இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, February 27, 2012

நியமனக்குழு உறுப்பினர் தேர்தல்














மதுக்கூர் பேரூராட்சி நியமன குழு உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் இன்று 27/02/2012 திங்கட்கிழமை காலை பேரூராட்சி அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் நடைப்பெற்றது.

15 வார்டு உறுப்பினர்களை கொண்ட மதுக்கூர் பேரூராட்சியில் நியமன குழு தேர்தலை 13 வது திமுக கவுன்சிலர் சுரேஷ் அவர்கள் புறகணித்தார்.மீதமுள்ள 14 கவுன்சிலர்களில் 9வதுவார்டு கவுன்சிலரும், மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயலாளருமாகிய சகோதரர் மு.கபார் அவர்கள் அதிமுக ஆதரவுடனும்,14 வது வார்டு கவுன்சிலர் சகோதரர் மணிவேல் அவர்கள் திமுக சார்பிலும் போட்டியிட்டனர்.இத்தேர்தலில் சகோதரர் கபார் அவர்களுக்கு 8 வாக்குகள் கிடைத்தது.சகோதரர் மணிவேல் அவர்களுக்கு 6 வாக்குகள் கிடைத்தது.

8 வாக்குகள் பெற்ற சகோதரர் M.கபார் நியமன குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். (எல்லா புகழும் அல்லாஹுக்கே )

Thursday, February 23, 2012

தஞ்சாவூரில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்



19 /2/2012 அன்று கும்பகோணம் தாஜ் மகாலில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட தலைவர் முஹம்மது செல்லப்பா தலைமை தாங்கினார். மமக மாவட்ட செயலாளர் உமர் ஜஹாங்கீர் வரவேற்புரை நிகழ்த்தினார். மமக அமைப்பு செயலாளர் மதுக்கூர் ராவ்த்தர்ஷ, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மமக மாநில பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி சிறப்புரை ஆற்றினார். மாவட்ட தமுமுக செயலாளர் ராசுதீன் செயல் தொகுப்புரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் புலவர் அப்துர்ரஹ்மான் நன்றியுரை ஆற்றினார்.

இதில் பெண்கள் உள்ளிட்ட 300 பேர் கலந்து கொண்டனர்.

தகவல்:- தமுமுக இணையதளம் : www.tmmk.in

சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் ஒரு ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி கைது




2007 பிப்ரவரி 12. சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் என்கிற ரயிலில் வைக்கப்பட்ட குண்டுவெடித்து 68 பேர் பலியாயினர். தில்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அன்றைய பிரதமர் வாஜ்பாய், நல்லெண்ண திட்டமாக விட்ட விரைவு ரயில்தான் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ். இக்குண்டுவெடிப்பு தொடர்பாக முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், மகாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்புப் படை (ATS) தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரேயின் புலனாய்வு காரணமாக மக்கா மஸ்ஜித் (ஹைதராபாத்), அஜ்மீர் தர்கா (ராஜஸ்தான்), மலேகான் (மகாராஷ்ட்ரம்) குண்டுவெடிப்புகளில் சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டனர்.

தகவல்:- தமுமுக இணையதளம் :- www.tmmk.in

சங்கரன்கோவில் கலவரம்: நடந்தது என்ன??



சங்கரன்கோவிலில் கடந்த 7.2.2012 அன்று இரவு 7.30 மணியளவில் காளியம்மன் கோவில் கொடை விழா ஊர்வலம் நடைபெற்றது. கழுகுமலை சாலையில் ஜும்ஆ பள்ளிவாசலின் அருகில் ஊர்வலம் வந்தபொழுது பள்ளிவாசல் முன்பு பட்டாசுகளை வெடித்தும், மேளதாளங்கள் அடித்தும் பள்ளிவாசலில் உள்ளே செருப்புகள் மற்றும் கற்கள் எறிந்தும் வன்முறையில் தலித் சமுதாய மக்களில் சிலர் ஈடுபட்டு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர்.



இவ்விஷயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட, பாதுகாப்புக்காக மூன்று போலீசார் மட்டுமே வந்துள்ளனர். இதனிடையே ஊர்வலம் பஜார் வீதிகளுக்குச் சென்று திரும்பியபோது இரவு சுமார் 8.30 மணியளவில் மீண்டும் பட்டாசுகள் வைத்து வெடித்துள்ளனர். போலீசார், அவர்களைக் கண்டித்தபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார்களையும் பின்பு இஷா தொழுகை முடித்துவிட்டு வெளியில் வந்த முஸ்லிம்களையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். முஸ்லிம்களில் சிலர் பதிலடி தர, இது கலவரமாக வெடித்தது.

இந்தக் கலவரத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 50 கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகளில் உள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் கார்கள், வேன்கள், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மற்றும் ஊனமுற்றோருடைய வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதில் சங்கரன்கோவில் காயிதே மில்லத் 5 மற்றும் 6ம் தெருவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர்.


