இட ஓதுக்கீடு போராட்டம்


 


  • பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம்






  • மதுவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள்







  • மக்கள் நல பணிகளுக்காக அரசை தூண்டும் விதமாக தொடர்ந்து குரல் கொடுத்தல்  .      








  • உலகளவிய இனப்படுகொலைகளை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி




  • திருமணச்சட்டத்தில் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு பெறுவதற்கான போராட்டம்.








  • ஊழலுக்கு எதிரான போராட்டம்








  • விவாசாயிகளின் உரிமைப்போராட்டங்களில் பங்கு பெறுதல்.









  • சகோதர இயக்கங்களுடன் இணைந்து போராட்டக்களம்








  • அனைத்து சமுதாய மக்களுக்கும் எந்நேரத்திலும் உதவக்கூடிய இரத்த தானம்.




  • சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி  



இதுபோன்ற எண்ணற்ற மக்கள் பணிகள் தொடர்ந்து நடைபெற


வாரீ வழங்கிடுவீர்
வலிமையுடன் செயல்பட...
தமுமுகவின் மக்கள் பணிகள் தொடர்ந்திட.....

அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக)
எம்.எஸ்.எம்.மோட்டார்ஸ் எதிரில்-லக்கி ஹார்டுவேர்ஸ் அருகில்
மெயின்ரோடு
மதுக்கூர் 614903
தஞ்சாவூர் மாவட்டம்.


அமீரக தொடர்புக்கு

A.அஜீம்                               0097155 4465088
E.S.M.முகம்மது பைசல் 0097150 8511842
K.அப்துல் ரெஜாக்          0097155 8137763
M.Y.சேக் ஜலால்             0097150 4202842
A.பஷீர் அகமது (அபுதாபி) 0097150 6950912

வங்கி கணக்கு விபரம் (Lakshmi Vilas Bank)

A.Bousul Rahman & M.Haja Mohideen.
LVB A/C No : 045730 10000 26440
IFSC CODE : LAVB 0000457
Madukkur Branch




   



Saturday, July 20, 2013

மதுக்கூர் ஜாமிஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டிக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

மதுக்கூரில் செயல்படும் முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்கம்,மிப்தாஹுல் இஸ்லாம் சங்கம் இரண்டும் இணைந்து ஜமாத் பொறுப்பாளர்களை தேர்வு செய்வது என்பது மரபு.இதன்படி புதிய நிர்வாகிகள் தேர்வு பற்றி முறைப்படி நேற்று மதுக்கூரில் உள்ள இருசங்கங்களில் சார்பாக நோட்டீஸ் வெளியிடப்பட்டு வீடுதோறும் வினியோகம் செய்யப்பட்டது.



Friday, July 19, 2013

மதுக்கூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

மதுக்கூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் மழை இன்றி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றார்கள்.எனவே நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காட்டிய வழியில் தொழுகை நடத்தலாம் என தீர்மானித்த மதுக்கூ தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையினர் மஸ்ஜித் இஃக்லாஸ் பள்ளிவாசல் வளாகத்தில் இன்று (19/07/2013) ஜும்மா தொழுகைக்கு பின்னர் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது.முன்னதாக பள்ளியின் இமாம் மெளலவி அன்வாருல் அன்சாரி அவர்கள் மழைத்தொழுகையின் சிறப்புக்களைப்பற்றியும்,பேணுதலைப்பற்றியும் எடுத்துரைத்தார்.

மழை தொழுகையில் ஜும்மாவிற்க்கு வருகைதந்த அனைவரும் கலந்து கொண்டார்கள்.பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.





நன்றி :mtctonline@gmail.com

Tuesday, July 16, 2013

இப்படியும் ஓர் சேவை...மாஷா அல்லாஹ்.


தஞ்சாவூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) சார்பாக தஞ்சாவூரில் மருத்துவமனைகளில் உள்ள நோன்பு நோற்கும் முஸ்லிம்களுக்கு சஹர் உணவு ஏற்பாடுகள் செய்து மருத்துவமனைக்கே கொண்டு சென்று டோர் டெலிவரி செய்கின்றார்கள்.இப்பணி ஓர் சிறந்த பணியாகும்.தங்களுக்கு அறிந்த நோன்பாளிகள் தஞ்சாவூர் மருத்துவமனைகளில் தங்கி இருந்தால் இச்செய்தியினை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.அவர்கள் நோன்பு நோற்க பயன் உள்ளதாக இருக்கும்.

இப்பணி தொய்வின்றி நடைபெற பொருளாதார உதவிகள் தேவைப்படுகின்றது.நாள் ஒன்றுக்கு ரூ 6000 வீதம் செலவாகின்றது என்கின்றார்கள் இதன் பொருப்பாளர்கள்.

இச்சேவைக்காக உதவி செய்யவிரும்புவர்கள் தொடர்பு கொள்க :
அப்துல் ஜப்பார் (மாவட்ட தலைவர் தமுமுக ) 944 326 4203
வக்கீல் 904 350 1404
கபார் (மமக பேரூராட்சி கவுன்சிலர் மதுக்கூர்) 986 585 1693

 

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...