சில முஸ்லிம்கள் குடியிருப்பதற்கு வீடுகள் இல்லாமல், தலித்துகளின் தெருக்களில் வசித்து வந்தனர். கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தேவேந்திரகுல மக்களால் அவர்கள் அடித்து விரட்டப்பட்டனர். வீட்டுக்குள் பயந்து உள்ளே இருந்த மக்களையும் வெளியே வரவழைப்பதற்காக ஈவிரக்கமின்றி விஷப்பூச்சி மருந்துகளை வீட்டுக்குள் தெளித்து வெளியில் விரட்டப்பட்டுள்ளனர்.

சுமார் இரண்டரை மணி நேரம் கலவரம் நீடித்தது. இரவு சுமார் 11 மணியளவில் கலவரத் தடுப்பு போலீசார் வந்து கலவரத்தைக் கட்டுப்படுத்தினர்.

இதனையொட்டி இருதரப்பிலிருந்தும் 19 நபர்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்பில்லாத திவான் அலி என்ற படிக்கும் மாணவரையும், மனநோயாளியான செய்யது அலி என்ற வாலிபரையும் கைது செய்தனர்.

டி.ஐ.ஜி. வரதராஜு, எஸ்.பி. விஜயேந்திரபிதலி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இத்தகவல் கிடைத்ததும் தமுமுக மாவட்டத் தலைவர் எஸ். மைதீன் சேட்கான், மாவட்டச் செயலாளர்கள் நயினார் முஹம்மது, திவான் மைதீன், துணைச் செயலாளர் சேகண்ணா, விவசாய அணி செயலாளர் சுலைமான் ஆகியோர் உடனடியாக சங்கரன்கோவில் விரைந்தனர். மாநில நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

மூத்த தலைவர்கள் பேரா. ஜவாஹிருல்லாஹ், செ. ஹைதர் அலி, தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, மமக பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி ஆகியோர் உடனடியாக நெல்லை சரக டி.ஜி.ஜி. மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகிய காவல்துறை உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, கலவரத்தைக் கட்டுப்படுத்துமாறும், கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் சுமார் 10.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்து எஸ்.பி. மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர். இரவு முழுவதும் சமுதாய மக்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைக்க வழிவகை செய்தனர்.


இந்தக் கலவரத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துகள் நாசமாயின. இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் கடையடைப்பு நடத்தி முஸ்லிம்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனால் தொடர்ந்து மூன்று நாட்கள் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் கடந்த 10.02.2012 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் இருசமுதாய மக்களும், ஆர்.டி.ஓ. இளங்கோ தலைமையில் கூடினர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அமைதியான சூழ்நிலை தற்போது நிலவிவருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் நெல்லை மேற்கு மாவட்ட தமுமுக தலைவர் எஸ். மைதீன் சேட்கான் கலந்துகொண்டார்.



சங்பரிவாருக்கு தொடர்பு?

சங்கரன்கோவில் கலவரத்தில் ஆர்எஸ்எஸ் கும்பல் ஈடுபட்டது வெட்டவெளிச்சமாகியுள்ளது. கலவரத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டோரில் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் உள்ளதாக ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் பிரிவான பாஜக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜகவின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில், சங்கரன்கோவில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டவர்களில் அன்புராஜ், வழக்கறிஞர் சாக்ரடீஸ், மாவட்ட நிர்வாகிகள் செந்தூர்பாண்டியன், பழனிச்சாமி, ஆறுமுகசாமி ஆகியோர் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் சங்கரன்கோவில் பாஜக வேட்பாளர் தேர்வுக்காக சென்றவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



களத்தில் தமுமுக நிர்வாகிகள்

சங்கரன்கோவிலில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நெல்லை மேற்கு மாவட்ட தமுமுக தலைவர் எஸ். மைதீன் சேட்கான், மமக மாவட்டச் செயலாளர் நயினார் முஹம்மது, மாவட்டப் பொருளாளர் பொட்டபுதூர் மீரான், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், மமக மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன் ஆகியோர் சங்கரன்கோவிலில் மூன்று நாட்களும் தங்கியிருந்து கலவரம் மீண்டும் நடைபெறாமல் அமைதி நிலவ பாடுபட்டனர்.

தகவல்:- தமுமுக இணையளதம் : www.tmmk.in

Wednesday, February 15, 2012

மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகியா​க மதுக்கூர் ராவ்த்தர் ஷா​ தேர்வு

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம. தமீமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை



மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகளாக பின்வருவோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்

துணைத் தலைவர் பொறியளார் என். ஷபியுல்லாஹ் கான்

துணைப் பொதுச் செயலாளர் எஸ். எஸ் ஹாரூன் ரஷீத்

அமைப்பு செயலாளர்க்ள்

எஸ் சலீமுல்லாஹ் கான்

சத்தியமங்கலம் சையத் அஹ்மது பாரூக்

மதுரை முகைதீன் உலவி

மதுக்கூர் ராவ்த்தர் ஷா


















தலைமை நிலையச் செயலாளர்

வழக்குறைஞர் பி.எம். ஆர். சம்கதீன்

Tuesday, February 14, 2012

இந்திய தூதரக அதிகாரிகளுடன் தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு!

சவுதி அரேபிய வரலாற்றில் முதன்முறையாக, ரியாதிலுள்ள இந்திய தூதரகம், இந்திய தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பற்றி உரையாடுவதற்காக நிகழ்ச்சி ஒன்றை 02.02.12 ஏற்பாடு செய்திருந்தது.தூதரக அதிகாரிகள் சந்திப்பில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ரியாத் மத்திய மண்டல நிர்வாகிகள் ஹுஸைன் கனி, நூர், ஆஷிக் உள்ளிட்டோரும்,

தம்மாமிலிருந்து பிலால், அஜ்மல் மற்றும் அப்துல் காதர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.அந்நிகழ்ச்சியில், த மு மு க கிழக்கு மற்றும் மத்திய மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு தாங்கள் அரேபிய மண்ணில் செய்து வரும் சமூக நலப்பணிகள் குறித்து எடுத்துக் கூறியதுடன், அதில் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், அவற்றைத் தீர்ப்பதற்கு இந்திய தூதரக அதிகாரிகள் மட்டத்தில் தேவைப்படும் ஆலோசனை மற்றும் உதவிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.தமிழக தொழிலாளர்கள் தங்களது பிரச்சனைகளை சுலபமாக எடுத்துரைப்பதற்கு வசதியாக, தமிழ் பேசும் ஊழியர்களை தூதரகம் நியமிக்க வேண்டும் என்றும், தொழிலாளர் ஒப்பந்த நகலை தூதரகம் பெற்று, அவை மீறப்படும் பட்சத்தில் சவுதி அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.குறிப்பாக, தொழிலாளர் பிரச்சனைகளான, ஹுரூப் (வேலைக்கு அமர்த்தியவரிடமிருந்து வெளியேறி விடுதல்) தொழிலாளர் ஒப்பந்தத்தை மீறுதல், குடியேற்ற/ குடிவிலக நடைமுறைகள் போன்ற முக்கியமான விடயங்கள் குறித்த கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.மேலும், சிறை அல்லது தடுப்புக்காவலில் உள்ள இந்தியர்களின் விடுதலை குறித்தும், அவர்களுக்கித் தேவையான சட்ட ஆலோசனைகளை அளிப்பது குறித்தும், தூதரகத்தில் இந்திய தொழிலாளர்கள் நலன் மற்றும் அவர்களின் வாக்குரிமை குறித்தும் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன.அத்துடன், கிழக்கு பிராந்தியத்தில், மிக அதிக அளவில் பணியாற்றிக்கொண்டிருக்கும் இந்திய தொழிலாளர்கள், தங்களது பிரச்சனைகளுக்காக ஒவ்வொரு முறையும் அதிகபட்சமாக 800 கி.மீ பயணப்பட்டு வருவதை தவிர்க்க கிழக்கு பிராந்தியமான தம்மாமில் ஏன் ஒரு, துணை தூதரகத்தை அமைக்கக்கூடாது என்ற ஆலோசனையும் த மு மு க நிர்வாகிகளால் முன் வைக்கப்பட்டது.த மு மு க நிர்வாகிகளின் கருத்துக்களை கவனமுடன் செவிமடுத்த தூதரக அதிகாரிகள், கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும், அத்துடன் த மு மு க நிர்வாகிகளும் தங்களுடைய பிரதிநிதிகள் மூலமாக தூதரக அதிகாரிகளுடன் ஒத்துழைத்து அவர்களின் பணியை சுலபமாக்க உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.இறுதியாக இந்திய தூதரின் செயலாளர் திரு. மனோகர் ராம் த மு மு க நிர்வாகிகளுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டமைக்காக நன்றி கூறினார்

Monday, February 13, 2012

அலிகார் முஸ்லிம் பல்கலையில் சேர்க்கை அறிவிப்பு

அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 2012-13ம் கல்வியாண்டில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.டெக்., பி.ஆர்க்., பி.ஏ. (ஹானர்ஸ்), பி.எஸ்சி (ஹானர்ஸ்), பி.காம். (ஹானர்ஸ்), எம்.ஏ., எம்.எஸ்சி.,. எம்.காம்., ஆகியப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க ஆன்லைன் மற்றும் கல்வி நிறுவனத்திலும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பட்டப்படிப்பிற்கும் தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதன்படி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...